முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மே மாதம் 10 ஆம் தேதி கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் களநிலவரம்

 மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு நடக்கும் பலப் பரிட்சையில் வெல்லவது சுலபமில்லை என்பதே வரும்  களநிலவரம்  


கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி  116 இடங்களை பெற்றது. 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 103 இடங்களில் மட்டுமே பாஜக வென்றது. அத் தேர்தலில்  எந்தவொரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டதால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் எச். டி.தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளத்தின் சார்பில் குமாரசாமி முதலமைச்சரானார். 


 அவர் தலைமையிலான அரசு 14 மாதங்கள் மட்டுமே நீடிக்க முடிந்தது. காங்கிரஸுடன் இணைந்து  மதசார்பற்ற ஜனதாதளத்தின்  சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ராஜினாமா செய்த நிலையில்  மீண்டும் அத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தி அதில் 12 இடங்களில் பாஜக வென்றதால் எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைத்தது. கடும் விமர்சனத்துக்குள்ளான போதும்  எடியூரப்பா முதலமைச்சரானார்.‌ ஆயினும் எடியூரப்பாவுக்கும்  பி.எல். சந்தோஷுக்குமிடையே நிகழ்ந்த பனிப்போரில் கர்நாடகா மாநில பாரதிய ஜனதா கட்சி  மிகவும் பாதிப்படைந்து பலஹீணப்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.‌ அதன் காரணமாக  எடியூரப்பாவின் நிம்மதியுடன் சேர்த்து முதல்வர் பதவியும் பறிபோனது.  எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து இறக்கிவிட்டு பசவராஜ் பொம்மையை கர்நாடக மாநில முதல்வராக்கினார்கள். 



கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியிலும், ஜாதியிலும் முக்கிய தலைவராகவே பார்க்கப்பட்ட  எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிய விதத்தை கர்நாடக பாரதிய ஜனதா கட்சியினரே விரும்பாத நிலை.‌ எடியூரப்பாவை ஆதரித்த லிங்காயத்து சமூக மக்களின் ஒட்டுமொத்த கோபத்துக்கும் உள்ளாகி விட்டனர்.‌ 



இதெல்லாவற்றையும் விட. தற்போது ஆளும் முதல்வர் பசவராஜ் பொம்மை அரசின் மீது  எண்ணற்ற ஊழல் புகார்கள் குவித்தும் உள்ளது. "40 சதவீதம் கமிஷன் அரசு" என்ற அளவுக்கு கர்நாடகாவில் ஊழல் தாண்டவம்  தான் வரும் 2023 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நன்றாகவே தெரியும். இதில் கடந்த முறை அமித்ஷா கர்நாடகாவுக்கு வந்த போது எடியூரப்பா மலர்க்கொத்து தர விழையும் போது அதை மறுத்து மலர்க்கொத்தை எடியூரப்பாவிடம் இருந்து பிடுங்கி அவரது மகனிடம் கொடுத்து தனக்கு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதை எடியூரப்பா ஆதரவாளர்கள் ரசிக்கவில்லை. ஆடு பகை குட்டி உறவு என்கிற பாஜகவின் அரசியல் யுக்தியை அப்போது முதல் யாருமே ரசிக்கவில்லை.‌ என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.‌ அதன் காரணமாக 

கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியினர் தங்களுக்கு எடியூரப்பா ஆதரவு அதிமுக்கியம் எனக்கருதி தனித்தனியாக  எடியூரப்பாவின் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கேட்டு அவரது ஆதரவு கோருகின்றனர். எடியூரப்பாவின் இரு மகன்களான ராகவேந்திரா விஜயேந்திராவுக்க்கும் முக்கியத்துவம் அளிப்போமென்று கர்நாடகா பாரதிய ஜனதா கட்சித் தலைமை வாக்குறுதி கொடுத்துள்ளதாம்.‌ இருப்பினும் இதுவரை எடியூரப்பாவை தீவிரமாக ஆதரித்து வந்த லிங்காயத்து சமூக மக்களும்,  மடாதிபதிகளும், தொழிலதிபர்களும் தற்போது கட்சி மாநில அளவில் உள்ள சந்தோஷ் மீதுள்ள கோபத்திலிருப்பது கண்கூடு. எந்தக் கட்சியும் சாராத பொதுமக்களும் கூட பசவராஜ் பொம்மை அரசின் தொடர் ஊழல் முறைகேடுகளால் கடும் அவதியுற்று ஆளும் பாரதிய ஜனதா கட்சியின்  அரசு மீது கடுமையான கோபத்திலுள்ளனர்.  




கர்நாடகா சட்டமன்றத் தொகுதி எண்ணிக்கை 224. தனி மெஜாரிட்டிக்கு 113 தேவை. 

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளை ஆறு பகுதிகளாக பிரித்து ஆராய்ந்தால் . 

முதலாவதாக . பெங்களூர்  நகர்ப்பகுதியில் வரும் 28 சட்டமன்றத் தொகுதிகளில் இந்த முறை பாரதிய ஜனதா கட்சி இங்கு 10 தொகுதிகளை வெற்றி காண்பதே சிரமம் என்பதே உண்மை நிலை.‌

அடுத்ததாக மைசூரு - மாண்டியா- ராம்நகர் - தும்கூர் - ஹசன் பகுதிகளிலில் 64 தொகுதிகளில் இங்கு எப்போதும் மதசார்பற்ற ஜனதாதளத்தின் ஆதிக்கம் . ஆனால் பாரதிய ஜனதா கட்சியும் இம்முறை இங்கு 10 லிருந்து 12 தொகுதிகள் வரை  ஜெயித்தால் அதுவே அதிகம். காங்கிரஸ் கட்சி மற்றும் மதசார்பற்ற ஜனதாதளத்தின் வாக்கு வங்கியும் அதிகரித்துள்ளது. ஆயினும் பல தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின்  எதிர்ப்பு வாக்குகளை ஜனதாதளம் காங்கிரஸ் இரண்டும் சரிபாதியாகப் பிரிக்கும் போது அத்தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி  குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.‌ ஆனால் இம்முறை பாரதிய ஜனதா கட்சி பல தொகுதிகளில் தோல்வி அடையும் நிலைதான் தெரிகிறது.

மூன்றாவதாக மகாராஷ்டிரா கர்நாடகா  எல்கையில்  பாகல்கோட், பெல்ஹாம், பிஜாப்பூர், ஹவேரி, தார்வார், கடக் பகுதிகளில் 50 தொகுதிகள் உள்ளது.‌ இங்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும் நிலையில் இம்முறை மகாராஷ்டிரா கர்நாடகா இடையே உள்ள எல்லைத்தகராறு காரணமாக பாரதிய ஜனதா கட்சி பல தொகுதிகளில் தோல்வியடையும் நிலை தான் காணப்படுகிறது. 

நான்காவதாக  ஹைதராபாத் கர்நாடகா பகுதிகளான பெல்லாரி குல்பர்கா, பிதார் உள்ளிட்டவற்றில் 40 தொகுதிகள் உள்ளன. இங்கு பாரதிய ஜனதா கட்சிக்கு ரெட்டியார் சமூக மறைமுக ஆதரவு உண்டு. இரும்புத்தாது சுரங்க ஊழல் புகழ் ரெட்டி சகோதரர்கள் உதவி கிடைத்தால் மட்டுமே பாஜக இங்கு ஜெயிக்கும். 

ஐந்தாவதாக. மத்திய கர்நாடகத்தில் 23 தொகுதிகள் உள்ளன. இங்கு 7 லிருந்து 10 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி  வெற்றி பெறலாம்.

ஆறாவதாக . கடற்கரைக் கர்நாடகப்பகுதியில் 19 தொகுதிகள் உள்ளன. இங்கும் பாரதிய ஜனதா கட்சி பல தொகுதிகளில் தோல்வி பெறும்  என்ற நிலையில்.‌ 3 லிருந்து 5 தொகுதிகள் ஜெயித்தாலே அது அதிகம்.‌ மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பாஜக 60 லிருந்து 70 தொகுதிகள் ஜெயிக்கவே கடுமையாகப் போராட வேண்டுய நிலையில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்.‌ அடுத்து அமையவிருக்கும் ஆட்சியில் மதசார்பற்ற ஜனதாதளத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும். 

எனவே எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில்  இம்முறை ஜெயிப்பது பாரதிய ஜனதா கட்சிக்கு குதிரைக் கொம்புதான். கடந்த 2018 தேர்தலில் வெற்றி பெற்ற 103 இடங்களாவது தக்கவைக்குமா என்பது கூட சந்தேகமே என்று கர்நாடகவில்  அக்கட்சியினரே அஞ்சுகின்றனர்.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் இம்முறை பாஜக அதிகமான இடங்களில் தோல்வி அடைந்து 60 லிருந்து 70 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று அரசியல் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். இதை எப்பாடுபட்டாவது மாற்ற பிரதமர் நரேந்திர மோடி- உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பஹீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர். அதில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்  அண்ணாமலைக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் மிகமுக்கியப் பணியை கொடுத்துள்ளனர். 

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் இம்முறை பாஜக ஜெயிக்க வேண்டும் என்றால் பணத்தை தண்ணீர் போல செலவு செய்தால் மட்டுமே சாத்தியம் என்று கருதி தமிழ்நாட்டில் பாஜகவின் கருவூலமாக விளங்கும் தொழிலதிபர்கள், கல்வி வியாபாரிகள், தலைவர்கள் மற்றும் சிலபல தனி நபர்களிடமிருந்து கணிசமான நிதியுதவியை நாடியுள்ளனர். இதைக் கச்சிதமாக செய்து முடிக்க குறிப்பிட்ட சிலரை பிரத்யேகமாக நியமித்துள்ளதாக கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பேசப் படுகிறது என்று கர்நாடகா தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ஒரே பேச்சாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த