முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் வலியுறுத்தல்

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், அதே சமயம் நீதிமன்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும்: ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண ஆயுதப்படை தீர்ப்பாயத்தை (ஏ.எஃப்.டி) பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார், அதே நேரத்தில் நீதிமன்ற செயல்முறை எந்த விதிமீறலும் இல்லாமல் தீவிரமாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 


ஆகஸ்ட் 04, 2023 அன்று புதுதில்லியில் ஏ.எஃப்.டி எழுச்சி தினத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவற்றைக்  குறைக்க சிறப்பு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.  இத்தகைய எண்ணிக்கை மக்களுக்கு சரியான நேரத்தில் நீதி வழங்கப்படாமை சவாலாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.  நீதித்துறை செயல்முறையில் கவனம் செலுத்தாமல் விரைவாக தீர்ப்பது இன்னும் ஆபத்தானது என்றார் அவர்.

'தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி' என்று சொல்லப்படுகிறது. நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை குறையும். விரைவு நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் போன்றவை. நீதித்துறை செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக அவ்வப்போது நிறுவப்படுகின்றன. ஆனால், நீதித்துறை நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில்'நீதி புதைக்கப்படும்' அபாயம் உள்ளது. வழக்குகளை முடித்து, மக்களுக்கு நீதி வழங்க, நேரம் மற்றும் நடைமுறைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மனசாட்சி என்பது முக்கிய பங்கு வகிக்கும் மற்றொரு காரணியாகும். நீதி இல்லாமல் எந்த சமூகமும் முழுமை அடைய முடியாது. சரியான நேரத்தில் சரியான நபருக்கு நீதி வழங்குவது நமது கடமை" என்று ராஜ்நாத் சிங் கூறினார்

ஏ.எஃப்.டி.யின் செயல்பாட்டில் ஒரு சீரான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை மேலும் வலியுறுத்திய திரு ராஜ்நாத் சிங், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் தேவைகள், நலன்கள், வளங்கள் மற்றும் வரம்புகளை மனதில் கொண்டு வழக்குகள் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்கள் பிரதிநிதிகள் சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் தேவைகளை சமநிலையைப் பேணுவதன் மூலம் பூர்த்தி செய்யும் ஒரு ஜனநாயக அமைப்பைக் குறிப்பிட்டு அவர் அதை விளக்கினார். 2047-ம் ஆண்டுக்குள் நாடு 'அமிர்த காலத்தில்  நுழைந்து, வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளதால், சமூகத்தின் அனைத்து அடுக்குகளுக்கும் மலிவு விலையில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இந்த இலக்கை அடைய அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது என்றார் அவர்.

ஆயுதப்படை தீர்ப்பாய சட்டம், 2007 இன் படி ஏ.எஃப்.டி நிறுவப்பட்டது. இது ஆகஸ்ட் 08, 2009 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. இது முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் போர் விதவைகள் ஆகியோருக்கு விரைவான மற்றும் மலிவான நீதியை உறுதி செய்வதற்காக நிறுவப்பட்டது. ஜூன் 30, 2023 நிலவரப்படி, மொத்தம் 97,500 க்கும் மேற்பட்ட வழக்குகளில் 74,000 க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது

இந்நிகழ்ச்சியில், ஏ.எஃப்.டி இதுவரை பதிலளித்த குறிப்புகள் அடங்கிய 'ஏ.எஃப்.டி சட்ட இதழின்' முதல் தொகுதியும் பாதுகாப்பு அமைச்சரால் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ஏஎப்டி தலைவர் ராஜேந்திர மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...