முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெற்றியின் மூளை பாகம் கிடைத்தது, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,

ஹிமாச்சல் பிரதேச விபத்தில் பலியான சைதை துரைசாமியின் மகன் வெற்றியின்  மூளை பாகம் கிடைத்தது, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,

 ஹிமாச்சல் விபத்தில் பலியான சைதை துரைசாமியின் மகன் வெற்றியின்  மூளை உள்ளிட்ட உடல் பாகங்கள் கிடைத்ததால் அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு காவல்துறை அலுவலர்கள்  அனுப்பி வைத்தனர்.

 ஹிமாச்சல பிரதேசத்துக்கு திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் கோபிநாத்துடன் சுற்றுலா சென்றார். பிப்ரவரி மாதம்  4 ஆம் தேதி மாலை கசாங் நளா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை-5-ல் காரில் சென்ற போது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை அருகிலிருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்தது. ஓட்டுநர் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  கோபிநாத் படுகாயங்களுடன் சிகிச்சை பெறுகிறார்.

சைதை துரைசாமி மகன் வெற்றியை மட்டும் காணாமல் தேடும் பணியில் கடந்த 3 நாட்களாக அந்த மாநிலக் காவல்துறையினர், பேரிடர் மீட்புப் படையினர், பகுதிப் பழங்குடியின மக்கள் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான வாகனத்தின் சில பகுதிகள் மட்டுமே கைப்பற்றப்பட்டது. ஒருவரின் உடல் பாகங்கள், மூளை உள்ளிட்ட உறுப்புகள் சிதைந்த நிலையில் கிடைத்துள்ளன. அவற்றை எடுத்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்து ஹிமாச்சலப் பிரதேசம் சென்ற சைதை துரைசாமி,       மகன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூபாய் ஒரு கோடி சன்மானம் வழங்குவதாக அறிவித்தார். மேலும், பழங்குடியின மக்களைச் சந்தித்து மகனை மீட்க உதவுமாறும் கோரிக்கை வைத்தார். ஹிமாச்சல் பிரதேசத்திற்கு அவரது நண்பர்களுடன் சுற்றுலா சென்றவர் கஷங் நாலா பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெற்றி உள்பட 3 பேர் காரில் பயணம் செய்த போது இவர்களுடைய கார் நேற்று முன் தினம் மாலை விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது. ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். இந்தக் காரில் பயணம் செய்த திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.


ஆனால் சைதை துரைசாமியின் மகன் வெற்றியை மட்டும் காணவில்லை. அதையடுத்து இந்த விபத்துக் குறித்து ஹிமாச்சலப் பிரதேச. காவல்துறையினர் சென்னைக்கு தகவல் அளித்தனர். இந்த நிலையில் இமாச்சல் பிரதேச போலீஸார் வெற்றியை தேடி வருகிறார்கள்.





 எம்ஜிஆரின் அபிமானி, அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர். சென்னைக்கு 48 ஆவது மேயராக சைதை துரைசாமி 2011 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அதிமுகவின் முதல் சென்னை மேயர் ஆவார் மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி எ நடத்தி வருகிறார். இதில் ஏராளமான மாணவர்களுக்கு இலவசமாக குடிமைப்பணி்த் தேர்வுகளுக்கான பயிற்சிகளை நடத்துகிறார். பயிற்சி வகுப்பில் டிஎன்பிஎஸ்சிக்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. மேலும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து தங்குமிடம், உணவையும் சைதை துரைசாமி வழங்கி பயிற்சியையும் இலவசமாகவே வழங்குகிறார். இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கிய  நிலையில் அவர் 2011 ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார்.அந்த தேர்தலில் அவர் தோல்வியுற்றார். இதையடுத்துதஹ தான் அவர் மேயர் பதவிக்கு போட்டியிட வாய்ப்புக் கொடுத்தார் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா. சைதை துரைசாமி மனைவி மல்லிகா வெற்றி  என்ற மகனும் உள்ளனர்.




2012 ஆம் ஆண்டு வெற்றிக்கு திருமணம் நடந்தது. இநத் திருமணத்தில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா கலந்து கொண்டார். 2016 ஆம் ஆண்டு வருமான வரித் துறை 40 இடங்களில் சோதனை நடத்தியதில் வெற்றியின் வீடும் அவர் வசிக்கும் சிஐடி நகர் வீடு, தாம்பரத்தில் உள்ள செம்பாக்கம் பண்ணை வீட்டிலும் ரெய்டு நடந்தது.வெற்றி என்றாவது ஒரு நாள் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படம் ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலில் எடுக்கப்பட்டது. இதில் விதார்த், ரம்யா நம்பீஸன் ஆகியோர் நடித்திருந்தனர். வெற்றி இயக்கிய படம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. அவர் தனது தந்தையுடன் ஐஏஎஸ் அகாடமியையும் கவனித்து வருகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...