முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்சிராப்பள்ளியில் நடந்த அதிமுக 51 வது ஆண்டு துவக்க விழா மாநாடு ஒரு சாதனையா அல்லது மேலிடம் வைத்த சோதனையா முடிவு வருமா

ஒரே மாலை இரண்டு கொக்கிகள்


திருச்சிராப்பள்ளி  பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் அதிமுகவின் 51  வது ஆண்டு துவக்க விழாவும், முன்னாள் முதலமைச்சர்கள் செல்வி ஜெ.ஜெயலலிதா மற்றும் அஇஅதிமுக நிறுவனர் டாக்டர்  எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாவென முப்பெரும் விழா மாநாடு ஒருங்கிணைப்பாளர் மற்றும் அக்கட்சியின் முன்னால் முதல்வர் மற்றும் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் சார்ந்த அணியினர் சார்பில் நடைபெற்றதில்



சென்னை லாயிட்ஸ் சாலையிலுள்ள அதிமுக தலைமை அலுவலக வடிவில் மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 30,000 த்துக்கும்  அதிகமான தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இரவைப்  பகலாக்கும்  மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தத மாநாட்டில் முன்னால் அமைச்சர்கள் பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன்,  வெல்லமண்டி நடராஜன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பானதடியன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







முன்னதாக மாநாட்டுத் திடலுக்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு தொண்டர்கள் உற்சாகமாகவே வரவேற்பளித்தனர். மாநாடு நடைபெறும் இடத்தின் நடுமையத்தில் சிகப்புக் கம்பளத்தில் ஒ.பன்னீர் செல்வம் வருகை தர ஏற்ற வகையில் சிறப்பான ஏற்பாடுகள்  செய்யப்பட்டிருந்தது.                எடப்பாடி. கே.பழனிச்சாமியின் நம்பிக்கைத் துரோகத்திற்கு சாவு மணி அடிக்க நீங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

என திருச்சிராப்பள்ளி  மாநாட்டில் ஓ. பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துப் பேசினார். அதில், “திருச்சி மாநாடு அடுத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார் என்று தீர்மானிக்கக் கூடிய ஓரிடம். மாநாடு நடத்தும் இடமான ஜி.கார்னர் பகுதி ரொம்ப ராசியான இடம். இந்த இடம் தான் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வருவதற்கு அடிதளம் போட்டது. 

அதிமுகவின் நிரந்தரப் பொதுசெயலாளர் புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா தான் என்று நாம் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்குப் பிறகு வந்த கபட வேடதாரி அரசியல் வித்தகர்கள், வியாபாரிகள், நயவஞ்சகர்கள், நம்பிக்கைத் துரோகிகள் 50 ஆண்டு கால அதிமுகவை அபகரிக்கும் வேலையில் ரத்து செய்துள்ளார்கள். அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் அம்மா என்பதை மாற்றியுள்ளனர், அவர்களை அந்தத் துரோகிகளை ஓட,ஓட விரட்டும் காலம் வெகு தொலைவிலில்லை. 





என்னை இரண்டு முறை முதலமைச்சராக ஜெ.ஜெயலலிதா தான் நியமனம் செய்தார்கள். மூன்றாம் முறை சின்னம்மா சசிக்கலா நடராஜன்  தான் என்னை முதலமைச்சராக உட்கார வைத்தார்கள். அப்போது திரும்ப என்னிடம் முதலமைச்சர் பதவியைக் கேட்டார்கள் கொடுத்து விட்டு வந்து விட்டேன். 

மறுபடியும் எனக்கு முதலமைச்சராகவோ, பொதுச் செயலாளராகவோ இருக்க விருப்பமில்லை. உங்களில் ஒருவராக, தூய தொண்டர்களில் ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் கடமை எனக்குள்ளது. அதைத்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்  விரும்பினார்கள். ஜெ.

ஜெயலலிதா அவர்கள் எனக்கு முதலமைச்சர் பதவியை தந்திருக்கிறார்கள், நிதியமைச்சர் பதவியை தந்திருக்கிறார்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் 13 ஆண்டுகள் கட்சியில்  பொருளாளர் என்ற பதவியும் எனக்குத் தந்தார்கள். நான் பொருளாளர் பதவியை ஏற்ற போது அதிமுக 2 கோடி ரூபாய் பற்றாகுறையில் இருந்ததை 256 கோடியாக ஜெ.ஜெயலலிதா வழியில் தான்  நான் உயர்த்தினேன். 

எனக்குத் தந்த பதவியை நான் திருப்பிக் கொடுத்துட்டேன். ஐயா! பழனிசாமி அவர்களே.. உங்களுக்கு யார் பதவி கொடுத்தது. சின்னம்மா சசிக்கலா நடராஜன் உங்களுக்கு முதலமைச்சர் என்ற பதவியைத் தந்தார்கள். அவர்களை பார்த்து நாய்கள் எதையோ குறைகிறது என்று சொன்னால், எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகி. சொல் வரலாறு உன்னை மன்னிக்குமா ? இப்படிப்பட்ட ஒரு ஆள், தனக்குத்தானே பொதுசெயலாளர் என பதவி சூட்டிக் கொண்டார். இது ஒரு கேலிக் கூத்து! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என்றால் ஒரு அடையாளம் இருக்கிறது; நீங்களும் (எடப்பாடி பழனிச்சாமியும்) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் ஒன்றா? அவரின் கால் தூசிக்குக் கூட வர மாட்டீர்கள். இப்படிப்பட்ட நம்பிக்கைத் துரோகிகளை கழகத்தில் இருக்கவிடலாமா என்பதை தொண்டர்களாகிய நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.   மேலும் இதே நிகழ்வில் பேசிய பண்ருட்டி எஸ் ராமச்சந்திரன், “இது வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு. திருச்சியில் 1956 ஆம் ஆண்டு அண்ணா வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டை நடத்தினார்கள். அப்போதும் அந்த மாநாட்டிற்கு வந்துள்ளேன். இப்பொழுது 67 ஆண்டுகள் கழித்து இதே திருச்சியில் மாநாடு நடக்கும் போது 86 வயதான நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அரசியல் தலைவருக்கு வேண்டிய அடிப்படைக் குணமே நம்பிக்கைக்கு உரியவராக இருப்பது தான். மண்டியிட்டு காலில் விழுந்து பதவி பெற்று காலை வாரிவிடுபவரா நம்பிக்கைக்கு உரியவர். மூன்று முறை முதலமைச்சர் பதவி கொடுத்தும் திரும்பிக் கொடுத்த நம்பிக்கைக்கு உரியவர் ஓ.பன்னீர்செல்வம்  கொடுத்த பதவியை வைத்துக்கொண்டு கொடுத்தவரையே பதம் பார்ப்பவரா நம்பிக்கைக்கு உரியவர்.

மகாபாரதக் கதைகளை கேட்டிருப்பீர்கள். சகுனி, துரோணாச்சாரியார் என அனைவரும் கௌரவர்கள் பக்கம் தான். அவர்களை எதிர்த்த பாண்டவர்கள் 5 பேர். அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது கிருஷ்ணன். அவரும் நான் ஆயுதம் ஏந்த மாட்டேன் என சத்தியம் செய்தார். நல்லவேளை அந்த காலத்தில் உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் இல்லை.


இருந்திருந்தால் அனைத்தும் கௌரவர்களுக்கு தான் சொந்தம் எனச் சொல்லி இருப்பார்கள். அப்படி இருந்திருந்தால் பாரதமே இன்று இருக்காது. பாரதப்போர் என்றால் என்ன என்று தெரியாது. பாரதத்தில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை தோற்கடித்ததற்கு தர்மம் அவர்கள் பக்கம் இருந்தது. பெரும்பான்மையை சிறுபான்மை வெல்லும் என்பதற்கு பாரதப்போர் எடுத்துக்காட்டு” எனக் கூறினார். இதில் அவர் பேசியதில் தற்போது அதிமுகவில் நடந்துவரும் செயலை அது குறித்த உண்மை  நிலையை வெளிப்படுத்தினார்.  ஆக மொத்தம்  திருச்சிராப்பள்ளியில் நடந்த அதிமுக 51  வது ஆண்டு துவக்க விழா மாநாடு ஒரு சாதனையா அல்லது மேலிடம் வைத்த சோதனையா என்பது தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.