முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெப்பக்காடு யானைகள் சிறப்பு முகாமைப் பார்வையிட்ட குடியரசுத் தலைவர்

 முதுமலைக்காட்டில் அமைந்த  புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் சிறப்பு முகாமைப் பார்வையிட்ட குடியரசுத் தலைவர், யானைகளைப் பராமரிப்பவர்களுடன் கலந்துரையாடினார்




முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசியாவின் பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றான தெப்பக்காடு யானைகள் முகாமை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நேற்று (05.08.2023) பார்வையிட்டார். அத்துடன் யானைகளைப் பராமரிப்பவர்களுடன் (MAHOUTS AND CAVADIES) கலந்துரையாடினார். கலந்துரையாடலின் போது, ஆஸ்கர் விருது பெற்ற "எலிஃபெண்ட் விஸ்பரெர்ஸ்" ஆவணப்படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் யானைகள் பராமரிப்பு மேலாண்மைக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்திருப்பது பெருமைக்குரியது என குடியரசுத் தலைவர் கூறினார். நமது தேசிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் ஒரு பகுதியாக, யானைகளைப் பாதுகாப்பது நமது  பொறுப்பு என்றும் அவர் கூறினார். ஆசியாவில் யானைகள் பாதுகாப்பில் முன்னோடியாகத் திகழும் வகையில் தெப்பக்காடு யானைகள் முகாமில் அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம் அமைக்கப்படுவதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் பழங்குடியின சமூகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று குடியரசுத் தலைவர் கூறினார். எனவே, அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்வதும், அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதும் மிகவும் முக்கியம் என்று அவர் தெரிவித்தார். தெப்பக்காடு யானைகள் முகாமை நிர்வகிப்பதற்கு, பெட்டக்குறும்பர், காட்டுநாயக்கர் மற்றும் மலசர் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மக்களின் பாரம்பரிய அறிவு மற்றும் அனுபவம் பயன்படுத்தப்படுவதைக் கண்டு குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு மகிழ்ச்சி தெரிவித்தார்.  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உதகை அருகேயுள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வந்து ஆஸ்கர் புகழ் பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.




பிரதமர் நரேந்திர மோடி  ஏப்ரல் மாதம் முதுலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைள் வளர்ப்பு முகாமுக்கு வந்து, அங்கு பணியாற்றி வரும் பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு  முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்கள் இருவரையும் அழைத்து பரிசுத் தொகை வழங்கிய நிலையில். இந்தத் தம்பதிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூர் வந்தவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு பிற்பகல் 3.30 மணிக்கு வந்தார்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்,  வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சா.ப.அம்ரித் ஆகியோர் மலர் கொத்துக் கொடுத்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்குச் சென்றார். தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமை பார்வையிட்டவர் அங்கு பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அங்குள்ள பழங்குடியின மக்களை சந்தித்து பேசினார். பின் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கினார்.





யானைப்பாகன்களுடன் உரையாடல்: குடியரசுத் தலைவர் முர்மு கோவை சாடிவயல் மற்றும் முதுமலை யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் 38 பேரிடம் கலந்துரையாடினார். அவர்களிடம் பேசும் போது, “முதுமலை புலிகள் காப்பகத்தை சிறப்பாக பராமரித்துள்ளீர்கள். வனவிலங்களின் பாதுகாப்புக்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளீர்கள். நமது யானைகளை பாதுகாப்பது நமது தேசியக் கடமையாகும். இந்தியாவின் கலாச்சாரத் தொன்மையைப் பாதுகாப்பதில் பழங்குடிகள் முக்கிய பங்கு ஆற்றிவருகின்றனர். இந்த பழங்குடிகளுக்கு இந்திய அரசியல் அமைப்பு உரிமை வழங்குவது மிகவும் முக்கியத்துவமானதாக உள்ளது.

உங்களுக்கு தேவையான வீடுகள், சாலை, மின்வசதிகள் செய்து தரப்படும், வனத்தை சிறப்பாக பராமரியுங்கள். அதேபோல் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி ப் படிக்க வையுங்கள். அது உங்கள் வாழ்க்கை த் தரத்தை உயர்த்தும்’’ என்றார். பின்னர், 40 ஆண்டுகளாக பாகன்களாக பணியாற்றி வரும் தேவராஜ், கிருமாறன் ஆகியோரிடம், யானைகளை எப்படி பராமரிப்பது, காட்டு யானைகளை கும்கி யானைகள் உதவியுடன் விரட்டியது எப்படி, என்னென்ன சிரமங்கள் இருந்தன ஆகிய விஷயங்களை கேட்டு வியப்படைந்தார்.

குடியரசுத் தலைவர் யானைகள் முகாமுக்கு வரும் போது அவரை வரவேற்க உண்ணி குச்சிகளால் யானைகள் வடிவமைக்கபட்டிருந்தன. அதை பயத்துடன் பார்த்து வந்த குடியரசு தலைவரிடம், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூவிடம் ‘யானைகளை பார்த்தவுடன் நான் பயந்து விட்டேன். அதன்பிறகு தான் இது யானை வடிவம் என்று தெரிந்தது’ என்று கூறிக்கொண்டே மெதுவாக குச்சி யானைகளை தொட்டு பார்த்தார். பின்னர் மாலை 5 மணிக்கு முகாமில் இருந்து மசினகுடி திரும்பினார்.அப்போது அவரை பார்க்க ஏராளமான மக்கள் காத்திருந்தனர். மக்களை பார்த்ததும் வாகனத்தை குடியரசுத் தலைவர் நிறுத்தி வெளியே வந்தார். மக்களை பார்த்து கையசைத்தும், வணக்கம் தெரிவித்தார். அங்கு கூடியிருந்த குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு, தான் கொண்டு வந்த சாக்லேட்களை வழங்கி மகிழ்ந்தார். பொதுமக்களும் குடியரசுத் தலைவரிடமிருந்து சாக்லேட்டுகளை வாங்கி மகிழ்ச்சியடைந்தனர். மசினகுடியை சேர்ந்த அனன்யா என்ற 11 வயது சிறுமி தான் எழுதிய 'தி பேர்ட்ஸ் ஆஃப் மசினகுடி' என்ற புத்தகத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் நன்றி தெரிவித்தார்

பின், மாலை 5.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மசினகுடி சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூர் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை சென்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருவதை முன்னிட்டு, தெப்பக்காடு பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தெப்பக்காடு அடர்ந்த வனப்பகுதி என்பதால், 2 கி.மீ. சுற்றளவுக்கு காவல்துறையின் அதிரடிப்படை பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். இதுதவிர மசினகுடி, மாவனல்லா, பொக்காபுரம் ஆகிய இடங்களில்  காவலர்கள்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.