முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நியோ மேக்ஸ் நில மோசடியில் பணம் முறைகேடு தனி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நியமித்து விசாரணை தீவிரம்

நியோ மேக்ஸ் நில மோசடியில் பணம் முறைகேடு வழக்கில் தனி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நியமித்து   விசாரணை தீவிரம்: ஒரு காவல் அதிகாரியின்  சகோதரர் சிக்குகுவாரா ?.


விருதுநகர் மாவட்டத்தில்  தலைமையிடமாகக் கொண்டு ‘நியோ-மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் விற்பணை  நிறுவனம் செயல்பட்டது. அது வாடிக்கையாளர்களைத் தூண்டி ஆசைகாட்டி நம்பவைத்து கூடுதல் வட்டி மற்றும் செலுத்திய தொகைக்கு இரட்டிப்புத் தொகை தருவதாகவும், பல மாவட்டங்களில் சாமானியர்கள் உள்ளிட்ட பலரிடம் முதலீடுகளை ஈர்த்ததன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தது தொடர்பாக பாதிக்கப்பட்டோர்களின்  புகார்களின் பேரில், மதுரை மாவட்ட பொருளாதாரக் குற்றத்தடுப்புக் காவல்துறை ‘நியோ மேக்ஸ்’ மற்றும் துணை நிறுவனங்களின் இயக்குநர்கள் மதுரை கமலக்கண்ணன் (வயது 55), பாலசுப்பிரமணியன் (வயது 54), திருச்சி வீரசக்தி (வயது 49) மற்றும் முகவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்


இவ்வழக்கில் இயக்குநர்களாக செயல்பட்ட தேவகோட்டை சைமன் ராஜா, மதுரை கபில், தூத்துக்குடி இசக்கிமுத்து, சகாயராஜ் மற்றும் மதுரை பைபாஸ் ரோடு எல்ஐசி அலுவலர் பத்ம நாபன், விருதுநகர் மாவட்டம் மீனாட்சிபுரம் மாரிச்சாமி (வயது 50), சிவகங்கை மாவட்டம் குமாரபட்டி மலைச்சாமி உள்ளிடட ஒன்பது  பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளநிலையில், சைமன் ராஜா, கபில், பத்மநாபன் ஆகியோர் ஜாமீன் பெற்றுள்ளனர்.




இந்த நிலையில் நியோ- மேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்காப்பட்டோர் புகார் அளிக்கத், தயங்கிய நிலையில், மதுரை, விருதுநகரில் புகார் மேளா நடத்தியும்  புகார்களை வாங்கிப் பதிவு செய்த போதிலும் தொடர்ந்து பணம் வசூலித்த முகவர்களால் புகார் அளிக்கும் நபர்கள் தடுக்கப்படுவதாகவும்  காவல்துறையினர்  தரப்பில் தெரிவிக்கின்ற நிலையில்,




இவ்வழக்கை ஏற்கெனவே மதுரை மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவுத் துணைக் கண்காணிப்பாளர் குப்புசாமி தலைமையில் ஆய்வாளர் கமர்நிசா  விசாரித்த நிலையில், தற்போது, தனி துணைக் கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு்ளதுதன்படி, புதிய துணைக் கண்காணிப்பாளராக மணிஷா  என்பவர் தலைமையின் கீழ் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள்  குழுவாக  வழக்கை விசாரிக்கின்றனர்.


காவல்துறையினர்  தரப்பில் விசாரித்த போது, “இந்த வழக்கின் முக்கிய நபர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி ஆகியோர் தொடர்ந்து தலைமறைவானவர்களை தனிப்படை மூலம் தேடி வருகிறோம். அதில் காவல் அதிகாரி ஒருவரின் சகோதரரும் இந்த நிறுவன முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வழக்கில் சிக்கிய நபர்களின் வங்கிக் கணக்குகளை காவல்துறையினர் முடக்கியதில் பட்டியலில் அந்தக் காவல்  அதிகாரியின் சகோதரரின் பெயருமுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் விதமாக நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நோக்கில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எந்த வித தயக்கமுமில்லாமல்  புகாரளித்து ஒத்துழைக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...