முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோசடி ‘நியோ மேக்ஸ்’ நிறுவன அலுவலகங்களில் பொருளாதார குற்றத் தடுப்புக் காவல்துறை சோதனை

மதுரை சுற்றுவட்டாங்களில், மோசடி ‘நியோ மேக்ஸ்’ நிறுவன அலுவலகங்களில் பொருளாதார குற்றத் தடுப்புக் காவல்துறை  நடத்திய அதிரடியான சோதனையில் அசையும் அசையா சொத்து ஆவணங்கள், மற்றும் பொருட்களைக் கைப்பற்றினர்.


விருதுநகரில் தலைமையிடமாகக்கி ‘நியோ-மேக்ஸ்’ எனும் ரியல் எஸ்டேட் தொழில் துவங்கிய நிறுவனம் நிறுவனத்துக்குச்  சொந்தமான பனிரெண்டுக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் பல மாவட்டத்தில் இயங்கிய. நிறுவனங்கள் கூடுதல் வட்டி  தருவதாகவும், குறிப்பிட்ட ஆண்டில் அசல் தொகைக்கு இரடிப்புத் தொகை வழங்குவதாகவும் ஆசை வார்ததைகளைக்  கூறியும் , ஒரே இடத்தை பல நபருக்கு எழுதிக் கொடுத்து லாபம் திருப்பித்தருவதாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்தனர். ஆனால் நிலத்தில் யாருக்கும் சட்டப்படி உரிமை இல்லை ஆனால் செபி அனுமதி இல்லாத முதலீடு மட்டுமே இதற்கு ரிசர்வ் பேங்கும் முன் அனுமதி இல்லை  ஆனால் அதன் மூலம் சுமார் ரூபாய்.5,000 கோடிக்கு மேல் நில மதிப்பை விட கூடுதல் பணம் வசூலித்து ஏமாற்றியதாக பல்வேறான  புகார்கள் பலரால் எழுப்பப்பட்டன.



அதனடிப்படையில் நியோ மேக்ஸ் நிறுவனத்தில் அதிரடியாகச் சோதனை நடந்த நிலையில், சாத்தூர் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரில், ‘நியோ மேக்ஸ்’ மற்றும் துணை நிறுவனங்களின் இயக்குநர்கள் மதுரை கமலக் கண்ணன் (வயது 55), பாலசுப்பிரமணியன் (வயது 54), திருச்சிராப்பள்ளி வீரசக்தி (வயது 49), மற்றும் அதன் தலைமை முகவர்களான காரியாப்பட்டி மணிவண்ணன், செல்லம்மாள் உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் மீது மதுரை பொருளாதாரக் குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை  வழக்குப் பதிவு செய்ததில் இதுவரை திருநெல்வேலி நிறுவன இயக்குநர்கள் மற்றும் தேவகோட்டை சைமன் ராஜா, மதுரை அச்சம்பத்து கபில், தூத்துக்குடி இசக்கி முத்து, சகாயராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் முக்கிய நபர்களான கமலக்கண்ணன் உள்ளிட் 3 பேர் தொடர்ந்து தலை மறைவாகியுள்ள நிலையில்  காவல்துறை தேடுகின்றனர்.இப்படி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அந்தந்தப் பகுதியிலுள்ள இந்த நிறுவனங்களின் சில முகவர்கள், ‘முதலீட்டாளர்களிடம் காவல்துறையில் புகாரளித்தால் பணம் கிடைக்காதென மிரட்டியும், ‘நாங்கள் பணத்தை வாங்கித் தர ஏற்பாடு செய்கிறோம் அதுவரை காத்திருங்கள் எங்கும் போகாதீர்கள் ’ என செல்போன் மூலம் பேசியும், குறுந்தகவல்களை அனுப்பியும் வருவதனால், முதலீட்டாளர்கள் புகாரளிக்கத் தயங்கிய நிலையில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பாதித்த நபர்களிடம், ‘புகார் மனு மேளா’ என  நூற்றுக்கும் மேற்பட்ட புகார் மனுக்களும் பெறப்பட்டு  விசாரிக்கின்றனர்.


இந்த நிலைக்கிடையில், ‘நியோ- மேக்ஸ்’ மற்றும் அதன் தொடர்புடைய மதுரையிலுள்ள ‘நியோ மேக்ஸ் ’ டெவலப்பர், லைவ் ஸ்மார்ட் பிராப்ரட்டி, ரியல்டர்ஸ், எக்ப்ரோ ரிடைல், லைவ் பிரைடு பிராப்ரட்டி, சென்சூரியன், வென்டுரா பிராப்ரட்டி ஆகிய நிறுவனங்களின்  மீதும், விருதுநகரில் சபோரோ பிராப்ரட்டி, அட்லாண்டினோ டெவலப்பர் நிறுவனத்திலும், திண்டுக்கல் முத்து நகரிலுள்ள லூமை பிராப்ரட்டிஸ், காரைக்குடி 100 அடிச் சாலையிலுள்ள ரிபேகோ பிராப்ரட்டி, மற்றும் திருநெல்வேலி  பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் ரீகேஷன் பிராப்ரட்டி, தேனி - பழைய ஸ்ரீராம் தியேட்டர் அருகில் அஸ்டோனீஸ் பிராப்ரட்டி, கம்பத்தில் மிலைனோ டெவலப் பர்ஸ், திருவாரூர் கீழ வீதியிலுளள லிபர்டைல்ஸ் நிறுவன அலுவலகங்களில் அந்தந்த மாவட்டப் பொருளாதாரக் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர்  குழுக்களாகப் பிரிந்து ஒரே நாளில் சோதனை நடத்தினர்.


மதுரையில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்  குப்புசாமி தலைமையில் நடந்த சோதனைகளில் மோசடி தொடர்பாக சொத்து பதிவு ஆவணங்கள், பொருட்களைக் கைப்பற்றியதாக காவல்துறைத் தகவல்  தெரிவிக்கிறது.ரூபாய் 5000 கோடியை சுருட்டியதாக நியோமேக்ஸ் மீது புகார்! 30 இடங்களில் அதிரடி சோதனைக்குப் பின் தற்போது புகார்கள் குவிகிறது . இந்த நிலையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் முக்கியமான  அறிவிப்பை வெளியிட்டுள்ளதில் நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுக்க வசதியாக ஜூலை மாதம்  22 ஆம் தேதி காலை 9 மணிக்கு மனு மேளா நடைபெறுமென அறிவிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்டோர் உரிய ஆவணங்களுடன் வந்து புகார் கொடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் 28 ஆம் தேதி நல்ல செய்தி வரும் என்பதால் யாரும் புகார் அளிக்க வேண்டாம் என நியோ மேக்ஸ் நிறுவனம் வாட்ஸ் ஆப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் புகார் கொடுக்கத் தயங்கியதாகத் தெரிகிறது. சுமார் ரூ 5000 கோடி மோசடி செய்துள்ள நிலையில் இந்த நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை  தற்போது சோதனை நடத்தி வருகிறார்கள். தென் தமிழ்நாட்டில் விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. ஒரே சொத்தை குறைந்த விலைக்கு வாங்கி இலஞ்சம் மூலம் அப்ரூவல் நகர் ஊரமைப்பு மூலம்பெற்று அதை அதிக விலைக்கு பலருக்கு விற்று சொத்து சுவாதீனம் இல்லாமல் மக்கள் முதலீட்டால் கைமுதலின்றி பல கோடிகளை வாரிச் சுருட்டிய இவர்கள்  குறித்து நமது இதழ் ஏற்கனவே சந்தேகம் எழுப்பிய நிலையில் அது தற்போது நிரூபனமாகியுள்ளது. இனி புகார்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், அப்போது தான் மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் செபி தலையிடும், பின் முதலீட்டாளர்களுக்கு பி ஏ சி எல் நிறுவனத்தின் சொத்தை முடக்கி அதை விற்று முதலீடு செய்த நபர்களுக்கு உச்சநீதிமன்றம் வழி காட்டி லோதா கமிட்டி அமைத்த நிலையில் உள்ளது போல நியோ மேக்ஸ் நிலையும் வரும் ..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.