முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனிப்பூர் உயர்நீதிமன்றத் தற்காலிகத் தலைமை நீதிபதியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1963 ன் 4 வது பிரிவின் படி 15 வது அரசியலமைப்புத் திருத்தத்திற்குப் பின் உயர் நீதிமன்றத்தின்  நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்ட நிலையில்


தற்போது 61 வயதான நீதிபதி எம்.வி. முரளிதரன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், தற்போது பணியிட மாற்றத்திற்கான கொலீஜியத்தின் பரிந்துரை அவருக்கு வழங்கப்பட்டது  தண்டனை மாதிரியே நீதித்துறை வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு அல்லது அதற்கும் குறைவான கால அவகாசம் உள்ள ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியின் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்து அதற்கு மாறாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் என்பது இந்தியாவில் உத்தரவிடுவது அரிதாக நடைபெறும் சம்பவம். அப்படி ஒரு சம்பவம் தான் இப்போது நடைபெற்றுள்ளது.

மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் தற்காலிகத் தலைமை நீதிபதியாக இருக்கும் எம்.வி.முரளிதரன், தன்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நீதிபதியாக பணியமர்த்துமாறு கோரிக்கை விடுத்த நிலையில், அவரை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் அக்டோபர் 11 ஆம் தேதி பரிந்துரை செய்துள்ளது.

அவர் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ள கொலீஜியம், நீதிபதி எம்.வி.முரளிதரனை கொல்கத்தாவிலுள்ள உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றுவதற்கான முந்தைய பரிந்துரையையே மீண்டும் வலியுறுத்தியுள்ளது. விரைவிலேயே மத்திய அரசு இதற்கான உத்தரவுகளை குடியரசுத் தலைவர் அலுவலகம் மூலமாக வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையே அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வெளியான கொல்கத்தா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யும் பரிந்துரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிபதி முரளிதரன் கொலிஜியத்திற்கு கோரிக்கை ஒன்றை வைத்ததன் படி தன்னை கொல்கத்தாவிற்கு மாற்றுவதற்குப் பதிலாக, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென்பதே அவரது கோரிக்கை அப்போது நீதிபதி சித்தார்த் மிருதுல் நியமனத்தில் தாமதம் செய்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கட்ரமணி, கொலிஜியத்தின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு கோப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.ஆனால், அதனை செயல்படுத்துவதில் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு தாமதம் செய்கிற நிலையில் அதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு அக்டோபர் மாதம்  9 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ”மெய்தி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்' என்று நீதிபதி எம்.வி.முரளிதரன் வழங்கிய தீர்ப்பு தவறானது" என கண்டனம் தெரிவித்தார்.


மேலும் மணிப்பூர் வன்முறையைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுல், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய மூன்று  மாதங்களுக்கு முன்பு அதாவது கடந்த ஜூலை மாதமே கொலீஜியம் பரிந்துரை செய்தது. இப்பேரணியில் குகியின மக்களுக்கெதிராக மெய்தி சமூத்தினர்  ஈடுபட்ட மோதல் கடந்த சில மாதங்களாக மணிப்பூரில் அணையாத தீயாக உருவெடுத்து 150 க்கும் மேற்பட்ட மக்களை உயிர்பலி வாங்கி பெருங் கலவரமாக இன்று வரை நீடிக்கிறது.  மணிப்பூரில் வாழும் குகி எனும் சிறுபான்மை பழங்குடியினரின் நிலங்களையும், உரிமைகளையும் பறித்து மெய்தி எனும் பெரும்பான்மை சமூகத்திற்கு வழங்குவதற்கு அடிகோலும் சர்ச்சைக்குரிய தீர்ப்பாக இது பார்க்கப்பட்டது.


அதை எதிர்த்துத் தான் மணிப்பூரிலுள்ள அனைத்துப் பழங்குடிகளின் மாணவர் சங்கம் கடந்த மே 3 ஆம் தேதி தலைநகர் இம்பாலிலிருந்து 60 கி.மீ தொலைவில் சுராக்சன்பூர் மாவட்டத்திலுள்ள டோர்பால் உள்ளிட்ட அனைத்து 8 மாவட்டங்களிலும் பேரணி நடத்தியது. கடந்த ஏப்ரல் மாதம்  27ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவது தொடர்பான


வழக்கில் தலைமை நீதிபதி எம்.வி. முரளிதரன் விசாரித்துத் தீர்ப்பளித்தார். அதில் மெய்தி சமுதாய மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவது பற்றி பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார் நீதிபதி முரளிதரன் வழங்கிய உத்தரவு மணிப்பூரில் கொந்தளிப்பைக் கிளப்பியது. அதைத்தொடர்ந்து 2023 பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாகவும் முரளிதரன் பொறுப்பேற்றார். அவர் கடந்த 30 வருடத்தில் வழக்கறிஞராக நீதித்துறையில் நுழைந்து அடுத்தடுத்து தனது திறமையால் நீதிபதியாக, தலைமை நீதிபதியாக உயர்ந்தார். அங்கு குற்றவியல், கிரிமினல், ரிட் மனுக்கள் சிவில் வழக்குகள் என பல்வேறு வகையான வழக்குகளில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வெற்றி பெற்றுள்ள நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.


அங்கு  மூன்றாண்டுகள் பணியாற்றியவர் எந்திரன் திரைப்படக் கதை உரிமை வழக்கு. நடிகர் வடிவேலு - சிங்கமுத்து நில மோசடி வழக்கு

போன்ற பல வழக்குகளில தீர்ப்பளித்துள்ளார். அதன்பின்னர், கடந்த 2019 ஆம் ஆண்டு மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகாவில் மணியம்பட்டு கிராமத்தின்  ஒரு விவசாய குடும்பத்தில் ஏப்ரல் மாதம்  16 ஆம் தேதி 1962 ஆம் ஆண்டு பிறந்தவர் மணியம்பட்டு வஜ்ஜிரவேலு மகனான முரளிதரன், வயது 61 கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீதித்துறையில் பணியாற்றுகிறார்,

முதுநிலை வழக்கறிஞர் படிப்பை முடித்துள்ள முரளிதரன் தன்னை வழக்கறிஞராக 1990 ஆம் ஆண்டு பதிவு செய்தார். உயர்நிதிமன்றம் மதுரைக்கிளை, சென்னை உயர்நீதிமன்றம், DRT மற்றும் DRAT, சிட்டி சிவில், செஷன்ஸ் மற்றும் மாஜிஸ்திரேட் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் அவர் வழக்காடியுள்ளார் என்பதே அவர் கடந்து வந்த பாதை இந்த நிலையில்  உச்சநீதிமன்றத்தின்  தலைமை நீதிபதியே கண்டனம் தெரிவித்த நிலையில் இந்த விவாதப் பொருள் பல சட்ட வள்ளுநர்கள் பார்வையளவில்  தற்போது பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு