முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயரதிகாரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர் பாதுகாப்புக் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு

உயரதிகாரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர் பாதுகாப்புக் கேட்டு மனு,


திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்  பதிலளிக்க உத்தரவு

வனத் துறைக்குச் சொந்தமான நிலத்தை அரசு உயரதிகாரி ஒருவர் பினாமிகள் மூலமாக அபகரித்துள்ளதாகப் பொது நல மனு தாக்கல் செய்து வழக்குத் தொடர்ந்தவர் காவல் பாதுகாப்புக் கோரித் தொடர்ந்த வழக்கில் திண்டுக்கல்  மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம் பூலாத்தூர் கிராமம்  ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல  மனுவில், "கொடைக்கானல் வட்டம் மலைப்பகுதியில் வனத் துறைக்குச் சொந்தமான 1.85 ஏக்கர் நிலத்தை அப்போது பணியிலிருந்த  குன்னூர் தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநரான அம்பலவாணன் அவரது  பினாமிகள் மூலமாக வாங்கியதாக 

குற்றம் சாட்டி தாக்கல் செய்த பொதுநலமனு 



வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வனத் துறைக்குச் சொந்தமான அந்த நிலத்தை அரசு கையகப்படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டது. இந்த முறைகேட்டுக்கு அப்போதைய தின்டுக்கல் பதுவு மாவட்டம் வத்தலக்குண்டு சார் பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார். அதற்காக போலி வில்லங்க சான்றிதழ்களும் தயாரிக்கப்பட்டன. அது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் மீது விசாரணை நடத்திய குற்றப்பிரிவு புலணாய்வுக் காவல்துறை ஆவண மோசடி, ஆள்மாறாட்டம் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்த நிலையில், அம்பலவாணனின் தூண்டுதலின் பேரில் சிலர் புகாரத தாரர் மீது பொய்யான புகார் கொடுத்து வருவதாகவும். அந்தப் புகார்களின் மீது சம்பந்தப்பட்ட பொதுநல வழக்கு மனுதாரருக்கு  காவல் நிலையத்தில் சம்மன் அனுப்பியுள்ளதாகவும் .அவருக்கு  மிரட்டல்கள் வருவதாகவும். எனவே, அவருக்கு  காவல்துறையினர்  பாதுகாப்பு வழங்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு  உத்தரவிட வேண்டுமெனக் கோரியிருந்தார். அந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், தாண்டிக்குடி காவல் ஆய்வாளர் ஆகியோர் இந்த மனுவுக்கு 2 வாரங்களுக்குள் பதில் தருமாறு உத்தரவிட்டார். இதில் பொது நீதி யாதெனில்எங்கு நோக்கினும் ஊழல் குற்றங்கள் பேருந்து ரயில் மற்றும் இதர இடங்களில் அக்கிரமங்கள் சட்ட விதி மீறல்கள்  நடைபெறுவதை நேரில் புகார் கொடுக்க பொதுமக்கள் அஞ்சும் நிலைக்கு காவல்துறையில் உள்ள சில ஊழல் வாதிகள் மூலம் பொய வழக்குகள் வருமே என்ற பயம் 90 சதவீத மக்களிடம் உள்ளது ஆகவே கண்முன் நடக்கும்  நிகழ்வைக் கண்டும் காணாதது போல் ஏன் நமக்கு இந்த வம்பு சாட்சியாகவும் காவல்துறையினர் அழைக்கும் போது செல்லவேண்டிய நிலை எந்த நேரத்லும் வரச் சொல்லுவார்கள் நம்மையும் எதிரியாக பாவிக்கும்  நிலை என்று கருதி செல்வது தான் ஊழல் ஒழிப்பு கண் இழந்த நிலையே உள்ளது , இதனால் குற்றங்கள் அதிகரிக்கவே செய்யும்  வீடியோ ஆதரங்களைக்கொண்டு தக்க நடவடிக்கை மேற்கொள்வதும் அவசியமாகிறது, குற்றம்  நிகழும் இடத்துக்கு காவல்த்துறை வந்தாலும் அங்கு சாட்சியம் சொல்ல யாரும் முன் வராத சூழலே  உள்ளது நீதி கண் விழிப்பது குற்றங்களைத் தடைசெய்யும்



கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களை எல்லாம் எவ்வளளோ அழகா பாதுகாக்கிறார்கள் என்ற குற்றசயசாட்டும் பலமாக வருகிறது ஒரு நேர்மையான, முழு அதிகாரம் கொண்ட விஜிலென்ஸ் ஆணையரை நியமிக்காமல் ஊழல்வாதிகளை காப்பாற்றும் பகுதி நேர  ஆணையராக நியமித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்,

புகார்களை விசாரணைக்கு எடுக்காமல் காலம் தாழ்த்துவதும், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் புகார்கள் மீது விசாரணை நடத்த அனுமதி தராமல் இழுத்தடிப்பதும்  என  ஊழல்களை மூடி மறைக்கும்  ஊழல்வாதிகளை பாதுகாக்க தனி கவனம் செலுத்துகிற நிலை மாற வேண்டும். 

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பேசிய பேச்செல்லாம் காத்தோடு போயாச்சு. ஊழல் வழக்குகளை தடுத்து ஊழல் செய்த உயர் அதிகாரிகளை காப்பாற்ற ஒரு IAS அதிகாரிகள் குழு தமிழகத்தில் செயல்படுகிறதா என்ற அச்சம் ஊழல் தடுக்க முன்வருவோருக்கு இருக்கும் பயம் 

ஊழல் அதிகாரிகளைக் காப்பாற்றி ஊழலை வளர்ப்பதற்கு காரணமில்லாத  விஜிலென்ஸ் நிர்வாகம் தேவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...