முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகளாவிய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

தில்லியில் முதலாவது உலகளாவிய சிறுதானிய (ஸ்ரீ அன்னா) மாநாட்டை நடத்துவதற்காக பிரதமருக்கு கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி பாராட்டு


புதுதில்லியில் உள்ள புசாவில் முதலாவது உலகளாவிய சிறுதானிய (ஸ்ரீ அன்னா) மாநாட்டை நடத்துவதற்காக  பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று கயானா அதிபர் டாக்டர். முகமது இர்பான் அலி பாராட்டியுள்ளார்.  இந்த மாநாடு உணவுப் பாதுகாப்பின்மை என்ற  உலகின் முதன்மையான சவாலுக்குத் தீர்வு காண்பதில் நெடுந்தொலைவு செல்லும் என்று அவர் கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக  ஐக்கிய நாடுகள் சபை அறிவித்ததை முன்னிட்டு தமது நாட்டில் 200 ஏக்கர் நிலத்தை பிரத்தியேகமாக  சிறுதானிய உற்பத்திக்காக வழங்கியதை கயானாவில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் டாக்டர் இர்பான் அலி தெரிவித்துள்ளார். இந்த அற்புதமான உணவின் பண்ணை உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை இந்தியா வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.


தினை வகையைச் சேர்ந்த சிறுதானியங்கள் விலை குறைவான, சத்தான உணவு என்பதுடன், பருவநிலை மாற்ற மாறுபாடுகளையும் எதிர்க்கும் தன்மை கொண்டதாகும் என்று அவர் கூறியுள்ளார்.  17 கரீபியன் நாடுகளில் சிறுதானிய  உற்பத்தி மற்றும் ஊக்குவிப்பில் அனைத்து உதவிகளையும் வழங்க அவர் உறுதியளித்துள்ளார்.


சிறுதானிய உற்பத்தி, ஏற்றுமதி ஆகிய இரண்டிலும் இந்தியா உலக அளவில்  முன்னணியில் உள்ளது என்று கூறியுள்ள டாக்டர் இர்பான் அலி,  உலக அளவில் இதனைப் பிரபலப்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியாவின் அதிபர்  திருமதி சாஹ்லே-வொர்க் ஜூடே வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோ செய்தியில் , இந்த உலகளாவிய சிறுதானிய  மாநாட்டிற்காக பிரதமர் மோடியை மனதார வாழ்த்தியுள்ளார். மேலும் இது உலக நாடுகளையும், இந்த அதிசயவகை தானிய உற்பத்திக்கான கொள்கை வகுப்பாளர்களையும் ஊக்குவிக்கும் என்று அவர்  கூறியுள்ளார்.

எத்தியோப்பியா போன்ற சஹாரா பிராந்திய  நாட்டின் உணவுப் பாதுகாப்பு சவால்களை மட்டுமல்லாமல், முழு ஆப்பிரிக்கக் கண்டம் மற்றும் உலகம் முழுவதும் இந்த மாநாட்டின் பயன்கள் நீண்ட தூரம் செல்லும் என்று அவர் கூறியுள்ளார். இந்த மாநாட்டின் யோசனைகள் 2030 இன் நிலையான வளர்ச்சி இலக்குகளை வடிவமைக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்  உலகளாவிய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

நினைவுத் தபால்தலை மற்றும் நினைவு நாணயத்தையும் வெளியிட்டார்

டிஜிட்டல் முறையில் இந்திய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) ஸ்டார்ட் அப்களின் தொகுப்பு மற்றும் சிறுதானியங்கள் புத்தகம் (ஸ்ரீ அன்னா) தரநிலைகளை அறிமுகப் படுத்தினார்


ஐ.சி.ஏ.ஆரின் இந்திய சிறுதானியங்கள் ஆராய்ச்சி நிறுவனம் உலகளாவிய சிறந்த மையமாக அறிவிக்கப்பட்டது

"உலகளாவிய சிறுதானியங்கள் மாநாடு உலகளாவிய நன்மைக்கான இந்தியாவின் பொறுப்புகளின் அடையாளமாகும்"

"ஸ்ரீ அன்னா இந்தியாவில் முழுமையான வளர்ச்சிக்கான ஊடகமாக மாறி வருகிறது. இது கிராமம் மற்றும் ஏழைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது"


"ஒரு நபருக்கு மாதந்தோறும் சிறுதானியங்கள் நுகர்வு 3 கிலோகிராமில் இருந்து 14 கிலோகிராமாக அதிகரித்துள்ளது"

"இந்தியாவின் சிறுதானியங்கள் திட்டம் நாட்டின் 2.5 கோடி சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்"

"உலகின் மீதான பொறுப்புக்கும், மனித குலத்திற்கு சேவை செய்வதற்கான உறுதிக்கும் இந்தியா எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது"

"நம்மிடம் உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவு

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று  புது தில்லியில் பி யு எஸ் ஏ IARI வளாகத்தில் உள்ள NASC வின் சுப்ரமணியம் அரங்கில்  உலகளாவிய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த இரண்டு நாள் உலகளாவிய மாநாட்டில் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் மற்றும் பிற பங்குதாரர்களிடையே சிறுதானியங்கள் பற்றிய விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு போன்ற சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) தொடர்பான அனைத்து முக்கியப் பிரச்சினைகள் குறித்த அமர்வுகள் நடைபெறும். சிறுதானியங்களின் மதிப்பு சங்கிலி வளர்ச்சி  தினைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து அம்சங்கள் சந்தை இணைப்புகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்றவை இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.


கண்காட்சி மற்றும் வாங்குபவர் விற்பனையாளர் சந்திப்பு அரங்கையும் பிரதமர் திறந்து வைத்து பார்வையிட்டார். நினைவுத் தபால் தலை மற்றும் நினைவு நாணயத்தையும் அவர் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, டிஜிட்டல் முறையிலான இந்திய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) ஸ்டார்ட்அப்களின் தொகுப்பு மற்றும் சிறுதானியங்களின் (ஸ்ரீ அன்னா) தரங்கள் புத்தகத்தை  பிரதமர் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் சர்வதேசத் தலைவர்கள் தங்கள் செய்திகளை தெரிவித்தனர். எத்தியோப்பியாவின் அதிபர், எச்.இ. சாஹ்லே-வொர்க் ஜூடே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக இந்திய அரசை வாழ்த்தினார். இந்த நேரத்தில் மக்களுக்கு உணவளிக்க சிறுதானியங்கள் விலைகுறைவானது என்பதோடு  சத்தான விருப்ப உணவாகிறது என்று அவர் கூறினார். எத்தியோப்பியா, துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் ஒரு முக்கியமான சிறுதானியம் உற்பத்தி செய்யும் நாடு. சிறுதானியங்களைப் பெருக்குவதற்குத் தேவையான கொள்கைக் கவனத்தை எடுத்துரைக்கவும், அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்பின்படி பயிர்களின் பொருத்தத்தைப் படிப்பதற்காகவும் நிகழ்வின் பயன்பாட்டை அவர் சுட்டிக் காட்டினார்.


கயானாவின் தலைவர் டாக்டர் முகமது இர்ஃபான் அலி, தினைக்கான காரணத்தை ஊக்குவிப்பதில் இந்தியா உலகளாவிய தலைமையை ஏற்றுள்ளது என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் அதன் நிபுணத்துவத்தை உலகின் பிற பயன்பாட்டிற்கு வழங்குவதாகவும் கூறினார். சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டின் வெற்றி SDG களை அடைவதற்கு நீண்ட தூரம் செல்லும் என்று அவர் கூறினார். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் கயானா ஒரு முக்கிய காரணியாக சிறுதானியங்கள் அங்கீகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். கயானா, இந்தியாவுடன் இணைந்து சிறுதானியங்கள் உற்பத்திக்காக 200 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. அதில் உற்பத்திக்கான தொழில்நுட்ப வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை இந்தியா வழங்கும்.

பிரதமர் உரையாற்றுகையில், உலகளாவிய சிறுதானிய மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் உலகளாவிய நன்மைக்கான தேவை மட்டுமல்ல, உலகளாவிய நன்மைக்கான இந்தியாவின் பொறுப்புகளின் அடையாளமாகும் என்றார். தீர்மானத்தை விரும்பத்தக்க முடிவாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் சபையால் 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டது என்பதை மீண்டும் வலியுறுத்தினார். சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை உலகம் கொண்டாடும் வேளையில் இந்தியாவின் பிரச்சாரம் இந்த திசையில் ஒரு குறிப்பிடத்தக்க முனேற்றப் படியாகும் என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.


பல வெளிநாடுகள் மற்றும் இந்தியத் தூதரகங்களுடன் கிராம பஞ்சாயத்து, கிருஷி கேந்திரங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வேளாண் பல்கலைகழகங்களின் தீவிர பங்கேற்புடன் சிறுதானியங்கள் விவசாயம், தினை பொருளாதாரம், சுகாதார நலன்கள் மற்றும் விவசாயிகளின் வருமானம் போன்ற தலைப்புகளில் அமர்வுகள் நடத்தப்படும். ஏறத்தாழ இன்று 75 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். சிறுதானியங்கள் தரநிலைகள் குறித்த புத்தக வெளியீட்டு விழா மற்றும் ICAR இன் இந்திய சிறுதானியங்கள் ஆராய்ச்சி கழகத்தை உலகளாவிய சிறப்பு மையமாகப் பிரகடனம் செய்ததோடு நினைவு நாணயம் மற்றும் தபால்தலையை வெளியிட்டார்.

கண்காட்சியைப் பார்வையிட்டு, ஒரே இடத்தில் சிறுதானியங்கள் விவசாயம் தொடர்பான அனைத்து பரிமாணங்களையும் புரிந்து கொள்ளுமாறு பிரதிநிதிகளைப் பிரதமர் கேட்டுக் கொண்டார். சிறுதானியங்கள் சார்ந்த தொழில்கள் மற்றும் விவசாயத்திற்காக ஸ்டார்ட்அப்களைக் கொண்டு வரும் இளைஞர்களின் முயற்சிக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். "இது சிறுதான்யங்களுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் அறிகுறியாகும்" என்று அவர் கூறினார்.

இந்தியா இப்போது சிறுதான்யங்களை ஸ்ரீ அன்னா என்று அழைப்பதால், சிறுதானியங்கள் இந்தியாவின் அடையாளத்திற்கான முயற்சிகள் குறித்து பிரதமர் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்குத் தெரிவித்தார். ஸ்ரீ அன்னா வெறும் உணவு அல்லது விவசாயம் மட்டும் அல்ல என்பதை அவர் விரிவாகக் கூறினார். இந்தியப் பாரம்பரியத்தை அறிந்தவர்கள் எதற்கும் முன் ஸ்ரீ என்ற முன்னொட்டை வைப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வார்கள். "ஸ்ரீ அன்னா இந்தியாவில் முழுமையான வளர்ச்சிக்கான ஊடகமாக மாறி வருகிறது. அது கிராமம் மற்றும் ஏழைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது". ஸ்ரீ அன்னா - நாட்டின் சிறு விவசாயிகளின் செழிப்புக்கான வாய்ப்புகளைத் திறந்துள்ளது. ஸ்ரீ  அன்னா - கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு ஊட்டச்சத்தின் மூலாதாரம், ஸ்ரீ அன்னா - பழங்குடியின சமூகத்தின் பாராட்டு, ஸ்ரீ அன்னா - குறைந்த தண்ணீரில் அதிகப் பயிர்களைப் பெறுதல், ஸ்ரீ அன்னா - பெரியவர். ரசாயனமற்ற விவசாயத்திற்கான அடித்தளம். ஸ்ரீ அன்னா - பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் பெரும் உதவி" என்று அவர் மேலும் கூறினார்.

'ஸ்ரீ அன்னா'  ஒரு உலகளாவிய இயக்கமாக மாற்றுவதற்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகளைக் குறிப்பிட்ட பிரதமர், 2018 ஆம் ஆண்டில் சிறுதானியங்கள் ஊட்டச்சத்து தானியங்களாக அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். விவசாயிகளுக்கு அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது முதல் ஆர்வத்தை உருவாக்குவது வரை அனைத்து நிலைகளிலும் சந்தைக்கான பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்தியாவில் 12-13  வெவ்வேறு மாநிலங்களில் சிறுதானியங்கள் முதன்மைப் பயிராகப் பயிரிடப்படுவதாகவும் தெரிவித்தார். முன்னர் ஒரு நபர் ஒரு மாதத்திற்கு எடுத்துக் கொண்ட சிறுதானியங்கள் 3 கிலோகிராமுக்கு மிகாமல் இருந்ததாகவும், அதேசமயம் நுகர்வு இன்று 14 கிலோவாக அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். சிறுதானியங்கள் உணவுப் பொருட்களின் விற்பனையும் ஏறக்குறைய 30% அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சிறுதானியங்கள் பற்றிய சமையல்  குறிப்புகளுக்காகவே இயங்கும் சமூக ஊடக சேனல்களைத் தவிர சிறுதானியங்கள் கஃபேக்களின் தொடக்கத்தையும் அவர் குறிப்பிட்டார். “ஒரு மாவட்டம், ஒரு விளைபொருள்” திட்டத்தின் கீழ் நாட்டின் 19 மாவட்டங்களில் சிறுதானியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன” என்று திரு மோடி மேலும் கூறினார்.

இந்தியாவில் சிறுதானியங்கள் உற்பத்தியில் சுமார் 2.5 கோடி சிறு விவசாயிகள் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், அவர்கள் மிகக் குறைந்த நிலத்தையே வைத்திருந்தாலும் பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டார். "இந்தியாவின் சிறுதானியங்கள் இயக்கம் ஸ்ரீ அன்னாவுக்கான பிரச்சாரம் - நாட்டின் 2.5 கோடி விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்" என்று பிரதமர் கூறினார். சுதந்திரத்திற்குப் பிறகு 2.5 கோடி சிறு விவசாயிகள் சிறுதானியங்கள் பயிரிடுவதில் அரசு அக்கறை செலுத்துவது இதுவே முதல்முறை என்று அவர் சுட்டிக்காட்டினார். பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மூலம் சிறுதானியங்கள் தற்போது கடைகளுக்கும் சந்தைகளுக்கும் சென்றடைவதைக் குறிப்பிட்ட பிரதமர், ஸ்ரீ அன்னா சந்தைக்கு ஏற்றம் கிடைக்கும்போது இந்த 2.5 கோடி சிறு விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்றும் அதன் மூலம் கிராமப்புறப் பொருளாதாரம் வலுவடையும் என்றும் எடுத்துரைத்தார். ஸ்ரீ அன்னாவில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் வந்துள்ளதாகவும் கடந்த சில ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான எஃப்பிஓக்கள் முன்வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். சிறு கிராமங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் முதல் வணிக வளாகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் சிறுதானியப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு முழுமையான விநியோகச் சங்கிலி நாட்டில் உருவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜி-20 தலைமைப் பொறுப்புக்கு "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற இந்தியாவின் முழக்கத்தை எடுத்துரைத்த பிரதமர், உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதுவது சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டிலும் பிரதிபலிக்கிறது என்பதை விளக்கினார். "உலகின் மீதான கடமை உணர்வு மற்றும் மனித குலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற உறுதிக்கு இந்தியா எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது" என்று பிரதமர் கூறினார். யோகாவை உதாரணமாகக் கூறிய பிரதமர், சர்வதேச யோகா தினத்தின் மூலம் யோகாவின் பலன்கள் உலகம் முழுவதும் சென்றடைவதை இந்தியா உறுதி செய்துள்ளது என்றார். இன்று உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் யோகா ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும் உலகில் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுர்வேதத்திற்கும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். சர்வதேச சோலார் கூட்டணி குறித்தும் அவர் விளக்கமளித்தார். மேலும் 100 க்கும் மேற்பட்ட நாடுகள் இயக்கத்தில் இணைந்த ஒரு நிலையான உலகை உருவாக்குவதற்கான சிறந்த தளமாக இது செயல்படுகிறது என்று கூறினார். "LIFE பணியை முன்னெடுத்துச் சென்றாலும் அல்லது காலநிலை மாற்ற இலக்குகளை முன்னெடுத்துச் சென்றாலும் இந்தியா தனது பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெறுகிறது. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு உலகளாவிய நல்வாழ்வை முன்னுக்குக் கொண்டுவருகிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்று இந்தியாவின் 'சிறுதானியங்கள் இயக்கத்தில்' இதேபோன்ற தாக்கத்தை காணலாம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விளையும் சோளம், கம்பு, ராகி, சாமை, கங்கினி, சீனா, கோடோன், குட்கி, குட்டு போன்ற ஸ்ரீ அன்னாவின்  உதாரணங்களைத் தந்த பிரதமர், சிறுதானியங்கள் இந்தியாவின் வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக இருந்ததாகக் கூறினார். இந்தியா தனது விவசாய நடைமுறைகள் மற்றும் ஸ்ரீ அன்னா தொடர்பான நூற்றாண்டு அனுபவங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்த திசையில் ஒரு நிலையான நடைமுறையை உருவாக்க இங்குள்ள நட்பு நாடுகளின் விவசாய அமைச்சர்களை அவர் கேட்டுக் கொண்டார். மேலும் ஒரு புதிய விநியோகச் சங்கிலியை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சிறுதானியங்களின் காலநிலையை எதிர்க்கும் தன்மையை எடுத்துரைத்த பிரதமர், பாதகமான காலநிலைகளிலும் அவற்றை எளிதாக உற்பத்தி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். உற்பத்தி செய்வதற்கு ஒப்பீட்டளவில் குறைந்த நீரே தேவைப்படுவதால் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு இது சிறந்த பயிர் என்று அவர் தெரிவித்தார். இரசாயனங்கள் இன்றி இயற்கை முறையில் சிறுதானியங்களைப் பயிரிடலாம் என்றும் அதன் மூலம் மனிதர்கள் மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய உலகம் எதிர்கொள்ளும் உணவுப் பாதுகாப்பு சவால்களை எடுத்துரைத்த பிரதமர், உலகளாவிய தெற்கில் உள்ள ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்பின் சவாலையும் உலகளாவிய வடக்கில் உணவுப் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடைய நோய்களையும் பிரதமர் எடுத்துரைத்தார். "ஒருபுறம் உணவுப் பாதுகாப்புப் பிரச்னையும், மறுபுறம் உணவுப் பழக்கவழக்கப் பிரச்னையும் உள்ளது" என்று எடுத்துரைத்தார். விளைபொருட்களில் அதிக அளவில் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதைப் பற்றிய கவலைகளை சுட்டிக்காட்டினார். ஸ்ரீ அன்னா எளிதில் வளரக்கூடியது அதன் செலவும் குறைவு மற்ற பயிர்களை விட வேகமாக சாகுபடிக்குத் தயாராகிறது என ஸ்ரீ அன்னா ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வுகளை வழங்குகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஸ்ரீ அன்னாவின் நன்மைகளைப் பட்டியலிட்ட பிரதமர், இது ஊட்டச்சத்து நிறைந்தது, சுவையில் சிறப்பு, நார்ச்சத்து அதிகம், உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும், வாழ்க்கைமுறை தொடர்பான நோய்களைத் தடுக்க உதவுகிறது என்று கூறினார்.

சிறுதானியங்கள் முடிவற்ற சாத்தியங்களைக் கொண்டுவருகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் தேசிய உணவுக் கூடைக்கு ஸ்ரீ அன்னாவின் பங்களிப்பு 5-6 சதவிகிதம் மட்டுமே என்று தெரிவித்த பிரதமர் இந்த பங்களிப்பை அதிகரிக்க விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் துறை வல்லுநர்கள் உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாடு உணவு பதப்படுத்தும் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிஎல்ஐ திட்டத்தையும் தொடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார். சிறுதானியங்கள் துறைக்கு அதிகபட்ச பலன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். சிறுதானியப் பொருட்களைத் தயாரிப்பதற்கு  பல மாநிலங்கள் தங்கள் PDS அமைப்பில் ஸ்ரீ அன்னாவை சேர்த்துள்ளதோடு மற்ற மாநிலங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். மேலும், குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில், உணவில் ஒரு புதிய சுவை மற்றும் வகையாக மதிய உணவில் ஸ்ரீ அன்னாவை  சேர்க்க அவர் பரிந்துரைத்தார்.

நிறைவாக, சிறுதானியங்கள் வகைகளுக்கான பிரச்சினைகள் அனைத்தும் விரிவாகப் பேசப்பட்டு, நடைமுறைப்படுத்துவதற்கான வரைபடமும் தயாரிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். "விவசாயிகள் மற்றும் அனைத்து பங்கேற்பாளர்களின்  கூட்டு முயற்சியுடன் இந்தியா மற்றும் உலகத்தின் செழிப்புக்கு உணவு ஒரு புதிய பிரகாசத்தை சேர்க்கும்" என்று பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் மத்திய அமைச்சர்கள். இந்நிகழ்ச்சியில் மாநில விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன், ஸ்ரீ கைலாஷ் சவுத்ரி மற்றும் திருமதி ஷோபா கரந்த்லாஜே ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

இந்தியாவின் முன்மொழிவின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை (UNGA) சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக (IYM) அறிவித்தது. சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023 இன் கொண்டாட்டங்களை ஒரு 'மக்கள் இயக்கமாக' மாற்றவும், இந்தியாவை 'சிறுதானியங்களுக்கான உலகளாவிய மையமாக' நிலைநிறுத்தவும் பிரதமரின் பார்வைக்கு இணங்க அனைத்து மத்திய அரசு அமைச்சகங்கள்/துறைகள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், விவசாயிகள், ஸ்டார்ட் அப்கள், ஏற்றுமதியாளர்கள், சில்லறை வணிகங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள், விவசாயிகள், நுகர்வோர் காலநிலைக்கு சிறுதானியங்களின் நன்மைகள் (ஸ்ரீ அன்னா) பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் பரப்பவும் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் குளோபல் மில்லட்ஸ் (ஸ்ரீ அன்னா) மாநாட்டின் அமைப்பு இந்த சூழலில் ஒரு முக்கியமான திட்டமாகும்.

இரண்டு நாள் உலகளாவிய மாநாட்டில், சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) தொடர்பான அனைத்து முக்கியப் பிரச்சினைகள் பற்றிய அமர்வுகள், உற்பத்தியாளர்கள், நுகர்வோர் மற்றும் பிற பங்குதாரர்களிடையே சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு, சிறுதானியங்களின் மதிப்பு சங்கிலி வளர்ச்சி, சிறுதானியங்களின்  ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து அம்சங்கள், சந்தை இணைப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்றவை பற்றி விவாதிக்கும். மாநாட்டில் பல்வேறு நாடுகளின் விவசாய அமைச்சர்கள், சர்வதேச விஞ்ஞானிகள், ஊட்டச்சத்து நிபுணர்கள், சுகாதார நிபுணர்கள், ஸ்டார்ட்-அப் தலைவர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் கலந்துகொள்வார்கள்.சிறுதானியங்களை ஸ்ரீ அன்னா என்று குறிப்பிட்டதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி "அற்புத உணவு" என்பதற்குப் புதிய அர்த்தத்தையும் பரிமாணத்தையும் தந்துள்ளார்: திரு நரேந்திர சிங் தோமர்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு புது தில்லியில் இன்று நடைபெற்ற உலகளாவிய சிறுதானியங்கள்  (ஸ்ரீ அன்னா) மாநாட்டின் தொடக்க அமர்வில் மத்திய வேளாண்துறை  அமைச்சர் உரையாற்றினார்.

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு - 2023, உலகளாவிய உற்பத்தியை அதிகரிக்கவும், திறமையான பதனம் மற்றும் பயிர் சுழற்சியை சிறந்த முறையில் பயன்படுத்தவும், உணவு உற்பத்திப் பகுதிகளில் முக்கிய அங்கமாக சிறுதானியங்களை ஊக்குவிக்கவும் வாய்ப்பளிக்கும் என்று திரு நரேந்திர சிங் தோமர் தமது உரையில் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்முயற்சியால், ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள்  ஆண்டாக அறிவித்துள்ளது என்று திரு தோமர் கூறினார்.

சிறுதானிய உற்பத்தி மற்றும் நுகர்வை அதிகரிக்க, இதர மத்திய அமைச்சகங்கள், அனைத்து மாநில அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் சிறப்பாக   செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சரிவிகித உணவு மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கு பங்களிப்பதால், சைவ உணவுகளுக்கான தேவை அதிகரித்து வரும் காலத்தில் சிறுதானியங்கள் மாற்று உணவு முறையை வழங்குவதாகவும், அவை மனித குலத்திற்கு இயற்கையின் கொடைகள் என்றும் திரு தோமர் கூறினார். ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா சிறுதானியங்களின் முக்கிய உற்பத்தி மற்றும் நுகர்வு மையங்கள், குறிப்பாக இந்தியா, நைஜர், சூடான், நைஜீரியா ஆகியவை சிறுதானியங்கள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும், உலகில் உணவுண்ணும் ஒவ்வொருவர் தட்டிலும்  சிறுதானியங்கள்  இடம்பெற வேண்டும் என்பதே தமது பெரு விருப்பம் என்றும் அவர் கூறினார்.

ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பயிரிடப்பட்ட முதல் பயிர்கள் சிறுதானியங்கள்தான். பின்னர் உலகம் முழுவதும் மேம்பட்ட நாகரிகங்களுக்கு ஒரு முக்கிய உணவாதாரமாகப் பரவின.

முன்னதாக, 2023 புத்தாண்டு தொடக்கத்தில் கயானா அதிபர் டாக்டர் முகமது இர்ஃபான் அலியைச் சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், கயானா மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்திப்பதாகவும் திரு தோமர் தெரிவித்தார். 2023 ஜனவரி 8-10 தேதிகளில் இந்தூரில் நடைபெற்ற 17வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டதற்காக டாக்டர் அலிக்கு நன்றி தெரிவித்த திரு  தோமர், மதிப்புமிக்க பிரவாசி பாரதிய சம்மான் விருதைப் பெற்றதற்காக அதிபருக்குத் தமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.உலகளாவிய சிறுதானிய (ஸ்ரீ அன்னா) மாநாட்டுக்கு ஏபிஇடிஏ ஏற்பாடு

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், இந்தியாவில் இருந்து சிறுதானிய ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், உற்பத்தியாளர்களுக்கு சந்தை இணைப்பை வழங்கவும், மத்திய  அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை  அமைச்சகத்தின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏபிஇடிஏ,  இன்று புதுதில்லி புசா சாலையில் உள்ள என்ஏஎஸ்சி வளாகத்தின் சுப்பிரமணியம் மண்டபத்தில் உலகளாவிய சிறுதானிய (ஸ்ரீ அன்னா) மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இம் மாநாட்டிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 100 இந்திய சிறுதானிய  கண்காட்சியாளர்கள் மற்றும் அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், ஜெர்மனி, வியட்நாம், ஜப்பான், கென்யா, மலாவி, பூட்டான், இத்தாலி மற்றும் மலேசியா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 100 சர்வதேச கொள்முதலாளர்கள்  அழைக்கப்பட்டுள்ளனர். இந்த மாநாடு பங்கேற்பாளர்களிடையே வர்த்தகம் மற்றும் தொடர்பிற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இந்த மாநாட்டில் நூறு விதமான சிறுதானிய வகைகளை காட்சிப்படுத்தும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சிறுதானிய கண்காட்சியாளர்களின் விவரங்களும் டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, இதன் மூலம் இறக்குமதியாளர்கள் இந்திய சிறுதானிய  உற்பத்தியாளர்களின் பட்டியலில் இருந்து நேரடியாக அவற்றைப் பெறலாம். மெய்நிகர் வர்த்தகக் கண்காட்சி  வருடத்தின் 365  நாட்களும் செயல்படும்.

இதில், விளக்கக்காட்சிகள் உள்பட தொடர்ச்சியான தகவல் அமர்வுகள் இடம்பெறும். இந்த அமர்வுகள் சிறுதானியங்கள் மற்றும் அவற்றின்  மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், செயலாக்கம், பேக்கேஜிங் மற்றும் ஏற்றுமதி திறன் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தும், கண்காட்சியாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கும்.

இந்நிகழ்ச்சி சிறுதானிய தொழிலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் உலக சந்தையில் அதன் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு, சர்வதேச மற்றும் தேசிய வாங்குவோர், ஏற்றுமதியாளர்கள், முற்போக்கு விவசாயிகள், சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்  ஆகியவற்றுக்கு இடையேயான சந்திப்புகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி, மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராய்வதற்கான ஒரு தளத்தை வழங்கியது.

2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறுதானிய ஏற்றுமதி 64 மில்லியன் அமெரிக்க டாலர்கள். 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சிறுதானிய  ஏற்றுமதியில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 12.5% அதிகரித்துள்ளது. 2011-12ல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பெல்ஜியம் போன்ற நாடுகள் முக்கிய இறக்குமதி நாடுகளாக இருந்த நிலையில், தற்போது, நேபாளம் ,ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ) ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  கென்யா, பாகிஸ்தானும் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சாத்தியமான இறக்குமதி இடங்களாக இருந்தன. லிபியா, துனிசியா, மொராக்கோ, இங்கிலாந்து, ஏமன், ஓமன் மற்றும் அல்ஜீரியா ஆகியவை இந்தியா தினை ஏற்றுமதி செய்யும் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளாகும்.  இந்தியா உலகம் முழுவதும் 139 நாடுகளுக்கு சிறுதானியங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்திய சிறுதானியங்களின்  மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியும் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

இன்று இந்தியா, சிறுதானியங்கள் மற்றும் அவற்றின்  மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் உலகை வழிநடத்தும் திறனைக் கொண்டுள்ளது. GULFOOD 2023 இன் போது ஒரு பிரத்யேக சிறுதானிய அரங்கு அமைக்கப்பட்டது, இதில் ஸ்டார்ட் அப்கள், புதிய தொழில்முனைவோர், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் , ஏற்றுமதியாளர்கள், பெண் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தினர்.

2025 ஆம் ஆண்டுக்குள்  100 மில்லியன் அமெரிக்க டாலர் இலக்குகளை அடைய ஒரு வலுவான உத்தியை ஏபிஇடிஏ வகுத்துள்ளது. சர்வதேச சிறுதானிய  ஆண்டான 2023 இல், உலக சந்தையில் ஸ்ரீ அன்னா பிரபலமாக அறியப்படுகிறது. இந்திய சிறுதானிய  ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அந்தந்த மாநில வேளாண் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஏபிஇடிஏ 200 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்களில் , அனைத்து வயதினருக்கும் ஏற்ற, சாப்பிடத் தயார் நிலையில் சமைக்கத் தயார் நிலையில் மற்றும் பரிமாறத் தயார் நிலையில் உள்ள தயாரிப்புகளை உருவாக்கியுள்ளன.

இந்தியா சிறுதானிய உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற முக்கிய மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்களால் நாடு வளம் பெற்றது. இந்தியா 17.96 மில்லியன் மெட்ரிக் டன் சிறுதானியங்களை  உற்பத்தி செய்தது. மத்திய  அரசும் அதன் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக சிறுதானிய  உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. இந்த காரணிகளின் விளைவாக, இந்தியாவில் உற்பத்தி வரும் ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரிக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IYOM 2023 இல் நாம் முன்னேறி வருவதால், தினை பீட்சா பேஸ், தினை ஐஸ்கிரீம்கள், ஐஸ்கிரீம் கோன்கள் மற்றும் கப்கள், தினை கேக்குகள் மற்றும் பிரவுனிகள், காலை உணவு தானியங்கள், பாரம்பரிய இந்திய தோசைகள் என பல்வேறு வகையான தினைகளின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களால் இந்தியா வளம் பெறுகிறது. போஹா, உப்மா, பாஸ்தா, நூடுல்ஸ் தினை பால், தேநீர், நுகர்வு தினை தேநீர் கோப்பைகள் மிகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை, அவற்றை நேரடியாக உட்கொள்ளலாம் அல்லது தீவனம்/தீவனமாகப் பயன்படுத்தலாம்.

இந்த மாநாட்டில், இட்லி, தோசை, இடியப்பம், ரொட்டி, புட்டு, உப்மா, கஞ்சி, சப்பாத்தி, அப்பம், சேமியா உப்மா, பாஸ்தா, நூடுல்ஸ், மக்ரோனி, ரவை/சுஜி, மியூஸ்லி, உடனடி கலவைகள், போன்ற பல மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை உணவுப் பொருட்களாக முட்டீ, அல்வா, அதிரசம், கேசரி, சத்தான உருண்டை, பாயாசம்/கீர் இனிப்புகள், வடை, பக்கோடா, முறுக்கு, பேல்பூரி, போளி, பப்பாளி, சாப்பிடத் தயார் ஃபிளேக்ஸ், பஃப்ஸ், தினை லட்டு, தினை ரஸ்க், ஆகியவற்றுடன், ரொட்டி, கேக், குக்கீகள், சூப் ஸ்டிக்ஸ், உண்ணக்கூடிய பிஸ்கட் கப், ஹெல்த் பார்கள், ஸ்ப்ரெட்கள், மஃபின்கள் போன்ற பேக்கரி பொருட்களும் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, பிரியாணி, பாலூட்டும் உணவுகள்/குழந்தைகளுக்கான உணவுகளும் இடம்பெறும்.

இந்தியாவின்  சத்தான சிறுதானியங்களை உலகிற்குக் காட்டி, ஏற்றுமதியில் முன்னேற்றம் காண்பதற்கு சாதகமான தாக்கத்தை இந்த மாநாடு ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை ஒரு முன்னணி உற்பத்தி நாடு என்ற நிலையில்  இருந்து, ஏற்றுமதியில் முன்னணி நாடாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.  நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இந்திய விவசாயிகளின் வளமான எதிர்காலத்திற்கு பங்களித்து, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை அடைய , சிறுதானியங்களின் மகிமையை உலக நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் பயணத்தை இந்த மாநாடு  தொடங்கியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த