முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை அமலாக்கத் துறையின் இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா பதவியில் நீடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

அமலாக்கத் துறையின் இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை  பதவியில் நீடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி


அமலாக்கத் துறையின்  இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா செப்டம்பர் மாதம்15 ஆம் தேதி வரை பதவியில் நீடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அமலாக்கத் துறையின் இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு மத்திய அரசு மூன்றாவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியதில் இந்தாண்டு நவம்பர் மாதம் வரை அவர் பதவியில் தொடர்வாரென அறிவிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானதென ஜூலை மாதம்  11-ஆம் தேதி அறிவித்தது. மேலும், ஜூலை மாதம்  31-ஆம் தேதிக்குள் எஸ்.கே.மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டதுடன்  அதற்குள் மத்திய அரசு மாற்று ஏற்பாட்டைச் செய்ய வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம்  உத்தரவில் கூறியிருந்தது அவரது பதவிக்கான காலக்கெடு முடிய சில தினங்களே உள்ள நிலையில், அவரை அக்டோபர் 15-ஆம் தேதி வரை பதவியில் நீடிக்க அனுமதியளிக்க வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா 12 பக்கத்திலான மனுவை தாக்கல் செய்தார். நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பல வழக்குகள்


விசாரணையிலுள்ளதால், அவர் பதவியில் தொடர அனுமதியளிக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டது மேலும் வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு துஷார் மேத்தா  கோரிக்கை விடுத்ததையடுத்து,  வழக்கு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரித்த நீதிபதிகள், எஸ்.கே.மிஸ்ரா அமலாக்கத் துறையின்  இயக்குநராக செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை பதவியில் நீடிக்கலாமென்று உத்தரவிட்டனர். அமலாக்கத் துறையின் இயக்குநராக சஞ்சய் குமார் மிஸ்ரா (வயது 63) 2018-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.இரண்டாண்டு பதவிக்காலம் 2020-ஆம் ஆண்டு முடிந்த பின் அவருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பும் வழங்கியது. அப்போதே இதை எதிர்த்து ‘காமன் காஸ்’ எனும் தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு வரும் நேரத்தில் அவரது பதவிக் காலம் முடிய இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் பதவி நீட்டிப்புக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை அனுமதி வழங்கியது. அப்போதே அவருக்கு மேலும் பதவி நீட்டிப்பு வழங்க கூடாது எனவும் கூறியிருந்த நிலையில்,


மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) சட்டம் மற்றும் டெல்லி சிறப்புக் காவல்துறை அமைப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்ததன்படி அமலாக்கத் துறை, சிபிஐ தலைவர்களுக்கு இரண்டாண்டு பதவி காலத்துக்குப் பின்பு மேலும் ஒராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியதன்படி மிஸ்ராவின் பதவிக் காலம் 2022 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. 

அந்த வழக்கின் பின்புலத்தைப் பார்த்தால் : அமலாக்கத் துறையின் இயக்குநராக சஞ்சய் குமார்  மிஸ்ராவின் பதவிக் காலம் 2022 நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது.  நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து ஜூலை மாதம் 11-ஆம் தேதியில் தீர்ப்பளித்த நீதிபதிகள் கூறுகையில், “அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு 3-வது முறையாக அளிக்கப்பட்ட பதவி நீட்டிப்பு சட்டவிரோதம். அவர் ஜூலை மாதம் 31-ஆம் தேதிக்குள் பதவியிலிருந்து விலக வேண்டும்” நிலையில், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை பதவியில் நீடிக்க உச்ச நீதிமன்றம் இப்போது அனுமதி அளித்துள்ளது.

 சஞ்சய் குமார் மிஸ்ரா 1984-ஆம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரி. அமலாக்கத்துறையில் நியமனத்திற்கு முன் அவர் டெல்லி வருமான வரித்துறையின் தலைமை ஆணையர் பொருளாதார நிபுணரானவர் பல வழக்குகளை திறம்பட விசாரித்துள்ளார். இவர் அமலாக்கத் துறை இயக்குநரான பின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் விசாரணையில் சிக்கினர். அதனால் அமலாகத் துறையை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறதென அவர்கள் குற்றம்சாட்டினர்.

என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...