முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரியிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா திருமயமும் வருகை

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில்,


பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வருகிறார்.           அங்கு விவேகானந்தர் பாறையில் மூன்று நாட்கள் தியானம் செய்கிறார்.  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு  கட்டங்களாக நடக்கிறது. இறுதிக் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் ஜூன் மாதம் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் மாதம் 4-ஆம் தேதி வெளியாகிற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று 30-ஆம் தேதி கன்னியாகுமரி வருகிறார். டெல்லியிலிருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வருபவர்,

அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார்.  பின்பு படகு மூலம் கடல் நடுவிலுள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி,  இன்று மாலை முதல் ஜூன் மாதம் 1-ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்கிறார்.


பிரதமரின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது 

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2019 மக்களவை தேர்தலும் 7 கட்டமாக நடந்தது. கடைசி கட்ட வாக்குப்பதிவு மே மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது. மே 17-ஆம் தேதியுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பல தலைவர்களும் ஓய்வெடுக்க தொடங்கினர். அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு சென்றார். சாம்பல் நிற அங்கி, இடுப்பில் காவி , தலையில் பாரம்பரிய உத்தரகாண்ட் தொப்பி அணிந்திருந்தார்.



உலங்கு வானூர்தி தரையிறங்கிய இடத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரம் நடந்து கேதார்நாத் கோயிலுக்குச் சென்று  அரை மணி நேரம் சிறப்பு வழிபாடு செய்தார். பிரதமர் எடுத்து வந்திருந்த சிறப்பு அங்கவஸ்திரங்கள் சிவலிங்கத்துக்கு சாற்றி அதன் பின்னர்,


கேதார்நாத்திலுள்ள குகையில் தொடர்ந்து 17 மணி நேரம் தியானத்திலிருந்தார். அவர் தங்கியிருந்த அறையில் மின்சார வசதி கிடையாது. ஒரே ஒரு படுக்கை மட்டுமே இருந்தது. செல்போன் நெட்வொர்க் செயல்படாது என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போதைய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சியின் சார்பில் இன்று 



கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது

தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்!

இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு - சிபிஐ(எம்) சார்பில் எழுதப்பட்ட கடிதம்


தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 2024 ஆம் ஆண்டு மே மாதம் 30 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் நரேந்திர மோடி தியானம் செய்வதை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்குத் தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேற்று (29.05.2024) இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜுன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள்.

மே முப்பது முதல் இரண்டாம்  தேதி வரை பிரதமர் கன்னியாகுமரியில் தவம்.

பாஜக ஆட்சிஅமைகிறதோ இல்லை அமையாதோ. ஆனால் நான் பரமாத்மா என்றவர் கடவுள் என்னை என்னுள் இருக்கும் ஜீவாத்மா மூலம் முனிவராகச் சொன்னார் எனக் கூறப் போகிறாரோ ?என்னவோ நடக்கிறது அது  மர்மமாக இருக்கிறது. அதுபோல இன்று தேய்பிறை அஷ்டமி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருமயம் கோட்டை பைரவர் ஆலயத்தில் தரிஷனம் செய்கிறார்.

இன்று மதுரை வரும் அவர் அங்கு.   ஸ்ரீ மீனாட்சி அம்மனை தரிசிக்கிறார்.

பின்னர் உலங்கு வானூர்தி மூலம்  மாலை 3.30 மணிக்கு கானாடுகாத்தான் விமான தளத்தில் இறங்கி புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திற்கு 



அங்கிருந்து கார் மூலம் 6 கிமீ.தொலைவிலுள்ள திருமயம் 108 திவ்ய தேசம் சத்திய மூர்த்திப் பெருமாள் ஆலயம் மற்றும் கோட்டை பைரவர் ஆலயத்தில் தரிஷனம் செய்கிறார்.

இன்று மாலை சுமார் 5 மணிக்கு  அங்கிருந்து மீண்டும் உலங்கு வானூர்தி மூலமாக மதுரை செல்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...