முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணல் கடத்தியதால் புகார் அளித்த கிராம நிர்வாக அலுவலர் வெட்டப்பட்டுக் கொலை,

மணல் கடத்தியதால் புகார் அளித்த கிராம நிர்வாக அலுவலர் வெட்டப்பட்டுக் கொலை,


புகார் மீது  வழக்கு பதிவு செய்ததால் பணியில் இருந்த போது படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும்  தூத்துக்குடி முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ1 கோடி நிதி உதவியும் கருணை அடிப்படையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிக்கை விபரம்  வருமாறு 'தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவகுண்டம் தாலுகா  முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அலுவலகத்தில் பணியிலிருந்த போது இரண்டு நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். தலை, கைகளில் காயமடைந்த லூர்து பிரான்சிஸ் திருநெல்வேலி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர். சிகிச்சை பலனின்றிக் காலமானார். அவரைத் தாக்கி கொலை செய்தவர்களில் ராமசுப்பு என்ற நபர்  உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் ராமசுப்பு, மற்றொரு நபருடன் இணைந்து லூர்து பிரான்சிஸை வெட்டினார் என்றும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது லூர்து பிரான்சிஸ் பொறுப்புணர்வையும் கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றுகிறது; அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என. அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். அரசு சார்பாக லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூபாய் ஒரு கோடி நிதி உதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்  என தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


மேலும் கூறப்படும் தகவலாவது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் தாலுகா வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலரான லூர்து பிரான்ஸிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் ரோந்து சென்றிருந்ததாகவும் அப்போது, ராமசுப்பு என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை கடத்தி சென்றதாகவும் அதனைப் பார்த்த  லூர்து பிரான்சிஸ், உடனடியாக முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், லூர்து பிரான்சிஸ் அவர் பணி செய்த  அலுவலகத்தில் வழக்கமான பணியிலிருந்தபோது, திடீரென அலுவலகத்திற்குள் புகுந்த இருவர், அவரைச் சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த அவர், திருநெல்வேலி  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த முறப்பநாடு காவல்துறையினர் ஒருவரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல், 

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து  பின்னர் அங்குள்ள செய்தியாளர்களிடம் பேசிய போது குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் எனக் கூறினார்.

லூர்து பிரான்சிஸின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லூர்து பிரான்சிஸின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். மணல் கொள்ளை மாஃபியா, நில மோசடி மாஃபியா, மோட்டல் ஊழல் மாஃபியா, ஒப்பந்ததாரர் மாஃபியா, சுங்கச்சாவடி சின்டிகேட் மாஃபியா, சுகர் சின்டிகேட் மாபியா, என பலவகை உண்டு இது எல்லாம் சாமானிய மக்கள் இதுவரை அறியாத ஒன்று, என முழுவதும் மாஃபியா கும்பல்களின் கட்டுப்பாட்டில் சென்று கொண்டிருக்கிறது. அரசு அலுவலகம் உள்ளேயே நுழைந்து அரசு பணியாளரைக் கொலை செய்து விட்டு செல்லும் அளவிற்கு இந்த மாஃபியா கும்பல்களுக்கு துணிச்சல் வந்த காரணம் அரசியல் தான்.

மாபியா கும்பல்களை எதிர்க்கும் துணிச்சல் கொண்ட நேர்மையான அரசு அதிகாரிகள் இல்லாத நிலை இந்த சபாடினேட் சர்விஸ் நபர்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதமிருக்கிறது என்ற வினா அரசு ஊழியர் மத்தியில் எழுகிறது அரசு கொடுக்கும் 1 கோடி ரூபாய் அந்த உத்தரவாதத்தைக் கொடுக்காதே. என்ன செய்யப்  போகிறீர்கள்? என்ற வினாவும் அவர்கள்  மத்தியில்  தற்போது வருகிறது. முழுமையான விசாரணை முடியும் முன்பு எதுவும் கூறமுடியாது மேலும் தமிழ்நாட்டில் ஆற்று மணல் கடத்தி பல நூறு கோடிகளை கப்பம் கட்டி எடுத்து அரசியல் காரணமாக  ஊழல் செய்து கொடுத்த பல  கோடிஸ்வரர்கள் மாவட்டம் தோறும்  உண்டு , ஆனால் அந்த மணல் திருடர்களுக்கோ இராஜ மரியாதை தான் காரணம் எங்கும்  மாமூல் ,எதிலும் மாமூல் இப்போது ஒரு நேர்மையான கிராம நிர்வாக அலுவலரை தூத்துக்குடி மாவட்டத்தில் வெட்டிய குற்றவாளி இரண்டு சக்கர வாகனத்தில் மணல் கடத்தியவர் என்பதே இதில் ஹைலைட்டாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...