முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயரதிகாரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர் பாதுகாப்புக் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு

உயரதிகாரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர் பாதுகாப்புக் கேட்டு மனு,


திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்  பதிலளிக்க உத்தரவு

வனத் துறைக்குச் சொந்தமான நிலத்தை அரசு உயரதிகாரி ஒருவர் பினாமிகள் மூலமாக அபகரித்துள்ளதாகப் பொது நல மனு தாக்கல் செய்து வழக்குத் தொடர்ந்தவர் காவல் பாதுகாப்புக் கோரித் தொடர்ந்த வழக்கில் திண்டுக்கல்  மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம் பூலாத்தூர் கிராமம்  ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல  மனுவில், "கொடைக்கானல் வட்டம் மலைப்பகுதியில் வனத் துறைக்குச் சொந்தமான 1.85 ஏக்கர் நிலத்தை அப்போது பணியிலிருந்த  குன்னூர் தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநரான அம்பலவாணன் அவரது  பினாமிகள் மூலமாக வாங்கியதாக 

குற்றம் சாட்டி தாக்கல் செய்த பொதுநலமனு 



வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வனத் துறைக்குச் சொந்தமான அந்த நிலத்தை அரசு கையகப்படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டது. இந்த முறைகேட்டுக்கு அப்போதைய தின்டுக்கல் பதுவு மாவட்டம் வத்தலக்குண்டு சார் பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார். அதற்காக போலி வில்லங்க சான்றிதழ்களும் தயாரிக்கப்பட்டன. அது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் மீது விசாரணை நடத்திய குற்றப்பிரிவு புலணாய்வுக் காவல்துறை ஆவண மோசடி, ஆள்மாறாட்டம் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்த நிலையில், அம்பலவாணனின் தூண்டுதலின் பேரில் சிலர் புகாரத தாரர் மீது பொய்யான புகார் கொடுத்து வருவதாகவும். அந்தப் புகார்களின் மீது சம்பந்தப்பட்ட பொதுநல வழக்கு மனுதாரருக்கு  காவல் நிலையத்தில் சம்மன் அனுப்பியுள்ளதாகவும் .அவருக்கு  மிரட்டல்கள் வருவதாகவும். எனவே, அவருக்கு  காவல்துறையினர்  பாதுகாப்பு வழங்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு  உத்தரவிட வேண்டுமெனக் கோரியிருந்தார். அந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், தாண்டிக்குடி காவல் ஆய்வாளர் ஆகியோர் இந்த மனுவுக்கு 2 வாரங்களுக்குள் பதில் தருமாறு உத்தரவிட்டார். இதில் பொது நீதி யாதெனில்எங்கு நோக்கினும் ஊழல் குற்றங்கள் பேருந்து ரயில் மற்றும் இதர இடங்களில் அக்கிரமங்கள் சட்ட விதி மீறல்கள்  நடைபெறுவதை நேரில் புகார் கொடுக்க பொதுமக்கள் அஞ்சும் நிலைக்கு காவல்துறையில் உள்ள சில ஊழல் வாதிகள் மூலம் பொய வழக்குகள் வருமே என்ற பயம் 90 சதவீத மக்களிடம் உள்ளது ஆகவே கண்முன் நடக்கும்  நிகழ்வைக் கண்டும் காணாதது போல் ஏன் நமக்கு இந்த வம்பு சாட்சியாகவும் காவல்துறையினர் அழைக்கும் போது செல்லவேண்டிய நிலை எந்த நேரத்லும் வரச் சொல்லுவார்கள் நம்மையும் எதிரியாக பாவிக்கும்  நிலை என்று கருதி செல்வது தான் ஊழல் ஒழிப்பு கண் இழந்த நிலையே உள்ளது , இதனால் குற்றங்கள் அதிகரிக்கவே செய்யும்  வீடியோ ஆதரங்களைக்கொண்டு தக்க நடவடிக்கை மேற்கொள்வதும் அவசியமாகிறது, குற்றம்  நிகழும் இடத்துக்கு காவல்த்துறை வந்தாலும் அங்கு சாட்சியம் சொல்ல யாரும் முன் வராத சூழலே  உள்ளது நீதி கண் விழிப்பது குற்றங்களைத் தடைசெய்யும்



கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களை எல்லாம் எவ்வளளோ அழகா பாதுகாக்கிறார்கள் என்ற குற்றசயசாட்டும் பலமாக வருகிறது ஒரு நேர்மையான, முழு அதிகாரம் கொண்ட விஜிலென்ஸ் ஆணையரை நியமிக்காமல் ஊழல்வாதிகளை காப்பாற்றும் பகுதி நேர  ஆணையராக நியமித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்,

புகார்களை விசாரணைக்கு எடுக்காமல் காலம் தாழ்த்துவதும், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் புகார்கள் மீது விசாரணை நடத்த அனுமதி தராமல் இழுத்தடிப்பதும்  என  ஊழல்களை மூடி மறைக்கும்  ஊழல்வாதிகளை பாதுகாக்க தனி கவனம் செலுத்துகிற நிலை மாற வேண்டும். 

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பேசிய பேச்செல்லாம் காத்தோடு போயாச்சு. ஊழல் வழக்குகளை தடுத்து ஊழல் செய்த உயர் அதிகாரிகளை காப்பாற்ற ஒரு IAS அதிகாரிகள் குழு தமிழகத்தில் செயல்படுகிறதா என்ற அச்சம் ஊழல் தடுக்க முன்வருவோருக்கு இருக்கும் பயம் 

ஊழல் அதிகாரிகளைக் காப்பாற்றி ஊழலை வளர்ப்பதற்கு காரணமில்லாத  விஜிலென்ஸ் நிர்வாகம் தேவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,