முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தாக்கப் செய்த ஆட்கொணர்வு மனுவில் மூத்த வழக்கறிஞர் வாதம்

முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த  வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலிலுள்ளார்.



அவருக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையிலிருந்து வருகிறார். இதற்கிடையே சட்ட விதிமுறைகளின் படி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வில்லை எனவும், இடைக்கால ஜாமின் வழங்கிடவும் உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனைவி  மேகலா தாக்கப் செய்த ஆட்கொணர்வு  மனுவை ஜூன்  15 ஆம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், இடைக்கால ஜாமின் வழங்க மறுத்தாலும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த (எச் சி பி) ஹேபியஸ் கார்ப்பஸ் மனு விசாரணையில்  பழைய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதம் செய்தார் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடுகையில்  நடிகர் சஞ்சய் தத், நக்கீரன் ராஜகோபால் வழக்குகளின் தீர்ப்புகளை மேற்கோளுடன்



பல தீர்ப்புகளை சுட்டிக் காட்டினார் என்.ஆர்.இளங்கோ அதில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்டவிரோதமுள்ளதென்றும் கைது சட்டவிரோதமில்லை என்றால் தான் ஆட்கொணர்வு வழக்குத் தேவையில்லையென்றும் நேற்றைய உச்சநீதிமன்ற விசாரணையை மேற்கோள் காட்டி  வாதாடினார். செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்துள்ள ஆட்கொணர்வு மனு, விசாரணைக்கு உகந்ததுதான் என்பதற்கு ஆதரவாக  உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் பலவற்றைச் சுட்டிகாட்டினார் .வழக்கறிஞர் அப்பாஸ் என்ஐஏவால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டு, இதே நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதை இளங்கோ குறிப்பிட்டார். தொடர்ந்து சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருந்தால் ஆட்கொணர்வு மனு தொடரலாம் என நடிகர் சஞ்சய் தத் வழக்கில் உச்ச நீதிமன்றம் 1994 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டினார்  சட்டத்தால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென்று நக்கீரன் ராஜகோபால் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கைதுக்கான காரணங்களை தெரிவிக்காமல் யாரையும் கைது செய்யக்கூடாது என்பதற்காகவே அரசியல் சாசன சட்டத்தின் 15 ஏ பிரிவை சேர்ந்திருக்கிறார்கள் செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டியது அடிப்படை உரிமை. நீதிமன்றக் காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானதாக இருந்தால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் என உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை இடைக்கால உத்தரவாகக் கருத முடியாது. அரசியல் சட்டத்தின் 226 வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.



எல்கார் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் நவ்லகா வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சுட்டிக் காட்டி செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதம் என்பதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது எனத் தெரிவித்தார்.

 ஆட்கொணர்வு மனு ஜூன் 14 காலை 10.30 மணிக்கே தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மாவட்ட நீதிபதி மாலை 5.30 மணிக்கே செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற காவலுக்கு அனுப்பக்கோரும் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நாங்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி இயந்திரத்தனமாக நிராகரித்துவிட்டார் என்றும் தெரிவித்தார்.   

  என்.ஆர்.இளங்கோ மேற்கோள் காட்டிய பல்வேறு வழக்கின் தீர்ப்புகளால் அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் அதிர்ந்து ஒருகட்டத்தில் ஆட்கொணர்வு வழக்கில் இவ்வளவு நீண்ட வாதம் அவசியமா என்ற கேள்வியை முன்வைத்தது அமலாக்கத்துறை வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ,        வழக்கிற்கு அவசியம் என்பதாலேயே பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது, குற்ற விசாரணை முறைச் சட்டப்பிரிவை அமலாக்கத்துறை பின்பற்றவில்லை எனவும் தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையில் முன்னாள் தமிழ்நாடு முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  இருதயக் குழாய் அடைப்பு நோய் காரணமாக இருதயத்  தமனி பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடந்திருப்பதாக காவேரி மருத்துவ மனையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது 

Coronary artery bypass surgery :- 

"It aims to bypass narrowings in heart arteries by using arteries or veins harvested from other parts of the body, thus restoring adequate blood supply to the previously ischemic (deprived of blood) heart" 

இருதயக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய உடலின் வேறு பகுதியிலிருந்து நரம்புகளை வெட்டி எடுத்து இருதயத்துக்குச் செல்லும் அடைப்பான நரம்புகளுக்க மாற்றாக இரத்தம் செல்லும் வழியை உருவாக்குவார்கள் .

அரசு மருத்துவ மனை செய்திக் குறிப்பில்  - 

triple vessel disease  எனச் சொல்லி 

 triple vessel disease, as its name suggests, affects all three of the heart's major blood vessels (left anterior descending, left circumflex, right coronary artery). 

கிட்டதட்ட அவரது இருதயதுக்குள்  செல்லும் மூன்று பெரிய ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்கிறது  அரசு மருத்துவமனையின் செய்திக் குறிப்பு 

காவேரி மருத்துவமனையின் சார்பில் வந்த தகவலில்  Revascularization - refers to a group of medical treatments that restore blood flow to parts of your heart when that flow is limited or blocked.

இதில் அதிர்வு தரும் செய்தி யாதெனில் காவேரி மருத்துவ மனை அவருக்கு நான்கு தமணிகள் எடுத்து பயன்படுத்தி இருதய ரத்த ஓட்டத்தை சரி செய்திருப்பதாகச் சொல்லி இருப்பது நிச்சயம் இது மிக மிக ஆபத்தான ஒரு ஆபரேஷன் எனத் தெரிகிறது .. 

(நமது மருத்துவ நண்பரிடம் பேசியதை முன்பே கேட்டு விட்டுப் பதிவிடுகிறேன்) 

அபண்டிஸ் ஆபரேஷன் செய்ததாக காசு பிடுங்குவது   போல இதைச் செய்ய முடியாது - மிக சாதாரன முறையில் இந்தத் தமனி மாற்று ஆபரேஷன் கண்டு பிடிக்க முடியும் ஆனால் ஏமாற்ற முடியாது என்று சொல்லுகிறார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...