முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

களமாடிய பாஜக, தடுமாறிய அதிமுக,, தடம் மாறிய அமமுக, தடம் பதித்த பாமக

தமிழ் நாட்டில் 23 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் மோதல்


பாஜக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டதன் படி, திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது.



புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயகக் கட்சி ( ஐஜேகே ) பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் தாமரை சின்னத்திலேயே போட்டியிடுகின்றன. மொத்தம் 23 வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

பாஜக அணியிலுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதாக  அறிவித்தார்.

 பத்துத் தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டி காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தமிழ் மாநில கா ங்கிரஸுக்கு  ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டது.

 அமமுகவுக்கு திருச்சிராப்பள்ளி, தேனி ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சி வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகின்றனர் பாமக வேட்பாளர்களும்அறிவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் தொகுதியில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், திண்டுக்கல் தொகுதியில் பொருளாளர் திலகபாமா, அரக்கோணத்தில் வழக்கறிஞர் கே.பாலுவும் போட்டி 

 தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடவில்லை.

 வேட்பாளர்களாக





ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார்

கடலூர் - திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான்,

மயிலாடுதுறை - ஸ்டாலின்,

கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார்,

தருமபுரி - அரசாங்கம்,

சேலம் - ந. அண்ணாதுரை,

விழுப்புரம் - முரளி சங்கர்,


தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக அக்கட்சியின் தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான அன்புமணி ராமதாஸின் மனைவி மருத்துவர் சௌமியா போட்டியிடுகிறார்,பாஜக தேசிய கட்சி, கூட்டணி கட்சிக்கு ராஜ்யசபா எம்பி தருகிறார்கள் என தெரிந்தால் இதே அணுகுமுறையை மற்ற கூட்டணி கட்சியினரும் கேட்பார்கள். அதனால் பாஜகவுக்கு நெருக்கடிகள் எழக் கூடும். எனவே அதை ஆவணங்களாகப் பதிவு செய்ய பாஜக விரும்பவில்லை.




பொதுவாக கூட்டணி ஒப்பந்தம் என்பது அந்தந்த நாளில் ராகு காலம், எமகண்டம் பார்த்து நல்ல நேரத்தில் காலையிலோ அல்லது மாலையிலோ கையெழுத்தாகும். ஆனால் பாமக - பாஜக கூட்டணியை பொருத்தமட்டில் காலையிலேயே கையெழுத்தாகியது குறித்து அரசியல் பார்வையாளர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில் அந்த காலங்களில் பாமக கூட்டணி என்றாலே அது பெரிய விஷயமாக இருக்கும். எல்லா ஊடகங்களின் கவனமும் பாமக மீது இருக்கும். கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்தை கூட பாமக. தான் நிர்ணயிக்கும். ஆனால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதே அவர்கள் நெருக்கடியான சூழலில் தான் செய்திருக்கிறார்கள்.





சேலத்தில் நடக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்தில் பாமக தலைவர்கள் எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவு பாஜக தலைவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பேரில் தான் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கையெழுத்தும் அவசர அவசரமாக பெறப்பட்டது. அந்த அளவுக்கு பாமக மீது நிர்பந்தம் இருக்கிறது.

ஒரு அழுத்தம் இல்லால் பாமக இந்தக் கூட்டணியை இறுதி செய்திருக்க மாட்டார்கள். வேட்புமனு தாக்கலுக்கு ஒரு நாள் முன்னர் வரை கூட எந்தக் கூட்டணிக்குப் போனால் பாமகவுக்கு நன்மை என்பதை யோசித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த முறை பாமகவுக்கு ஒரு அழுத்தம் என்பது கூடுதலாக உள்ளது. நிறைய உத்தரவாதங்களும் பாமகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.




நேற்று கூட்டணி பேச்சுவார்த்தையில் கூட பாமக நிர்வாகிகள் யாரும் உற்சாகமாக இல்லை. இன்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவில்லை, அன்புமணி மட்டுமே வந்திருந்தார். கூட்டணி ஒப்பந்தங்கள் சென்னையில் தான்

 அதிமுக கூட்டணி எனப் பார்த்தால் அங்கு சிறிய சிறிய கட்சிகள் மட்டுமே உள்ளன. இதனால் தேமுதிக, பாமகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. எனவே பாமக, அதிமுக கூட்டணிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறோம் என  பாமக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை விட அதிர்ச்சி, அன்று காலையிலேயே பாஜக- பாமக கூட்டணி கையெழுத்தாகியது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில் 



இந்த ஒப்பந்த கையெழுத்தின் போது பாஜகவை சேர்ந்த மாநில அளவிலான தலைவர்கள் மட்டுமல்லாமல் தேசிய அளவிலான தலைவர்களும் இடம் பெற்றிருந்தனர். எனவே பாமகவுக்கு ஏதாவது வாய்மொழி உத்தரவாதம் கிடைத்திருக்கும் என்றே தெரிகிறது என்றனர். முதல் முறையாக என் மண் என் மக்கள் யாத்திரைக்கு பிரதமர் வரும் போதே கூட்டணிக் கட்சித் தலைவர்களை மேடையில் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவு தமிழக பாஜகவுக்கு இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு முதல் நாள் ஜி.கே.வாசன் பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்திருந்தார்.    அதிமுக நிலை தான் வித்தியாசமானது திருநெல்வேலி - சிம்லா முத்துச்சோழன் (சமீபத்தில் அதிமுகவில் இணைந்தவர், ஜெயலலிதாவிற்கு எதிராக திமுக சார்பில் களம் கண்டவர்)

மதுரை டாக்டர் - P.சரவணன் ( திமுக -பாஜக - திமுக - அதிமுக என்று மூன்று ஆண்டுகளில் மூன்று கட்சி மாறி வந்தவர்)

ஈரோடு - ஆற்றல் அசோக் குமார் ( சமீபத்தில் பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்தவர் பாஜக மொடக்குறிச்சி MLA-வின் மருமகன் பாஜக அதிமுக கூட்டணி இருக்கும் என்றும் பாஜகவில் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு வாய்ப்பு தரமாட்டார்கள் என்று எடப்பாடி கே.பழனிச்சாமியிடம் பேரம்பேசி சீட்டு உறுதியளிக்கப்பட்டதால் அதிமுகவில் இணைந்தவர் ) 

திருச்சி - கருப்பையா ( மணல் மாபியா விவகாரத்தில் முக்கியப் புள்ளியாக இருக்கும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் கரிகாலனின் சகோதரர் )

கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள், வேட்பாளர் ஆக்கப்பட்டால் கட்சிக்கு வருகிறேன் என்று பேரம்பேசி வந்தவர்களை வேட்பாளராக்கினால் கட்சிக்கு விசுவாசமாக இருப்பார்களா? சீட்டை உறுதிசெய்து கொண்டு கட்சிக்கு வருபவர்களால் கட்சிக்கு என்ன பலன்? அப்படி இவர்கள் தனிப்பட்ட செல்வாக்கு மிக்கவர்களும் அல்ல. அந்தந்த நாடாளுமன்ற தொகுதிகளில் கட்சிக்கு விசுவாசமானவர்கள் வேறு யாரும் இல்லையா? என்று வினா எழுகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணியின் இறுதிச்சுற்று - கடைசிச் சொட்டு தேநீரை  உறிஞ்சுகிற நொடிகளில் இருக்கிறது. 

 தேர்தலில் கூட்டணி சேர்ப்பில் தமாகாவுக்கு பெரிய ரோல் உள்ளது.

"எடப்பாடி கே. பழனிசாமியை பார்த்துப் பேசிவிட்டேன். பாஜக அண்ணாமலையிடம் போனில் பேசி விட்டேன். நாளை பாமக அன்புமணியை சந்திக்கிறேன். அதிமுகவும் பாஜகவும் இணைந்தால் தான் பொது எதிரியை வீழ்த்த முடியும்" - என்று  வேகம் காட்டினார் ஜிகேவாசன்.

பாஜக- அதிமுக கூட்டணி விவகாரத்தை  ஜிகேவாசன் தான் முதலில் பூடகமாக வெளியில் சொன்னவர். செய்தியாகவும் மாறியவர். பின்னர் பாஜக பக்கமிருந்து எதிர்வினை வரவே, அவர் கருத்துக்கே எதிர்கருத்தை சொல்லி வந்தார்.

"பாமக அன்புமணி ராமதாஸ்  நேரடியாக ராஜ்யசபா எம்.பி. ஆக்கப்பட்டு அப்படியே மத்திய அமைச்சர் ஆகிறார்கள்" - என்கிற தகவலும் அந்தக் கட்சி வட்டார நம்பிக்கையாக இருக்கிறது.

இதைக் கேட்டதும்  பலர், சிரித்து வைக்கலாம். பல நேரங்களில் இப்படிப்பட்ட சிரிப்புகள் இடம் மாறிப் போவது தான் காலத்தின் கைவண்ணம்.

பாஜகவை நேற்றுவரை எதிர்த்த அதிமுக முன்னணித் தலைவர் டி.ஜெயகுமார், "தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம்" என்று சொல்லியிருப்பதை, ஜிகேவாசன் ட்ராக்கிலேயே கொஞ்ச தூரத்துக்கு ஓடிப் போய் பார்த்து புரிந்திட தேவை இல்லை. 

இப்போது தனியாக நிற்கிறோம். 2026- ல் உங்களோடு கைகோக்கிறோம் - என்று பாஜகவிடம் அதிமுக சொல்வதாக வைத்துக் கொண்டாலும் " 2024 ஆம் ஆண்டை மட்டும் பேசுங்கள். 2026- ஆம் ஆண்டை பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றுதான் பாஜக சொல்லும். 

பெரிய பிம்பத்தை கட்டமைத்து வெளியில் காட்டிக் கொண்டாலும் அதிமுகவைத் தவிர்த்து பாஜகவுக்கு கூட்டணி அமைக்க வேறு வழி இல்லை.

தேர்தல் நேரமாச்சேன்னு

டிவி பாத்தது குற்றம்.

பத்து ஆண்டுகள் பாஜகவோடு டிராவலிலிருந்த புதியதமிழகம், இப்போது பாஜகவை விட்டு விலகியது ஏன்? - என்ற கேள்வி 

 கேட்டது நெறியாளர்- சன் நியூஸ் எடிட்டர் மு.குணசேகரன்.

"திமுக ஆட்சிக்கு வந்தநாள் முதல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அவர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல்" - என்று புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, பிராட்கேஜ் ஏரியாவில் 'பதில்' ரயிலை

ஓட்ட ஆரம்பித்து விட்டார்...

"சப்ஜெக்டுக்குள்ள வாங்க டாக்டர் சார்" என்று நெறியாளராய் குணசேகரன், டாக்டர் கிருஷ்ணசாமியை 'கேட்' டுக்குள் வரச் சொன்னார்.

ஆனால்....

" நீங்க திமுகவின் Representative ஆக பேசக்கூடாது. நீங்க சன் டிவி லேபர். 

என்னைப் பேசவிடுங்க. என் கருத்தை சொல்ல விடுங்க.

நீங்க திமுகவுக்கு இவ்வளவு 'முட்டு'  கொடுக்கக் கூடாது. நீங்க திமுககாரரா? பத்திரிகையாளரான்னு தெரியலயே" என்று பு.த. தலைவர் கிருஷ்ணசாமி டாக்டர் தொடர...

இப்படியான வார்த்தைகளை கையாள்வது உங்களுக்கு அழகல்ல, அது தவறு என்று குணசேகரன் சொல்லச் சொல்ல

தொடர்ந்து அதே தொனியில் 

டாக்டர் கிருஷ்ணசாமி பேசப் பேச

பின்னர் டாக்டர் கோபத்துடன் காதில் மாட்டியிருந்த 'கிளிப்' பை நீக்கிவிட்டு வீடியோ கால் பேட்டியை முடித்துக் கொண்டார். இது பேசுபொருளாக மாறியது, அமமுக டிடிவி தினகரனை திகார் சிறையில் வைத்தது மத்திய பிஜேபி அரசு, 

தேர்தலில் இரட்டை இலை சின்னம் தராமல் இழுத்தடித்தது பிஜேபி அரசு, 

சசிகலா நடராஜனை சிறைக்கு அனுப்பியது பிஜேபி அரசு, 

அதிமுகவை எடப்பாடி கே.பழனிச்சாமி வசம் ஒப்படைத்தது பிஜேபி அரசு, 

இதெல்லாம் பத்திரிகையாளர்களான நமக்கே தெரியும் போது சிறையிலிருந்த  டிடிவி தினகரனுக்கு மறந்தா போகும் இருந்தும் பிஜேபி உடன் வெறும் இரண்டு தொகுதிகள் பெற்று கூட்டணிக்கு சரி சொல்கிறார் என்றால் அதன் பின்னால் இருக்கும் அரசியல் வியூகம் சாதாரணமானதாக இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை

எந்த சலசலப்புமில்லாமல் டிடிவி தினகரனை நம்பி அந்தத் தொண்டர்கள் 

டிடிவி தினகரன் இருக்கும் கூட்டணியை ஆதரிக்கத் தயார் 

ஆனால் ஓ.பன்னீர் செல்வத்துக்காக ஒரு தொகுதி காத்திருக்கும் நிலை போல.

 1  தொகுதி கொடுத்தாலே அதிகம் என்கிற தமாகாவுக்கு மூன்று தொகுதிகள் என்பதும்

10 தொகுதிகள் கொடுத்தாலும் தகும் என்கிற அமமுகவுக்கு இரண்டு தொகுதிகள் என்பதும் முரன்பாடு தான் 

இதற்குப் பின் உள்ள அரசியல் பெரிது அதை பின்னர் அலசலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்