முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமரின் விஸ்வகர்மா திறன் கௌரவிப்பு குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு

‘பிரதமரின் விஸ்வகர்மா திறன் கௌரவிப்பு (பிஎம் விகாஸ் )’ குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நிகழ்த்திய உரை (தமிழாக்கம்)



வணக்கம்!

கடந்த சில நாட்களாக, பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக, ஒவ்வொரு பட்ஜெட்டுக்குப் பிறகும் பங்குதாரர்களிடம் பட்ஜெட் குறித்துப் பேசுவதை நாங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் கூடியவரை விரைவாகவும்  கவனம் செலுத்தும் வகையிலும் பட்ஜெட்டை எவ்வாறு அமல்படுத்த வேண்டும்? பங்குதாரர்கள் என்ன ஆலோசனைகளை வழங்குகிறார்கள்? அவர்களின் பரிந்துரைகளை அரசு எவ்வாறு செயல்படுத்த வேண்டும்? என்பதற்கான சிந்தனை அமர்வுகள் மிக நன்றாக நடக்கின்றன. பட்ஜெட்டுடன் நேரடித் தொடர்புள்ள அனைத்து வர்த்தகம் மற்றும் தொழில்துறையினருடனும் சங்கங்களுடனும் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், பழங்குடியினர், நமது தலித் சகோதர சகோதரிகளுடனும் மற்றும் ஆயிரக்கணக்கான பங்குதாரர்களுடனும் கலந்துரையாடியதில் சிறந்த ஆலோசனைகள் வெளிவந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அரசிற்கும் பயனுள்ள ஆலோசனைகள் கிடைத்துள்ளன. மேலும், இம்முறை பட்ஜெட் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில், பட்ஜெட்டில் என்ன இருந்திருக்க வேண்டும் அல்லது இருந்திருக்கக் கூடாது என்று விவாதிக்காமல், இந்த பட்ஜெட்டை மிகவும் பயனுள்ளதாக மாற்றுவதற்கான வழிகள் குறித்து அனைத்துப் பங்குதாரர்களும் திட்டவட்டமாக விவாதித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

பிரதமரின்  விஸ்வகர்மா திறன் கௌரவிப்புத் திட்டம்  அல்லது சுருக்கமாக  பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் என்பது  இந்த சிந்தனையின் விளைவு. இந்த பட்ஜெட்டில் பிரதமரின் விஸ்வகர்மா திட்ட அறிவிப்பு பரவலான விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது; ஊடகங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நண்பர்களே!

கைவினைஞர்கள், உள்ளூர் கைவினைப் பொருட்களை சிறிய அளவில் உற்பத்தி செய்வதிலும், பொதுமக்களுக்கு அவர்களின் ஈர்ப்பைத் தக்கவைப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் அவர்களின் பங்களிப்பு  சமூகத்தின் தயவில் விடப்பட்டது, மேலும் அவர்களின் பங்கு குறைத்து மதிப்பிடப்பட்டது.

இப்போது  திறன் உள்கட்டமைப்பு அமைப்பை அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப நாம் மாற்றியமைக்க வேண்டும்.  முத்ரா திட்டம்  மூலம் வங்கி உத்தரவாதம் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை அரசு தற்போது வழங்குகிறது. இந்தத் திட்டம் நமது  கைத்தொழில் செய்யும்  நண்பர்களுக்கு அதிகபட்ச நன்மையை உறுதிசெய்ய வேண்டும். நமது டிஜிட்டல் கல்வியறிவு இயக்கங்களில், கைத்தொழில் செய்யும் நண்பர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நண்பர்களே!

இன்றைய கைவினைஞர்களை நாளைய  தொழில்முனைவோராக மாற்றுவதே எங்கள் நோக்கம். இதை மனதில் வைத்து, கவர்ச்சிகரமான வடிவமைப்பு, பேக்கேஜிங் மற்றும் பிராண்டிங் மூலம் அவர்கள் தயாரிக்கும் தயாரிப்புகளை மேம்படுத்தவும் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இதில், வாடிக்கையாளர்களின் தேவைகளும் கவனிக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் உள்ளூர் சந்தையை மட்டுமல்ல, உலகச் சந்தையையும் குறிவைத்து வருகிறோம். இன்று இங்கு கூடியிருக்கும் அனைத்துப் பங்குதாரர்களும் நமது கைவினைஞர் நண்பர்களுடன் கைகோர்த்து, அவர்களின் விழிப்புணர்வை அதிகரித்து, அவர்கள் முன்னேற உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்காக, நீங்கள் அனைவரும் முடிந்தவரை இந்தக்  கைவினைஞர்களுடன் இணைந்திருக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்; மேலும் அவர்களை அணுகி அவர்களின் கற்பனைகளுக்கு சிறகுகளை அளியுங்கள்.

நண்பர்களே!

கைவினைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களை மதிப்புச் சங்கிலியின் ஒரு பகுதியாக மாற்றுவதன் மூலம்தான்  நாம் அவர்களை மேம்படுத்த முடியும். அவர்களில் பலர் நமது எம்எஸ்எம்இ துறைக்குப் பொருட்கள் வழங்குவோராகவும், தயாரிப்பாளர்களாகவும் மாறலாம். கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியை அவர்களுக்கு வழங்குவதன் மூலம், பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக அவர்களை உருவாக்க முடியும். இந்த மக்களை அவர்களின் தேவைகளுடன் இணைப்பதன் மூலம் தொழில்துறை உலகம் உற்பத்தியை அதிகரிக்க முடியும். அவர்களுக்குத் திறன் மற்றும் தரமான பயிற்சியையும் தொழில்துறை வழங்க முடியும்.

நண்பர்களே!

இன்று இணையவழிக் கருத்தரங்கின் கடைசி அமர்வு. இதுவரை, பட்ஜெட்டின் வெவ்வேறு பகுதிகள் குறித்து 12 இணையவழிக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளோம். இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கவுள்ளது. அனைத்து எம்.பி.க்களும் புதிய நம்பிக்கை மற்றும் புதிய ஆலோசனைகளுடன் நாடாளுமன்றத்திற்கு வருவார்கள். பட்ஜெட் நிறைவேற்றப்படும் வரை செயல்பாட்டில் புதிய உற்சாகம் காணப்படும். இந்தச் சிந்தனை அமர்வுகள் தனித்துவமான முயற்சியாகும்; இது ஒரு பயனுள்ள முயற்சி; மொத்த நாடும் ஒவ்வொரு மாவட்டமும் இதனுடன் இணைந்திருக்கின்றன. நேரத்தை ஒதுக்கி இந்த இணையவழிக் கருத்தரங்கை  செழுமைப்படுத்தியவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

இன்று வருகை தந்திருக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இதுவரை இணையவழிக் கருத்தரங்குகளை நடத்தி, அதை முன்னெடுத்துச் சென்ற மற்றும் சிறந்த ஆலோசனைகளை வழங்கிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,