மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
நகர திக் விஜயமும் சிறப்பாக நடந்தது நாளை திருக்கல்யாணம்.மதுரை விழாக்கோலம்
ஸ்ரீ.மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு பகலும் கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் மெய்யன்பர்கள் புடைசூழ பட்டத்தரிசியாக பாண்டிய நாட்டரசி ஸ்ரீ மீனாட்சி அரசியாக முடிசூட்டிக் கொண்டு பாண்டியர்களின் வேப்பம்பூ மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
மீனாட்சி அம்மன். இன்று எட்டு திக்கும் விஜயம் புறப்பட்டார்.
நாளைய தினம் ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் முதலில் வசந்த விழவாக 13 ஆம் நூற்றாண்டு வரை சைவர்கள் விழாவாக நடந்த வசந்த விழா திருக்கல்யாண வைபபம்
காலப்போக்கில் பின் விஜயநகர நாயக்கர்கள் ஆட்சி துவங்கியது முதல் சித்திரைத் திருவிழாவாக வைணவக் கலப்புடன் நடந்தது அதில் கடந்த வாரம் முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுவதில் எட்டாம் நாளான நேற்று ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சந்நிதியிலுள்ள 6 கால் பீடத்தில் இரவு 7.30 மணியளவில் ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சாற்றி, ரத்தினங்கள் இழைத்த செங்கோலை வழங்கி பட்டாபிஷேகம் நடந்தது. அதன் பின்பு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் சித்திரைப் பெருவிழாவின் எட்டாம் திருநாளில் மதுரையில் மீனாட்சி பட்டாபிஷேகம் காலை ஸ்வாமியும் அம்பாளும் பல்லக்கில் அமர்ந்து மேலமாசிவீதி கட்டுச்செட்டி மண்டபம் எழுந்தருள அங்கே மதியம் அபிஷேக அலங்கார தீபாராதனைகளாகி மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி திருக்கோவிலை நோக்கிப் புறப்படுவர் மாலை அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் இதற்கென்றே உள்ள வெள்ளிசிம்மாசனத்தின் மேல் அதிகம்பீரமாக மீனாட்சி அம்மன் அமர்ந்திருக்க மணிமுடி சூட்டி வேப்பம்பூத்தொடை சாற்றி செங்கோல் கொடுத்து சாம்ராஜ்ய பட்டாபிஷேக வைபவம் நடைபெற்ற
பின் இரவு ஸ்வாமியும் அம்பாளும் வெள்ளி சிம்மாசனங்களில் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர் இன்றைக்கு நடக்கும் பட்டாபிஷேக வைபவத்தை நேரடியாகவோ அல்லது தொலைக்காட்சி, youtube உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவோ நேரலை வாயிலாகவோ நம்மால் காண முடிகிறது ஆனால் இதே வைபவம் பாண்டிய மன்னர்கள் காலத்தில் எவ்வாறு நடந்திருக்கும் என்று நாம் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா.
பின்னர் நம்பியாரின் தலைமையில் பூஜைகள் நடைபெற்று சகல வாத்தியங்களும் முழங்க வேத கோஷத்துடன் பட்டர்கள் அம்பிகையின் திருமுடியில் கிரீடத்தை சூட்டி செங்கோல் கொடுத்து பட்டாபிஷேகம் செய்து வைப்பர்.
அதனைப்போலவே ஐந்து முத்திரைகளையும் அந்தந்தந்த அதிகாரிகளிடம் ஒப்படைப்பர் !அதனை தாங்கிக்கொண்டு மீண்டும் அம்பாரியில் ஏறி பிரம்மாண்டமான முறையில் நகர்வலம் வருவார் மன்னர் ! கூடவே மீனாட்சி அம்மன் கோவில் ஸ்தானீகர்க பட்டர்களும் பல்லாக்கில் வருவர் ! ஆம் மீனாட்சி அம்மன் திருக்கோவில் ஸ்தானீகர்கள் பட்டர்களுக்கு அப்போது அத்தனை மரியாதை உண்டு. ஊர்வலம் முடிந்த பின் அரசர் அந்த செங்கோலை அவர் அமரும் அரண்மனை ஆஸ்தான மண்டப சிம்மாசனத்தில் வைத்து அதன் அருகில் கீழே மன்னர் நிற்பார் !
பின்னர் அச்செங்கோலுக்கு பட்டர்கள் பூஜை செய்வர் ! அம்பிகையின் செங்கோலை முன்னிட்டுக்கொண்டு உடனே ராஜ தர்பார் நடைபெறும் ! அத்தனை பொலிகர்களும் மந்திரி பிரதானிகளும் சேனாதிபதிகளும் வந்து அதற்கு காணிக்கை மற்றும் பரிசுகளைத் தருவர் ! உடனே மன்னரும் பிரதி சம்பாவனை செய்வார் !!
ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் எட்டு திக்கும் திக் விஜயமும் நடந்த நிலையில் .நாளை திருக்கல்யாணம் நடைபெறும் நிலையில் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது
ஸ்ரீ மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல்,
அறநிலையத்துறையின் துணை ஆணையர் ஆ.அருணாச்சலத்திடம் வழங்கப்பட்டது. செங்கோலைப் பெற்றுக்கொண்டவர், சுவாமி சந்நிதி இரண்டாம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் ஸ்ரீ மீனாட்சி அம்மனிடம் ஒப்படைத்தார். பட்டாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரலாற்றில் தொண்மையான புராணக் கதையின் படி கடவுளின் அவதாரமாக ஸ்ரீ மீனாட்சி ( மீன்களைப் போன்ற கண்கள் கொண்ட) பாண்டியநாட்டில் கடலோரம் மீனவர் தலைவரின் மகளாகப் பிறந்தார். பாண்டியர்களின் இலச்சினைச் சின்னமான மீன் அவர்களின் நாணயம் உள்ளிட்டவற்றில் அவர்களின் மரபைக் காட்டும்விதமாக இடம்பெற்றது.
மீனாட்சி (மீன்+ஆக்ஷி ) அல்லது கயல்விழி என்ற சொல் இரண்டு சொற்களின் சேர்க்கை அதாவது தமிழ்ச் சொல்லான மீனும் ஆட்சி சொல்லான பின் அது சமஸ்கிருத உச்ரிப்பால் ஆக்ஷி (கண்)யாக மாறியது .பாண்டியர்கள் மீன் (கயல்), சுறா (மகரம்), கடியால் (மகரம்) – மூன்று கடலுயிரிகளையும் தங்கள் குலச் சின்னமாக சங்க காலத்தில் இருந்து இலச்சினை உடையவர்கள்
முற்காலப் பாண்டிய மன்னர்கள் துவங்கி கடைசி மன்னராக இருந்த வீரபாண்டியர், சுந்தரபாண்டியர் வரை வேப்பம்பூ மாலை தரித்தவர்களாக இருந்துள்ளனர். மாலிக்காபூர் படைஎடுப்பு நடந்த 1311 ஆண்டு வரை தொடர்ந்து நடந்து வந்த நிகழ்வாகும் எனவே மதுரையை ஆளும் பாண்டிய நாட்டு மகாராணி ஒருவர் ஸ்ரீ மீனாட்சி அரசி அம்மனுக்கும் பட்டாபிஷேகம் அன்று வேப்பம் பூ மாலை அணிவிக்கப்பட்டது. அதன் பிறகு அம்மன் கையில் இரத்தின செங்கோல் அளிக்கப்பட்டது.
ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம்..எட்டு திக்கும் திக் விஜயம் நடந்த நிலையில்..நாளை திருக்கல்யாணம்..மதுரையில் விழாக்கோலம் கொண்டு தடபுடல் விருந்தும் நடக்கிறது
மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் சித்திரைத் திருவிழா மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்ததை அடுத்து சித்திரை முதல் ஆவணி மாதம் வரை மதுரையில் ஸ்ரீ மீனாட்சி அம்மனின் ஆட்சி துவங்கியுள்ளது. பட்டத்து அரசி ஸ்ரீ மீனாட்சி இரவு 9 மணியளவில் வெள்ளி சிம்மாசனத்தில் நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று திக்விஜயம் சிறப்பாக நடந்த நிலைஇல் நாளைய தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், நாளை மறுநாள் திருத்தேரோட்டமும் நடைபெறுகிது.
மதுரையின் அரசி மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரருடன் திருமண விழா மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்றவுடன் மதுரை மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
மீனாட்சி பட்டாபிஷேகம்..எட்டு திக்கும் திக் விஜயம்..நாளை திருக்கல்யாணம்..மதுரையில் விழாக்கோலம் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஞாயிறன்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் புடைசூழ பட்டத்தரிசியாக முடிசூட்டிக்கொண்டு வேப்பம்பூ மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் மீனாட்சி அம்மன். இன்று எட்டு திக்கும் விஜயம் புறப்படுகிறார். நாளைய தினம் சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
சிவபெருமானை முதன் முதலாக மீனவர் தலைவரின் மகளாக சந்தித்த ஸ்ரீ மீனாட்சியை சிவபெருமானின் பார்வை பதிந்த மாத்திரத்தில் அவரது மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போயிற்று. சுராமீனிடம் இருந்து மீனவர் குலம் காக்கும் கடவுளாக சொக்கநாதர் காட்சி தர அப்போது தான், தன்னுடைய மணாளன் இவரே என்று எண்ணி, நாணம் வந்தது.ஒரு நல்ல நாளில் பூலோகம் வந்து மணந்து கொள்வதாக சிவபெருமானுக்கு உறுதியளித்தார். அதன்படியே கயிலாயத்தில் இருந்து மதுரைக்கு வந்த புரணக்கதையில் கண்டபடி . மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள், தேவகனங்களும் உடன் வந்தனர். புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சிதரும் சிவபெருமான் அந்த கோலத்தில் இருந்து மாறியிருந்தார். சொக்கநாதர் சுந்தரேசுவரராக மதுரை பாண்டிய நாட்டின் மாப்பிள்ளையாக வந்தார். நல்ல நேரம் வந்ததும் அரசி ஸ்ரீ மீனாட்சியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார். மீனாட்சி அம்மனை சுந்தரேசுவரருக்கு திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்து கொடுப்பது வரலாறாகவே இருந்து வருகிறது. அதனையொட்டி ஸ்ரீ மீனாட்சி அம்மன் அருளாட்சி புரியும் மதுரைக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலிருந்து இன்று மாலை 5 மணிக்கு மேளதாளங்கள் முழங்க பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு வருகிறார்.
திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான், தெய்வானையுடன் புறப்பட்டு அம்மை அப்பனின் திருமணத்தில் பங்கேற்க வருகிறார். திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரை வரை வழிநெடுகிலுமாக ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து முருகப்பெருமான் தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாளை வழிபடுகின்றனர்.
நாளைய தினம் காலையில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுகிது. பவளக்கனிவாய் பெருமாள் பங்கேற்று மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுக்கிறார். மீனாட்சி அம்மனுக்கும் பிரியாவிடைக்கும் சுந்தரேஸ்வரர் மங்கல நாண் பூட்ட அதை பார்த்த மகிழ்ச்சியில் மதுரையில் உள்ள சுமங்கலி பெண்களும் தங்களின் கழுத்தில் புதுதாலி மாற்றிக்கொள்வது திருக்கல்யாணத்திற்கு சென்ற முருகப்பெருமான் தெய்வானையுடனும் மாமா பவளக்கனிவாய் பெருமாளுடனும் மதுரையில் 5 ஆம் தேதி வரை தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
சித்ரா பவுர்ணமி நாளில் திருமலை நாயக்கர் காலம் தொட்டு கள்ளழகரும் வைகையில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் வேடிக்கை நிகழ்வு ஒன்று மதுரைக்கு அரசி அன்னை ஸ்ரீ மீனாட்சி மட்டுமே நாயக்கர் வம்சத்தில் கடைசி அரசி பெயர் மீனாட்சி ஆகும் அவர் ஆட்சியில் தானும் மீனாட்சி அரசி என இருக்க இறுதியில் தற்கொலை செய்ததே வரலாறு ஆனது அதோடு நாயக்கர் ஆட்சியும் மதுரையில் முடிவுக்கு வந்தது
ஸ்ரீ மீனாட்சி அம்மன் அணிந்திருக்கும் ஆபரணங்கள் அனைத்திலும் முத்து, மரகதகற்கள், வைரம், வைடூரியம், கோமேதகம், கெம்பு, பவளம், மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. பெரிய முத்து மேற்கட்டி இதில் இருதலையாளி, கிளி, புலி, பறவைகள், தாமரைப்பூ, சூரிய காந்தியின் உருவங்கள் 71,755 முத்துக்கள் பதிந்துள்ளன. முத்து உச்சிக் கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்தங்கிகள், முத்து மாலைகள். முத்துக் கடிவாளம் ஆகிய முத்தாரங்கள்.மீனாட்சி அம்மன் கையில் பிடித்திருக்கும் ஒற்றைக்கிளி பெரிய முத்துக்களால் ஆனது. பட்டாபிஷேக கிரீடம், இதன் எடை 134 தோலா. 920 மாணிக்கம், 78 பலச்ச வைரம், 11 மரகதம், 7 நீலம், 8 கோமேதகம் பகிக்கப்பெற்றது.
வைர கிரீடம் 3 ஆயிரத்து 500 கிராம் எடையுள்ளது. இதில் வெளிநாட்டில் பட்டை தீட்டப்பட்ட 399 காரட் எடையுள்ள முதல் தரமான 3 ஆயிரத்து 345 வைர கற்களும், 600 காரட் எடையுள்ள 4 ஆயிரத்து 100 சிவப்பு கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. இது தவிர எட்டரை காரட் எடையுள்ள ஒரு மரகத கல்லும், அதே எடையில் ஒரு மாணிக்க கல்லும் பொருத்தப்பட்டுள்ளன. கிரீடத்தின் உயரம் பதிநான்கரை அங்குலம். அதன் அடிப்பகுதி சுற்றளவு 20 அங்குலம். சிற்ப சாஸ்திர முறைப்படி அமைந்தது.ரத்தின செங்கோல், இதன் எடை 67 தோலா. இதில் 761 சிவப்பு கற்கள், 21 பலச்ச வைரங்கள், 269 மரகதம், 44 முத்துக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாசுமாரை கிரீடம், தலைப்பாகை கிரீடம். அம்மன் தங்க கவசம் 7 ஆயிரம் கிராம் எடையுள்ளது.நீலநாயக பதக்கம் மன்னர் திருமலை நாயக்கமன்னர் அளித்தது. ஆபரணங்களில் இதுவே மிக அற்புதமானது. எந்த பக்கம் பார்த்தாலும் பளபளப்பும், ஒளியும் ஊடுறுவி பளிச்சிடும். இதன் எடை 21 தோலா. இதில் 10 பெரிய நீல கற்கள், 2 கெம்பு, 1 கோமேதம் பதிந்துள்ள ' வெள்ளாறு அதுவடக்கா மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி
--பெருந்தொகை கூற்றில் கட்டியக்காரர்கள் கூறுவது பாகுபலி திரைப்படத்தில் வரும் பொய்யான எல்கை இல்லை என்பதே, ''போற்றுவதும் இழைத்த படியிதுவோ வெங்கனா வென்றன்
றழைத்த வழுகுரலேயால் - தழைத்தகுடை
மன்னவர்கோன் வாணன் வடிவேலால் தோற்றுடைந்த
தென்னவர்கோன் போன திசை'
(Inscriptions of The Pudukottai State, No. 678) பேசுவதும்
மாமதுரை வரலாறே, அதேபோல் சின்னமனூர் செப்புப்பட்டயம் கூறும் 'மதுரைச் சங்கம் வைத்து மாபாரதம் தமிழ்படித்து' என்ற வாக்கியம் மதுரை பாண்டியர் தேச கொற்கை மீனவரான புலவர் நக்கீரர் துவங்கி வள்ளல் பாண்டித்துரைத் தேவர் வரை பொருந்தும். தற்காலத்தில் வரலாறு அறியாத சமூகம் ஒரு தலைமுறையாக தங்கள் குடும்ப வரலாறே மறந்து போய நிற்க! நாம் கடந்த கால வரலாறு பதிவு செய்வது அவர்கள் தேடும் காலத்தில் இது தீர்வாகும் என்ற பொது நீதிக்கானது. மதுரை மாநகரை நிர்மாணித்த மன்னர் குலசேகர பாண்டியன், அதற்கு முன் அது கூடல் நகராகும் "மங்களம் அருள்வாள் மதுரைக்கு அரசி அங்கையர்கன்னி மதுரை மீனாட்சி"க்கு நாளை திருக்கல்யாணம்.
கருத்துகள்