முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஒரு வாரக் கொண்டாட்டம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஒரு வாரக் கொண்டாட்டம் தேசிய நவீன ஓவியக் காட்சிக் கூடத்தில் இன்று தொடங்கியது


சர்வதேச மகளிர் தினத்தை தேசிய நவீன ஓவியக் காட்சிக் கூடம் மார்ச் 7 முதல் 12 வரை  ஒரு வார காலத்திற்குக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் மையப்பொருள் “அனைவருக்கும் டிஜிட்டல்: பாலின சமத்துவத்துக்கான புதிய கண்டுபிடிப்பும், தொழில்நுட்பமும்” என்பதாகும்.

“புகைப்படக் கலையைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பிலான கண்காட்சியுடன் இன்று இந்தக் கொண்டாட்டங்கள் தொடங்கின. இந்தக் கண்காட்சியில் 60க்கும் அதிகமான சமகால பெண் புகைப்படக் கலைஞர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.


பெண் ஓவியர்களுக்கான ஓவியப் பயிலரங்கிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்படம் திரையிடுதல், உரைகள், குழந்தைகளுக்கான சிறப்புப் புத்தக வெளியீடு போன்றவற்றுக்கும் அருங்காட்சியகம் ஏற்பாடு செய்துள்ளது.2023 சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தையொட்டி 10 நகரங்களில் பல்வேறு போட்டிகளுக்கு கேலோ இந்தியா ஏற்பாடு செய்துள்ளது ; பிரபல விளையாட்டு வீராங்கனைகள் பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்

2023 சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தையொட்டி 10 நகரங்களில் பல்வேறு போட்டிகளுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறையின் சார்பில்  கேலோ இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேச நிகழ்வு ஒன்றைக் கொண்டாட இத்தகைய விளையாட்டு முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இதனை நடத்த மத்திய அமைச்சகம் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.



தேசியத் தலைநகர் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் மார்ச் 10 அன்று நடைபெறும் தொடக்க நிகழ்வில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் கலந்துகொள்வார். இந்தப் போட்டித் தொடர் மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறும். இந்த நிகழ்வுகளில் சுமார் 15,000 விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்பார்கள்.

இந்திய ஹாக்கி வீராங்கனை ராணி, குத்துச்சண்டை வீராங்கனை நிக்கத் ஸரின் உட்பட நாட்டின் பிரபல விளையாட்டு வீராங்கனைகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் பெண்களை உற்சாகப்படுத்தும் வீடியோக்களை பதிவு செய்திருப்பதோடு, இவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

கோகோ, மல்யுத்தம், வாள்வீச்சு, வில்வித்தை, நீச்சல், கூடைப்பந்து, ஜூடோ, தடகளப் போட்டிகள், யோகாசனம், வூஷு உள்ளிட்ட விளையாட்டுக்கள் இந்தப் போட்டிகளில் இடம் பெறும். மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க இயலாத விளையாட்டு வீராங்கனைகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதும், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற வாய்ப்பு இல்லாத இடங்களிலும் விளையாட்டுப் போட்டிகளை  உறுதி செய்வதும் இந்தப் போட்டித் தொடரின் முக்கிய நோக்கமாகும்மகளிருக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாலின சமத்துவம் குறித்த சர்வதேச மகளிர் தின கருத்தரங்கு



பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் குறித்த அமர்வு

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் ஆகியவை, சென்னைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் கல்லூரி, அம்பத்தூர் ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாலின சமத்துவம் என்ற 3 நாள் கருத்தரங்கு 2023 மார்ச் 6, முதல் அம்பத்தூரில் நடைபெற்று வருகிறது.

இந்தக் கருத்தரங்கின் 2-வது நாளான இன்று, பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமாகக் கலந்துகொண்டனர். இன்றைய இரண்டாம் அமர்வில் மகளிருக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான சட்ட விழிப்புணர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பார்வையற்ற வழக்கறிஞர் கற்பகம் கலந்துகொண்டு பெண்கள் பாதுகாப்புக்கென உள்ள சட்டங்கள் குறித்து விளக்கினார். போக்சோ சட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டது, விசாகா சட்டம் எப்படி இயற்றப்பட்டது என்பது பற்றிய தகவல்களை அவர் தெரிவித்தார்.



தெரிந்த விவரங்களை மறைப்பதும், போக்சோ சட்டத்தின்படி ஆறுமாத தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.  பணியிடங்களில் பாலின ரீதியாக நடக்கும் துன்புறுத்தல்கள் விசாகா சட்டத்தின் கீழ் வரும் என்று கூறிய அவர், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பற்றியும் விளக்கினார்.  மாணவ மாணவியரின் சட்டம் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் அளித்த வழக்கறிஞர் கற்பகம், எந்தக் கட்டத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆணவக் கொலைகளும், கொலை தான் என்று குறிப்பிட்ட அவர், இந்திய சட்டங்களின்படி, விவாகரத்து உடனடியாக கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை தெரிந்து கொண்டு கருக்கலைப்பு செய்வதை தடுப்பதற்காக பிரத்யேக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மகளிர் அதிகாரம் அளித்தலில் ஒரு தடை என்ற தலைப்பில், சென்னை மாநகரக் காவல்துறை துணை ஆணையர்  டாக்டர் ஜி வனிதா உரையாற்றினார்.  குடும்பத்தில் பலவீனமான குழந்தைகளைத் தாயார் நன்கு கவனித்து உணவூட்டுவது   போல, சமுதாயத்தில் பலவீனமானவர்களாகக் கருதப்படும் பெண்களின் பாதுகாப்புக்கு அதிக சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவம் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும், ஒரு காலத்தில் வீட்டுக்குள் அடங்கிக் கிடந்த பெண்கள் இப்போது அதிக அளவில் வெளியே வந்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும், வேலைகளுக்கும் சென்று வருவதாக அவர் குறிப்பிட்டார். 



இருப்பினும், பாலின சமத்துவம் என்பது இன்னும் ஏட்டளவில்தான் உள்ளது என்று கூறிய அவர், மகளிர் அதிகாரம் அளித்தலை சமுதாயம் தான், குறிப்பாக ஆண்கள்தான் மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பெருங்குற்றங்கள் எவை எவை என்று பட்டியலிட்ட டாக்டர் ஜி வனிதா, திராவக வீச்சு, வரதட்சணைக் கொலை, ஆணவக்கொலை, பாலின துன்புறுத்தல், கடத்தல், பெண்களைக் கடத்துதல், பெண்களைக் கேலி செய்தல், இணையவழிக் குற்றங்கள், பின்தொடர்ந்து துன்புறுத்துதல், ஆபாச படங்கள் ஆகியவை இந்தப் பெரிய குற்றங்களில் அடங்கும் என்று தெரிவித்தார். அந்தக் குற்றங்களின் தன்மையை விவரித்த அவர், பெண்களைப் பற்றிய சமுதாயத்தின் மனநிலையில் மாறுதல் ஏற்படவேண்டும் என்று வலியுறுத்தினார். 2021-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, தேசிய குற்ற விகிதம் 4,28,278-ஆக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், பெண்களுக்கு ஆதரவளிப்பதை வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.   



மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் குறைவு என்று தெரிவித்த அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக கூடுதல் தலைமை இயக்குநர் தலைமையில் தனிக்குழு  இருப்பதாகத் தெரிவித்தார். பெண்கள் அதிகாரம் பெற்றவர்களாக மாறுவதற்கு உள்ள தடையை தூக்கி எறிய வேண்டும் என்றும் அதற்கு ஆண்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் மாணவ மாணவியரின் சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார்.பெண்களுக்கு அறிவு சார்ந்த பாலியல், இனப்பெருக்க உரிமைகள் முக்கியத்துவம் வாய்ந்தது: திருமதி கீதா இளங்கோவன்

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு சமூகக் கட்டமைப்பில் மாற்றம் அவசியம்: டாக்டர் ரசியா பர்வீன்


பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது ஒவ்வொரு தேசத்திற்கும் இன்றியமையாதது: திருமதி ஷீபா ராணி

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் ஆகியவை சென்னைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டம்  மற்றும் டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் கல்லூரி, அம்பத்தூர் இணைந்து சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்  பாலின சமத்துவம் என்ற 3 நாள் கருத்தரங்கு மார்ச் 6, 2023 முதல் நடைபெற்று வருகிறது.

இந்தக் கருத்தரங்கின் இரண்டாம் நாள் முதல் அமர்வில் மகளிருக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான சட்டங்களும், கொள்கை நடவடிக்கைகளும் என்ற தலைப்பில்   எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான  திருமதி கீதா இளங்கோவன், ராணி  மேரி கல்லூரி, வரலாற்றுத்துறை தலைவர் டாக்டர் ரசியா பர்வீன், அரசு யோகா & இயற்கை மருத்துவமனை, மருத்துவ அதிகாரி திருமதி ஷீபா ராணி ஆகியோர் தங்களது முக்கிய கருத்துக்களை முன்வைத்தனர்.

திருமதி கீதா இளங்கோவன் பேசுகையில், “உடல் உழைப்பிற்கான ஆயுதம்”. பெண்களுக்கு அறிவு சார்ந்த பாலியல், இனப்பெருக்க உரிமைகள் முக்கியத்துவம் வாய்ந்தது.   இதற்கு அறிவியலில் இருந்தே  தொடங்குவது மிகப் பொருத்தமாக இருக்கும். அப்போது தான் அறிவியல் சார்ந்த விஷயங்கள் பற்றி தெளிவுப்படுத்த முடியும். இந்தியாவில், சுமார் 40 சதவீத பெண்களுக்குத் தான் நாப்கின் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பெண்களுக்கு தங்களுக்கான இணையைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை இருக்கின்றதா?  நமது சமூக கட்டமைப்பில் பெண்கள் தங்களுக்கானதை பெறுவதற்கு அடிப்படை உரிமை வழங்கப்படவில்லை. சாதியின் பெயரால் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறது.  பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்படி உரிமை உண்டு. ஆனால் இந்த சமூகம் அதனை வழங்க மறுக்கிறது” என்றார்.

சரி ஆண்களுக்காவது அடிப்படை உரிமை அளிக்கப்படுகின்றதா என்றால் அதுவுமில்லை என்று பொருள்படும் அளவிற்கு இந்த சமூகக் கட்டமைப்பு உள்ளது.  பெண்கள் வயதுக்கு வரும் போது அவர்களின் தாய்மார்கள் தேவையான அடிப்படை ஆலோசனைகளை வழங்கிவிடுகின்றனர்.  ஆனால் ஆண்பிள்ளைகளின் நிலைமை அவ்வாறு இல்லை. எங்காவது ஆண்பிள்ளைகளிடம் அவர்களது தந்தை வயது மாற்றம் குறித்து கலந்துரையாடுகிறார்களா என்றால் இல்லை.  எனவே ஆண் பிள்ளைகளுக்கு உடல் பற்றிய அறிவு சமபந்தமாக முறையாக ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அது போலவே, திருமணம், பாலியல் சார்ந்த அறிவு போன்றவைகள் முறையாக அளிக்கப்பட வேண்டும் என்றார்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இந்த சமூகக் கட்டமைப்பில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்களுக்கு அனைத்து வகையான சமூக அவலங்களையும் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களின்  உணர்வுகளுக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும் என்றார்.

அடுத்ததாக பேசிய ராணி மேரிக் கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் டாக்டர் ரசியா பர்வீன், “மக்களின் மனப்பான்மையிலேயே ஒருதலைப்பட்ச உணர்வு உள்ளது. சாதி, மத அடிப்படையில், பெண்களுக்கு பாலின சமத்துவம் அளிக்கப்படவில்லை. ஒரே மாதிரியான போக்கு மனப்பான்மையுடன், இந்த சமூகம் இருப்பதன் விளைவாக ஆண் – பெண் சமத்துவமின்மை இல்லாத நிலை உள்ளது. பெண்களுக்கு ஞாபக ஆற்றலும், பார்க்கும் திறனும் அபார சக்தி கொண்டது. பெண்களுக்கு தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்தி அவர்களின் முழு ஆற்றலையும் வெளிக்கொணர முடியாத நிலை உள்ளது. பெண்கள் தங்களது கடமைகளை உணர்ந்து அதிக அளவில் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து ஆண்களின் ஆதரவோடு சிறப்பாக செயல்பட முடியும். அதற்கு ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

இன்றைய கால கட்டத்தில் மனிதன் மிகவும் சுயநலப் போக்குடன் செயல்பட்டு வருகிறான்.  அதிகாரம் அளிக்கப்படுவது என்பது ஒவ்வொருவரின் உள் உணர்விலிருந்து வெளிப்பட வேண்டும். அதற்கு  இந்த சமூக கட்டமைப்பில்  மாற்றம் ஏற்பட வேண்டும். பெண்கள் தங்களுக்கு எது வேண்டுமோ அதை உறுதிபட கேட்க வேண்டும். 

முதல் அமர்வில் இறுதியாக பேசிய அரசு  யோகா & இயற்கை மருத்துவமனை, மருத்துவ அதிகாரி திருமதி ஷீபா ராணி,  “பெண்களுக்கு அனைத்து வகையிலும் ஏற்படக் கூடிய பிரச்னைகளை, ஆண்கள் நன்கு உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.   பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என்பது ஒவ்வொரு தேசத்திற்கும் மிக அவசியமாகும் என்றார்.பெண்களுக்கு அறிவு சார்ந்த பாலியல், இனப்பெருக்க உரிமைகள் முக்கியத்துவம் வாய்ந்தது: திருமதி கீதா இளங்கோவன்

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு சமூகக் கட்டமைப்பில் மாற்றம் அவசியம்: டாக்டர் ரசியா பர்வீன்

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது ஒவ்வொரு தேசத்திற்கும் இன்றியமையாதது: திருமதி ஷீபா ராணி

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் ஆகியவை சென்னைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டம்  மற்றும் டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் கல்லூரி, அம்பத்தூர் இணைந்து சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்  பாலின சமத்துவம் என்ற 3 நாள் கருத்தரங்கு மார்ச் 6, 2023 முதல் நடைபெற்று வருகிறது.

இந்தக் கருத்தரங்கின் இரண்டாம் நாள் முதல் அமர்வில் மகளிருக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான சட்டங்களும், கொள்கை நடவடிக்கைகளும் என்ற தலைப்பில்   எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான  திருமதி கீதா இளங்கோவன், ராணி  மேரி கல்லூரி, வரலாற்றுத்துறை தலைவர் டாக்டர் ரசியா பர்வீன், அரசு யோகா & இயற்கை மருத்துவமனை, மருத்துவ அதிகாரி திருமதி ஷீபா ராணி ஆகியோர் தங்களது முக்கிய கருத்துக்களை முன்வைத்தனர்.

திருமதி கீதா இளங்கோவன் பேசுகையில், “உடல் உழைப்பிற்கான ஆயுதம்”. பெண்களுக்கு அறிவு சார்ந்த பாலியல், இனப்பெருக்க உரிமைகள் முக்கியத்துவம் வாய்ந்தது.   இதற்கு அறிவியலில் இருந்தே  தொடங்குவது மிகப் பொருத்தமாக இருக்கும். அப்போது தான் அறிவியல் சார்ந்த விஷயங்கள் பற்றி தெளிவுப்படுத்த முடியும். இந்தியாவில், சுமார் 40 சதவீத பெண்களுக்குத் தான் நாப்கின் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பெண்களுக்கு தங்களுக்கான இணையைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை இருக்கின்றதா?  நமது சமூக கட்டமைப்பில் பெண்கள் தங்களுக்கானதை பெறுவதற்கு அடிப்படை உரிமை வழங்கப்படவில்லை. சாதியின் பெயரால் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறது.  பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்படி உரிமை உண்டு. ஆனால் இந்த சமூகம் அதனை வழங்க மறுக்கிறது” என்றார்.

சரி ஆண்களுக்காவது அடிப்படை உரிமை அளிக்கப்படுகின்றதா என்றால் அதுவுமில்லை என்று பொருள்படும் அளவிற்கு இந்த சமூகக் கட்டமைப்பு உள்ளது.  பெண்கள் வயதுக்கு வரும் போது அவர்களின் தாய்மார்கள் தேவையான அடிப்படை ஆலோசனைகளை வழங்கிவிடுகின்றனர்.  ஆனால் ஆண்பிள்ளைகளின் நிலைமை அவ்வாறு இல்லை. எங்காவது ஆண்பிள்ளைகளிடம் அவர்களது தந்தை வயது மாற்றம் குறித்து கலந்துரையாடுகிறார்களா என்றால் இல்லை.  எனவே ஆண் பிள்ளைகளுக்கு உடல் பற்றிய அறிவு சமபந்தமாக முறையாக ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அது போலவே, திருமணம், பாலியல் சார்ந்த அறிவு போன்றவைகள் முறையாக அளிக்கப்பட வேண்டும் என்றார்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இந்த சமூகக் கட்டமைப்பில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்களுக்கு அனைத்து வகையான சமூக அவலங்களையும் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களின்  உணர்வுகளுக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும் என்றார்.

அடுத்ததாக பேசிய ராணி மேரிக் கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் டாக்டர் ரசியா பர்வீன், “மக்களின் மனப்பான்மையிலேயே ஒருதலைப்பட்ச உணர்வு உள்ளது. சாதி, மத அடிப்படையில், பெண்களுக்கு பாலின சமத்துவம் அளிக்கப்படவில்லை. ஒரே மாதிரியான போக்கு மனப்பான்மையுடன், இந்த சமூகம் இருப்பதன் விளைவாக ஆண் – பெண் சமத்துவமின்மை இல்லாத நிலை உள்ளது. பெண்களுக்கு ஞாபக ஆற்றலும், பார்க்கும் திறனும் அபார சக்தி கொண்டது. பெண்களுக்கு தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்தி அவர்களின் முழு ஆற்றலையும் வெளிக்கொணர முடியாத நிலை உள்ளது. பெண்கள் தங்களது கடமைகளை உணர்ந்து அதிக அளவில் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து ஆண்களின் ஆதரவோடு சிறப்பாக செயல்பட முடியும். அதற்கு ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

இன்றைய கால கட்டத்தில் மனிதன் மிகவும் சுயநலப் போக்குடன் செயல்பட்டு வருகிறான்.  அதிகாரம் அளிக்கப்படுவது என்பது ஒவ்வொருவரின் உள் உணர்விலிருந்து வெளிப்பட வேண்டும். அதற்கு  இந்த சமூக கட்டமைப்பில்  மாற்றம் ஏற்பட வேண்டும். பெண்கள் தங்களுக்கு எது வேண்டுமோ அதை உறுதிபட கேட்க வேண்டும். 

முதல் அமர்வில் இறுதியாக பேசிய அரசு  யோகா & இயற்கை மருத்துவமனை, மருத்துவ அதிகாரி திருமதி ஷீபா ராணி,  “பெண்களுக்கு அனைத்து வகையிலும் ஏற்படக் கூடிய பிரச்னைகளை, ஆண்கள் நன்கு உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.   பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என்பது ஒவ்வொரு தேசத்திற்கும் மிக அவசியமாகும் என்றார்.சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் இந்திய தர அமைவனம் சார்பில் “இர

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ் ) அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது

ஒவ்வொரு ஆண்டும், சமூகத்தின் அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் பெண்களின் சாதனைகள் மற்றும் அவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரங்களை அங்கீகரிக்க மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடும் உலகளாவிய தினமாகும். பாலின சமத்துவத்தை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைக்கான அழைப்பையும் இந்த நாள் குறிக்கிறது. பெண்களின் சாதனைகளைக் கொண்டாட அல்லது பெண்களின் சமத்துவத்திற்காக அணிதிரள்வதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகின்றது .

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய தர நிர்ணய அமைவனம் , தென் மண்டல அலுவலகம், சென்னை இன்று மற்றும் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

BIS, இன்று, 07 மார்ச் 2023, VHS (Voluntary Health Services ), பல்நோக்கு ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சென்னை உடன் இணைந்து இரத்த தான முகாமை ஏற்பாடு செய்தது. இந்த இரத்த தான முகாமை ஸ்ரீ யுஎஸ்பி யாதவ், விஞ்ஞானி-F  மற்றும் துணை இயக்குநர் ஜெனரல் (தெற்கு மண்டலம்) தொடங்கி வைத்தார். Smt.G.பவானி, விஞ்ஞானி-E  மற்றும் தலைவர் (சென்னை கிளை அலுவலகம்) அனைத்து ஊழியர்களையும் இரத்த தானம் செய்ய ஊக்குவித்தார். இந்த நிகழ்வில் BIS இன் சுமார் 30 ஊழியர்கள் தங்கள் இரத்தத்தை தானம் செய்தனர்.

நாளையும் , சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு BIS 08 மார்ச் 2023 அன்று ஊழியர்களுக்காக பல்வேறு உள் நிகழ்ச்சிகள்/கலாச்சார நிகழ்ச்சிகள்/விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,