முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோசடி ‘நியோ மேக்ஸ்’ நிறுவன அலுவலகங்களில் பொருளாதார குற்றத் தடுப்புக் காவல்துறை சோதனை

மதுரை சுற்றுவட்டாங்களில், மோசடி ‘நியோ மேக்ஸ்’ நிறுவன அலுவலகங்களில் பொருளாதார குற்றத் தடுப்புக் காவல்துறை  நடத்திய அதிரடியான சோதனையில் அசையும் அசையா சொத்து ஆவணங்கள், மற்றும் பொருட்களைக் கைப்பற்றினர்.


விருதுநகரில் தலைமையிடமாகக்கி ‘நியோ-மேக்ஸ்’ எனும் ரியல் எஸ்டேட் தொழில் துவங்கிய நிறுவனம் நிறுவனத்துக்குச்  சொந்தமான பனிரெண்டுக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் பல மாவட்டத்தில் இயங்கிய. நிறுவனங்கள் கூடுதல் வட்டி  தருவதாகவும், குறிப்பிட்ட ஆண்டில் அசல் தொகைக்கு இரடிப்புத் தொகை வழங்குவதாகவும் ஆசை வார்ததைகளைக்  கூறியும் , ஒரே இடத்தை பல நபருக்கு எழுதிக் கொடுத்து லாபம் திருப்பித்தருவதாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்தனர். ஆனால் நிலத்தில் யாருக்கும் சட்டப்படி உரிமை இல்லை ஆனால் செபி அனுமதி இல்லாத முதலீடு மட்டுமே இதற்கு ரிசர்வ் பேங்கும் முன் அனுமதி இல்லை  ஆனால் அதன் மூலம் சுமார் ரூபாய்.5,000 கோடிக்கு மேல் நில மதிப்பை விட கூடுதல் பணம் வசூலித்து ஏமாற்றியதாக பல்வேறான  புகார்கள் பலரால் எழுப்பப்பட்டன.



அதனடிப்படையில் நியோ மேக்ஸ் நிறுவனத்தில் அதிரடியாகச் சோதனை நடந்த நிலையில், சாத்தூர் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரில், ‘நியோ மேக்ஸ்’ மற்றும் துணை நிறுவனங்களின் இயக்குநர்கள் மதுரை கமலக் கண்ணன் (வயது 55), பாலசுப்பிரமணியன் (வயது 54), திருச்சிராப்பள்ளி வீரசக்தி (வயது 49), மற்றும் அதன் தலைமை முகவர்களான காரியாப்பட்டி மணிவண்ணன், செல்லம்மாள் உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் மீது மதுரை பொருளாதாரக் குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை  வழக்குப் பதிவு செய்ததில் இதுவரை திருநெல்வேலி நிறுவன இயக்குநர்கள் மற்றும் தேவகோட்டை சைமன் ராஜா, மதுரை அச்சம்பத்து கபில், தூத்துக்குடி இசக்கி முத்து, சகாயராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் முக்கிய நபர்களான கமலக்கண்ணன் உள்ளிட் 3 பேர் தொடர்ந்து தலை மறைவாகியுள்ள நிலையில்  காவல்துறை தேடுகின்றனர்.இப்படி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அந்தந்தப் பகுதியிலுள்ள இந்த நிறுவனங்களின் சில முகவர்கள், ‘முதலீட்டாளர்களிடம் காவல்துறையில் புகாரளித்தால் பணம் கிடைக்காதென மிரட்டியும், ‘நாங்கள் பணத்தை வாங்கித் தர ஏற்பாடு செய்கிறோம் அதுவரை காத்திருங்கள் எங்கும் போகாதீர்கள் ’ என செல்போன் மூலம் பேசியும், குறுந்தகவல்களை அனுப்பியும் வருவதனால், முதலீட்டாளர்கள் புகாரளிக்கத் தயங்கிய நிலையில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பாதித்த நபர்களிடம், ‘புகார் மனு மேளா’ என  நூற்றுக்கும் மேற்பட்ட புகார் மனுக்களும் பெறப்பட்டு  விசாரிக்கின்றனர்.


இந்த நிலைக்கிடையில், ‘நியோ- மேக்ஸ்’ மற்றும் அதன் தொடர்புடைய மதுரையிலுள்ள ‘நியோ மேக்ஸ் ’ டெவலப்பர், லைவ் ஸ்மார்ட் பிராப்ரட்டி, ரியல்டர்ஸ், எக்ப்ரோ ரிடைல், லைவ் பிரைடு பிராப்ரட்டி, சென்சூரியன், வென்டுரா பிராப்ரட்டி ஆகிய நிறுவனங்களின்  மீதும், விருதுநகரில் சபோரோ பிராப்ரட்டி, அட்லாண்டினோ டெவலப்பர் நிறுவனத்திலும், திண்டுக்கல் முத்து நகரிலுள்ள லூமை பிராப்ரட்டிஸ், காரைக்குடி 100 அடிச் சாலையிலுள்ள ரிபேகோ பிராப்ரட்டி, மற்றும் திருநெல்வேலி  பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் ரீகேஷன் பிராப்ரட்டி, தேனி - பழைய ஸ்ரீராம் தியேட்டர் அருகில் அஸ்டோனீஸ் பிராப்ரட்டி, கம்பத்தில் மிலைனோ டெவலப் பர்ஸ், திருவாரூர் கீழ வீதியிலுளள லிபர்டைல்ஸ் நிறுவன அலுவலகங்களில் அந்தந்த மாவட்டப் பொருளாதாரக் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர்  குழுக்களாகப் பிரிந்து ஒரே நாளில் சோதனை நடத்தினர்.


மதுரையில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்  குப்புசாமி தலைமையில் நடந்த சோதனைகளில் மோசடி தொடர்பாக சொத்து பதிவு ஆவணங்கள், பொருட்களைக் கைப்பற்றியதாக காவல்துறைத் தகவல்  தெரிவிக்கிறது.ரூபாய் 5000 கோடியை சுருட்டியதாக நியோமேக்ஸ் மீது புகார்! 30 இடங்களில் அதிரடி சோதனைக்குப் பின் தற்போது புகார்கள் குவிகிறது . இந்த நிலையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் முக்கியமான  அறிவிப்பை வெளியிட்டுள்ளதில் நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுக்க வசதியாக ஜூலை மாதம்  22 ஆம் தேதி காலை 9 மணிக்கு மனு மேளா நடைபெறுமென அறிவிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்டோர் உரிய ஆவணங்களுடன் வந்து புகார் கொடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் 28 ஆம் தேதி நல்ல செய்தி வரும் என்பதால் யாரும் புகார் அளிக்க வேண்டாம் என நியோ மேக்ஸ் நிறுவனம் வாட்ஸ் ஆப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் புகார் கொடுக்கத் தயங்கியதாகத் தெரிகிறது. சுமார் ரூ 5000 கோடி மோசடி செய்துள்ள நிலையில் இந்த நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை  தற்போது சோதனை நடத்தி வருகிறார்கள். தென் தமிழ்நாட்டில் விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. ஒரே சொத்தை குறைந்த விலைக்கு வாங்கி இலஞ்சம் மூலம் அப்ரூவல் நகர் ஊரமைப்பு மூலம்பெற்று அதை அதிக விலைக்கு பலருக்கு விற்று சொத்து சுவாதீனம் இல்லாமல் மக்கள் முதலீட்டால் கைமுதலின்றி பல கோடிகளை வாரிச் சுருட்டிய இவர்கள்  குறித்து நமது இதழ் ஏற்கனவே சந்தேகம் எழுப்பிய நிலையில் அது தற்போது நிரூபனமாகியுள்ளது. இனி புகார்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், அப்போது தான் மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் செபி தலையிடும், பின் முதலீட்டாளர்களுக்கு பி ஏ சி எல் நிறுவனத்தின் சொத்தை முடக்கி அதை விற்று முதலீடு செய்த நபர்களுக்கு உச்சநீதிமன்றம் வழி காட்டி லோதா கமிட்டி அமைத்த நிலையில் உள்ளது போல நியோ மேக்ஸ் நிலையும் வரும் ..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...