முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெற்றியின் மூளை பாகம் கிடைத்தது, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,

ஹிமாச்சல் பிரதேச விபத்தில் பலியான சைதை துரைசாமியின் மகன் வெற்றியின்  மூளை பாகம் கிடைத்தது, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,

 ஹிமாச்சல் விபத்தில் பலியான சைதை துரைசாமியின் மகன் வெற்றியின்  மூளை உள்ளிட்ட உடல் பாகங்கள் கிடைத்ததால் அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு காவல்துறை அலுவலர்கள்  அனுப்பி வைத்தனர்.

 ஹிமாச்சல பிரதேசத்துக்கு திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் கோபிநாத்துடன் சுற்றுலா சென்றார். பிப்ரவரி மாதம்  4 ஆம் தேதி மாலை கசாங் நளா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை-5-ல் காரில் சென்ற போது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை அருகிலிருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்தது. ஓட்டுநர் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  கோபிநாத் படுகாயங்களுடன் சிகிச்சை பெறுகிறார்.

சைதை துரைசாமி மகன் வெற்றியை மட்டும் காணாமல் தேடும் பணியில் கடந்த 3 நாட்களாக அந்த மாநிலக் காவல்துறையினர், பேரிடர் மீட்புப் படையினர், பகுதிப் பழங்குடியின மக்கள் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான வாகனத்தின் சில பகுதிகள் மட்டுமே கைப்பற்றப்பட்டது. ஒருவரின் உடல் பாகங்கள், மூளை உள்ளிட்ட உறுப்புகள் சிதைந்த நிலையில் கிடைத்துள்ளன. அவற்றை எடுத்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்து ஹிமாச்சலப் பிரதேசம் சென்ற சைதை துரைசாமி,       மகன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூபாய் ஒரு கோடி சன்மானம் வழங்குவதாக அறிவித்தார். மேலும், பழங்குடியின மக்களைச் சந்தித்து மகனை மீட்க உதவுமாறும் கோரிக்கை வைத்தார். ஹிமாச்சல் பிரதேசத்திற்கு அவரது நண்பர்களுடன் சுற்றுலா சென்றவர் கஷங் நாலா பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெற்றி உள்பட 3 பேர் காரில் பயணம் செய்த போது இவர்களுடைய கார் நேற்று முன் தினம் மாலை விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது. ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். இந்தக் காரில் பயணம் செய்த திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.


ஆனால் சைதை துரைசாமியின் மகன் வெற்றியை மட்டும் காணவில்லை. அதையடுத்து இந்த விபத்துக் குறித்து ஹிமாச்சலப் பிரதேச. காவல்துறையினர் சென்னைக்கு தகவல் அளித்தனர். இந்த நிலையில் இமாச்சல் பிரதேச போலீஸார் வெற்றியை தேடி வருகிறார்கள்.





 எம்ஜிஆரின் அபிமானி, அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர். சென்னைக்கு 48 ஆவது மேயராக சைதை துரைசாமி 2011 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அதிமுகவின் முதல் சென்னை மேயர் ஆவார் மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி எ நடத்தி வருகிறார். இதில் ஏராளமான மாணவர்களுக்கு இலவசமாக குடிமைப்பணி்த் தேர்வுகளுக்கான பயிற்சிகளை நடத்துகிறார். பயிற்சி வகுப்பில் டிஎன்பிஎஸ்சிக்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. மேலும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து தங்குமிடம், உணவையும் சைதை துரைசாமி வழங்கி பயிற்சியையும் இலவசமாகவே வழங்குகிறார். இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கிய  நிலையில் அவர் 2011 ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார்.அந்த தேர்தலில் அவர் தோல்வியுற்றார். இதையடுத்துதஹ தான் அவர் மேயர் பதவிக்கு போட்டியிட வாய்ப்புக் கொடுத்தார் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா. சைதை துரைசாமி மனைவி மல்லிகா வெற்றி  என்ற மகனும் உள்ளனர்.




2012 ஆம் ஆண்டு வெற்றிக்கு திருமணம் நடந்தது. இநத் திருமணத்தில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா கலந்து கொண்டார். 2016 ஆம் ஆண்டு வருமான வரித் துறை 40 இடங்களில் சோதனை நடத்தியதில் வெற்றியின் வீடும் அவர் வசிக்கும் சிஐடி நகர் வீடு, தாம்பரத்தில் உள்ள செம்பாக்கம் பண்ணை வீட்டிலும் ரெய்டு நடந்தது.வெற்றி என்றாவது ஒரு நாள் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படம் ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலில் எடுக்கப்பட்டது. இதில் விதார்த், ரம்யா நம்பீஸன் ஆகியோர் நடித்திருந்தனர். வெற்றி இயக்கிய படம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. அவர் தனது தந்தையுடன் ஐஏஎஸ் அகாடமியையும் கவனித்து வருகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்