முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேவைப்பட்டால் நியோமேக்ஸ் மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை

நியோமேக்ஸ் மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்! சென்னை உயர்நீதிமன்றம் மதுரை  கிளை எச்சரிக்கை விடுத்தது,

நிதி நிறுவனம் நடத்தி பல்லாயிரம் கோடி மோசடி செய்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து உயர் நீதிமன்றம் , தேவைப்பட்டால் அவர்களின் தொலைபேசித் தொடர்புகள் ஆய்வுக்குட்படுத்தப்படுமெனவும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவில்லை என்றால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என மதுரை கிளை சென்னை  உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து, முக்கியக் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம் சிவகங்கை, உள்ளிட்ட கிளைகளை நிர்வகித்த 17 நிர்வாகிகள் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் சைமன் ராஜா, கபில், பத்மநாபன் ஆகிய ஐந்துபேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில்,


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சார்ந்த கௌதமி  தாக்கல் செய்த மனுவில், "என் கணவர் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார். நான் ஒரு கோடி ரூபாய் நியோமேக்ஸில் முதலீடு செய்தேன். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி வைத்துள்ளோம். மத்திய அரசின் பெரிய திட்டங்கள் அக்கு வர உள்ளது. எனவே இதில் இணைந்து அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறினர்.

 கூறியபடி பணமோ, நிலமோ திரும்ப வழங்கவில்லை. இவர்கள் முதலீட்டாளருகளின் பணத்தை கல்லூரிகள், வெளிநாடுகளில் பதுக்கி முதலீடு செய்துள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. தற்போது மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.


மோசடியில் ஈடுபட்டவர்களோடு, இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளில் சிலர், உறுதுணையாக உள்ளதாக எங்களுக்குச் சந்தேகம் எழுகிறது. மேலும், முக்கியக் குற்றவாளிகளை கைது செய்வதில், கால தாமதமும் ஆகிறது. எனவே, பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைக் கருதி இந்த வழக்கை உயர்நீதிமன்றம் CBI க்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென அவரது மனுவில் கூறியிருந்தார்.  இந்த வழக்கானது நீதிபதி K.K.ராமகிருஷ்ணன் முன்னிலையில்  விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர்  முக்கியக் குற்றவாளிகளை இது வரை கைது செய்ய வில்லை. கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஜாமினில் வெளி வந்துள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி தொடர்பானது எனவே இந்த வழக்கை CBI விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென்றார்.அப்போது அரசு தரப்பில், ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் முக்கியமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று  இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.


நியோமேக்ஸின் முக்கிய இயக்குநரான கமலக்கண்ணன், அவரின் சகோதரரும் மற்றொரு இயக்குநருமான சிங்காரவேலன் ஆகியோர் சென்னையில் தலைமறைவாக இருந்த போது, பொருளாதாரக் குற்றப்பிரிவு தனிப்படையினர் அவர்களைக் கைதுசெய்தனர். இவர்கள் மதுரைக்கு அழைத்துவரப்பட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு நீதிபதி தமிழரசி, இருவருக்கும் செப்டம்பர் மாயம்  29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி உத்தரவிட்டார். அதையடுத்து அவர்கள் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

விரைவில் மற்றவர்களையும் கைது செய்து விடுவோம். இது வரை 5000 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதிய DSP நியமிக்கப்பட்டுள்ளார். உரிய முடிவு எட்டப்படுமென வாதிட்டார். இதைத் தொடர்ந்து, கருத்துத் தெரிவித்த நீதிபதி, குற்றம் சாட்டப்படடவர்களை விரைவாகக் கைது செய்ய வேண்டும். தேவைப்பட்டால், இந்த வழக்கை விசாரிக்கும் பொருளாதாரக் குற்றப்பிரிவு, விசாரணை அதிகாரிகள் தொலைபேசித் தொடர்புகளைச் சோதனை செய்ய நேரிடுமென எச்சரிக்கை விடுத்த நீதிபதி,

இந்த வழக்கில் பிரதானக் குற்றவாளிகளை இது வரை ஏன் கைது செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பியதுடன், உரிய நடவடிக்கை எடுத்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் இல்லையேல், CBI விசாரணைக்கு வழக்கை மாற்ற நேரிடும் எனக் கூறி வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும் நியோ- மேக்ஸ் மோசடி விவகாரத்தில் முதலீட்டாளர்களுக்குப் பணம் மற்றும் நிலம் வழங்குவதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க உத்தரவிடக் கோரி நிறுவன இயக்குனர்கள் பழனிச்சாமி, பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். முதலீட்டாளர்களின் பட்டியலை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம்  உத்தரவு

 நியோ - மேக்ஸ் மோசடி வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து நியோ-மேக்ஸ் முதலீட்டாளர்கள் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

நியோ-மேக்ஸ் நிறுவனம், பொதுமக்களிடம் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் வசூலித்து மோசடி செய்தது. இந்த மோசடி தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற நிலையில்

அதில், வாடிக்கையாளர்களிடம் முழு விபரங்கள் தெரிவிக்கப்பட்டு டெபாசிட் பெறப்பட்டுள்ளது. அதற்கு ரசீதும் வழங்கப்பட்டுள்ளது. நிலங்கள் விற்கப்பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் பெயரில் பதிவு செய்து கொடுக்கப்படுகிறது. இதுவரை  தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் 16 லே-அவுட்களில் 9 கோடியே 79 லட்சத்து 89 ஆயிரம் சதுர அடி பரப்பளவு நிலங்களுக்கு (2,249.565 ஏக்கர்) அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 4 கோடியே 12 லட்சத்து 65 ஆயிரத்து 276.35 சதுர அடி பரப்பரளவு நிலங்கள் பத்திரப்பதிவுக்குத் தயாராக உள்ளது. பல மாவட்டங்களில் நிலங்கள் உள்ளன. எங்கள் மீது புகார் அளித்தவர்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்சினைகளை சரிசெய்ய விரும்புகிறோம். இதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட வேண்டும். என அவர்கள் தப்பிக்க வழிதேடி மனுவில் கூறப்பட்டிருந்த மனு நீதிபதி நாகார்ஜுன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணை தொடக்க நிலையில் தான் உள்ளது. வழக்கு விசாரணை முழுமையடைய ஆறு மாதங்கள் ஆகும். இதுவரை 557 பேர் புகார் அளித்துள்ளனர். நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்கள், நிர்வாகிகள் தற்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். 9428 சொத்து விவரங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பது தேவையற்றது என்றார். மனுதாரர் தரப்பில், நிறுவனம் தொடர்பான முழுத்தகவல்கள் பொருளாதார குற்றப்பிரிவிடம் உள்ளது. முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், நிலங்கள், வீட்டுமனை விவரங்களும் காவல்துறையினரிடம் உள்ளன. பணப்பரிவர்த்தனை, வங்கிகணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றார். அதையடுத்து நியோ-மேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் முழு பட்டியலையும் நியோ-மேக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை செப்டம்பர் மாதம். 27-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு