உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தாக்கப் செய்த ஆட்கொணர்வு மனுவில் மூத்த வழக்கறிஞர் வாதம்
முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலிலுள்ளார்.
அவருக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையிலிருந்து வருகிறார். இதற்கிடையே சட்ட விதிமுறைகளின் படி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வில்லை எனவும், இடைக்கால ஜாமின் வழங்கிடவும் உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தாக்கப் செய்த ஆட்கொணர்வு மனுவை ஜூன் 15 ஆம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், இடைக்கால ஜாமின் வழங்க மறுத்தாலும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த (எச் சி பி) ஹேபியஸ் கார்ப்பஸ் மனு விசாரணையில் பழைய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதம் செய்தார் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடுகையில் நடிகர் சஞ்சய் தத், நக்கீரன் ராஜகோபால் வழக்குகளின் தீர்ப்புகளை மேற்கோளுடன்
பல தீர்ப்புகளை சுட்டிக் காட்டினார் என்.ஆர்.இளங்கோ அதில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்டவிரோதமுள்ளதென்றும் கைது சட்டவிரோதமில்லை என்றால் தான் ஆட்கொணர்வு வழக்குத் தேவையில்லையென்றும் நேற்றைய உச்சநீதிமன்ற விசாரணையை மேற்கோள் காட்டி வாதாடினார். செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்துள்ள ஆட்கொணர்வு மனு, விசாரணைக்கு உகந்ததுதான் என்பதற்கு ஆதரவாக உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் பலவற்றைச் சுட்டிகாட்டினார் .வழக்கறிஞர் அப்பாஸ் என்ஐஏவால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டு, இதே நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதை இளங்கோ குறிப்பிட்டார். தொடர்ந்து சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருந்தால் ஆட்கொணர்வு மனு தொடரலாம் என நடிகர் சஞ்சய் தத் வழக்கில் உச்ச நீதிமன்றம் 1994 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டினார் சட்டத்தால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென்று நக்கீரன் ராஜகோபால் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கைதுக்கான காரணங்களை தெரிவிக்காமல் யாரையும் கைது செய்யக்கூடாது என்பதற்காகவே அரசியல் சாசன சட்டத்தின் 15 ஏ பிரிவை சேர்ந்திருக்கிறார்கள் செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டியது அடிப்படை உரிமை. நீதிமன்றக் காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானதாக இருந்தால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் என உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை இடைக்கால உத்தரவாகக் கருத முடியாது. அரசியல் சட்டத்தின் 226 வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எல்கார் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் நவ்லகா வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சுட்டிக் காட்டி செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதம் என்பதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது எனத் தெரிவித்தார்.
ஆட்கொணர்வு மனு ஜூன் 14 காலை 10.30 மணிக்கே தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மாவட்ட நீதிபதி மாலை 5.30 மணிக்கே செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற காவலுக்கு அனுப்பக்கோரும் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நாங்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி இயந்திரத்தனமாக நிராகரித்துவிட்டார் என்றும் தெரிவித்தார்.
என்.ஆர்.இளங்கோ மேற்கோள் காட்டிய பல்வேறு வழக்கின் தீர்ப்புகளால் அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் அதிர்ந்து ஒருகட்டத்தில் ஆட்கொணர்வு வழக்கில் இவ்வளவு நீண்ட வாதம் அவசியமா என்ற கேள்வியை முன்வைத்தது அமலாக்கத்துறை வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கிற்கு அவசியம் என்பதாலேயே பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது, குற்ற விசாரணை முறைச் சட்டப்பிரிவை அமலாக்கத்துறை பின்பற்றவில்லை எனவும் தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையில் முன்னாள் தமிழ்நாடு முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயக் குழாய் அடைப்பு நோய் காரணமாக இருதயத் தமனி பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடந்திருப்பதாக காவேரி மருத்துவ மனையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது
Coronary artery bypass surgery :-
"It aims to bypass narrowings in heart arteries by using arteries or veins harvested from other parts of the body, thus restoring adequate blood supply to the previously ischemic (deprived of blood) heart"
இருதயக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய உடலின் வேறு பகுதியிலிருந்து நரம்புகளை வெட்டி எடுத்து இருதயத்துக்குச் செல்லும் அடைப்பான நரம்புகளுக்க மாற்றாக இரத்தம் செல்லும் வழியை உருவாக்குவார்கள் .
அரசு மருத்துவ மனை செய்திக் குறிப்பில் -
triple vessel disease எனச் சொல்லி
triple vessel disease, as its name suggests, affects all three of the heart's major blood vessels (left anterior descending, left circumflex, right coronary artery).
கிட்டதட்ட அவரது இருதயதுக்குள் செல்லும் மூன்று பெரிய ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்கிறது அரசு மருத்துவமனையின் செய்திக் குறிப்பு
காவேரி மருத்துவமனையின் சார்பில் வந்த தகவலில் Revascularization - refers to a group of medical treatments that restore blood flow to parts of your heart when that flow is limited or blocked.
இதில் அதிர்வு தரும் செய்தி யாதெனில் காவேரி மருத்துவ மனை அவருக்கு நான்கு தமணிகள் எடுத்து பயன்படுத்தி இருதய ரத்த ஓட்டத்தை சரி செய்திருப்பதாகச் சொல்லி இருப்பது நிச்சயம் இது மிக மிக ஆபத்தான ஒரு ஆபரேஷன் எனத் தெரிகிறது ..
(நமது மருத்துவ நண்பரிடம் பேசியதை முன்பே கேட்டு விட்டுப் பதிவிடுகிறேன்)
அபண்டிஸ் ஆபரேஷன் செய்ததாக காசு பிடுங்குவது போல இதைச் செய்ய முடியாது - மிக சாதாரன முறையில் இந்தத் தமனி மாற்று ஆபரேஷன் கண்டு பிடிக்க முடியும் ஆனால் ஏமாற்ற முடியாது என்று சொல்லுகிறார்.
கருத்துகள்