மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு நடக்கும் பலப் பரிட்சையில் வெல்லவது சுலபமில்லை என்பதே வரும் களநிலவரம்
கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 116 இடங்களை பெற்றது. 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 103 இடங்களில் மட்டுமே பாஜக வென்றது. அத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டதால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் எச். டி.தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளத்தின் சார்பில் குமாரசாமி முதலமைச்சரானார்.
அவர் தலைமையிலான அரசு 14 மாதங்கள் மட்டுமே நீடிக்க முடிந்தது. காங்கிரஸுடன் இணைந்து மதசார்பற்ற ஜனதாதளத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ராஜினாமா செய்த நிலையில் மீண்டும் அத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தி அதில் 12 இடங்களில் பாஜக வென்றதால் எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைத்தது. கடும் விமர்சனத்துக்குள்ளான போதும் எடியூரப்பா முதலமைச்சரானார். ஆயினும் எடியூரப்பாவுக்கும் பி.எல். சந்தோஷுக்குமிடையே நிகழ்ந்த பனிப்போரில் கர்நாடகா மாநில பாரதிய ஜனதா கட்சி மிகவும் பாதிப்படைந்து பலஹீணப்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. அதன் காரணமாக எடியூரப்பாவின் நிம்மதியுடன் சேர்த்து முதல்வர் பதவியும் பறிபோனது. எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து இறக்கிவிட்டு பசவராஜ் பொம்மையை கர்நாடக மாநில முதல்வராக்கினார்கள்.
கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியிலும், ஜாதியிலும் முக்கிய தலைவராகவே பார்க்கப்பட்ட எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிய விதத்தை கர்நாடக பாரதிய ஜனதா கட்சியினரே விரும்பாத நிலை. எடியூரப்பாவை ஆதரித்த லிங்காயத்து சமூக மக்களின் ஒட்டுமொத்த கோபத்துக்கும் உள்ளாகி விட்டனர்.
இதெல்லாவற்றையும் விட. தற்போது ஆளும் முதல்வர் பசவராஜ் பொம்மை அரசின் மீது எண்ணற்ற ஊழல் புகார்கள் குவித்தும் உள்ளது. "40 சதவீதம் கமிஷன் அரசு" என்ற அளவுக்கு கர்நாடகாவில் ஊழல் தாண்டவம் தான் வரும் 2023 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நன்றாகவே தெரியும். இதில் கடந்த முறை அமித்ஷா கர்நாடகாவுக்கு வந்த போது எடியூரப்பா மலர்க்கொத்து தர விழையும் போது அதை மறுத்து மலர்க்கொத்தை எடியூரப்பாவிடம் இருந்து பிடுங்கி அவரது மகனிடம் கொடுத்து தனக்கு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதை எடியூரப்பா ஆதரவாளர்கள் ரசிக்கவில்லை. ஆடு பகை குட்டி உறவு என்கிற பாஜகவின் அரசியல் யுக்தியை அப்போது முதல் யாருமே ரசிக்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். அதன் காரணமாக
கர்நாடகா சட்டமன்றத் தொகுதி எண்ணிக்கை 224. தனி மெஜாரிட்டிக்கு 113 தேவை.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளை ஆறு பகுதிகளாக பிரித்து ஆராய்ந்தால் .
முதலாவதாக . பெங்களூர் நகர்ப்பகுதியில் வரும் 28 சட்டமன்றத் தொகுதிகளில் இந்த முறை பாரதிய ஜனதா கட்சி இங்கு 10 தொகுதிகளை வெற்றி காண்பதே சிரமம் என்பதே உண்மை நிலை.
அடுத்ததாக மைசூரு - மாண்டியா- ராம்நகர் - தும்கூர் - ஹசன் பகுதிகளிலில் 64 தொகுதிகளில் இங்கு எப்போதும் மதசார்பற்ற ஜனதாதளத்தின் ஆதிக்கம் . ஆனால் பாரதிய ஜனதா கட்சியும் இம்முறை இங்கு 10 லிருந்து 12 தொகுதிகள் வரை ஜெயித்தால் அதுவே அதிகம். காங்கிரஸ் கட்சி மற்றும் மதசார்பற்ற ஜனதாதளத்தின் வாக்கு வங்கியும் அதிகரித்துள்ளது. ஆயினும் பல தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் எதிர்ப்பு வாக்குகளை ஜனதாதளம் காங்கிரஸ் இரண்டும் சரிபாதியாகப் பிரிக்கும் போது அத்தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். ஆனால் இம்முறை பாரதிய ஜனதா கட்சி பல தொகுதிகளில் தோல்வி அடையும் நிலைதான் தெரிகிறது.
மூன்றாவதாக மகாராஷ்டிரா கர்நாடகா எல்கையில் பாகல்கோட், பெல்ஹாம், பிஜாப்பூர், ஹவேரி, தார்வார், கடக் பகுதிகளில் 50 தொகுதிகள் உள்ளது. இங்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும் நிலையில் இம்முறை மகாராஷ்டிரா கர்நாடகா இடையே உள்ள எல்லைத்தகராறு காரணமாக பாரதிய ஜனதா கட்சி பல தொகுதிகளில் தோல்வியடையும் நிலை தான் காணப்படுகிறது.
நான்காவதாக ஹைதராபாத் கர்நாடகா பகுதிகளான பெல்லாரி குல்பர்கா, பிதார் உள்ளிட்டவற்றில் 40 தொகுதிகள் உள்ளன. இங்கு பாரதிய ஜனதா கட்சிக்கு ரெட்டியார் சமூக மறைமுக ஆதரவு உண்டு. இரும்புத்தாது சுரங்க ஊழல் புகழ் ரெட்டி சகோதரர்கள் உதவி கிடைத்தால் மட்டுமே பாஜக இங்கு ஜெயிக்கும்.
ஐந்தாவதாக. மத்திய கர்நாடகத்தில் 23 தொகுதிகள் உள்ளன. இங்கு 7 லிருந்து 10 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறலாம்.
ஆறாவதாக . கடற்கரைக் கர்நாடகப்பகுதியில் 19 தொகுதிகள் உள்ளன. இங்கும் பாரதிய ஜனதா கட்சி பல தொகுதிகளில் தோல்வி பெறும் என்ற நிலையில். 3 லிருந்து 5 தொகுதிகள் ஜெயித்தாலே அது அதிகம். மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பாஜக 60 லிருந்து 70 தொகுதிகள் ஜெயிக்கவே கடுமையாகப் போராட வேண்டுய நிலையில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். அடுத்து அமையவிருக்கும் ஆட்சியில் மதசார்பற்ற ஜனதாதளத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
எனவே எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் இம்முறை ஜெயிப்பது பாரதிய ஜனதா கட்சிக்கு குதிரைக் கொம்புதான். கடந்த 2018 தேர்தலில் வெற்றி பெற்ற 103 இடங்களாவது தக்கவைக்குமா என்பது கூட சந்தேகமே என்று கர்நாடகவில் அக்கட்சியினரே அஞ்சுகின்றனர்.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் இம்முறை பாஜக அதிகமான இடங்களில் தோல்வி அடைந்து 60 லிருந்து 70 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று அரசியல் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். இதை எப்பாடுபட்டாவது மாற்ற பிரதமர் நரேந்திர மோடி- உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பஹீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர். அதில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் மிகமுக்கியப் பணியை கொடுத்துள்ளனர்.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் இம்முறை பாஜக ஜெயிக்க வேண்டும் என்றால் பணத்தை தண்ணீர் போல செலவு செய்தால் மட்டுமே சாத்தியம் என்று கருதி தமிழ்நாட்டில் பாஜகவின் கருவூலமாக விளங்கும் தொழிலதிபர்கள், கல்வி வியாபாரிகள், தலைவர்கள் மற்றும் சிலபல தனி நபர்களிடமிருந்து கணிசமான நிதியுதவியை நாடியுள்ளனர். இதைக் கச்சிதமாக செய்து முடிக்க குறிப்பிட்ட சிலரை பிரத்யேகமாக நியமித்துள்ளதாக கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பேசப் படுகிறது என்று கர்நாடகா தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ஒரே பேச்சாகிறது.
கருத்துகள்