புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தரவுகளை எளிதில் பெறுவதற்காக இசங்க்யிகி (eSankhyiki) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், உலகளாவிய புள்ளியியல் நடைமுறைகள் மற்றும் சிறந்த தரவுப் பகிர்வு தரநிலைகளை உறுதி செய்ய தொடர்ந்து செயலாற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திட்டமிடுபவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உடனடித் தகவல்களை வழங்குவதற்காக இந்த அமைச்சகம் இசங்க்யிகி ( eSankhyiki - https://esankhyiki.mospi.gov.in ) என்ற தளத்தை உருவாக்கியுள்ளது.
நாட்டில் அதிகாரபூர்வ புள்ளி விவரங்களை எளிதாக மக்களிடம் கொண்டு செல்வதும், விரிவான தரவு மேலாண்மை மற்றும் பகிர்வு முறையை ஏற்படுத்துவதும் இந்த இணைய தளத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த தளம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது:
1) தரவு பட்டியல் பகுதி: இந்த பகுதி எளிதாக அணுகுவதற்காக அமைச்சகத்தின் முக்கிய தரவுகளை ஒரே இடத்தில் பட்டியலிட்டுக் காட்டுகிறது.
2) பேரியல் (மேக்ரோ) குறியீட்டுப் பகுதி: இந்தப் பகுதி முக்கிய விவரங்களின் கால வரிசைத் தரவை வழங்குகிறது. இது பயனர்கள் எளிதாக அணுக உதவி, தரவுகளைக் காட்சிப்படுத்துவதற்கான அம்சங்களைக் கொண்டுள்ளது.
29 ஜூன் 2024 அன்று தில்லியில் நடைபெற்ற விழாவில் 16-வது நிதிக் குழுத் தலைவர் டாக்டர் அரவிந்த் பனகாரியா இந்தத் தளத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.அமைச்சகம்
29 ஜூன் 2024 அன்று கொண்டாடப்பட்ட 18 வது புள்ளியியல் தினத்தை முன்னிட்டு நிலையான வளர்ச்சி இலக்குகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது
18-வது புள்ளியியல் தினத்தை முன்னிட்டு, 29 ஜூன் 2024 அன்று, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) குறித்த தகவல்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டது.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தேசிய அளவில் நிலையான வளர்ச்சி இலக்குகளை கண்காணிப்பதற்கு வசதியாக, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள், ஐநா சபை முகமைகள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினருடன் கலந்தாலோசித்து, நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தேசிய குறியீட்டுக் கட்டமைப்பை (NIF) உருவாக்கியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட குறியீட்டுத் தகவல் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் புள்ளியியல் தினத்தன்று (அதாவது, ஜூன் 29 அன்று) புள்ளியியல் அமைச்சகம், நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த முன்னேற்ற அறிக்கையைத் தரவுகளுடன் வெளியிடுகிறது.
இதன் ஒரு பகுதியாக, 2024 புள்ளியியல் தினத்தை முன்னிட்டு நேற்று (29 ஜூன் 2024) இது தொடர்பான தரவுகள் வெளியிடப்பட்டன.
இதில் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளின் தேசிய அளவிலான முன்னேற்றம் குறித்த தரவுகளை இந்த அறிக்கை முன்வைத்துள்ளது.
வங்கிக் கடன் வழங்கப்பட்ட சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை 2015-16-ம் ஆண்டில் 18.32 லட்சத்திலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 44.15 லட்சமாக அதிகரித்துள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைக் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் 2015-16-ல் 48.32 %-ல் இருந்து 2021-22 ல் 57.60 % ஆக உயர்ந்துள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் வளர்ச்சி இலக்குகள் குறித்த தகவல்களை இந்த அறிக்கை விரிவாக வழங்குகிறது.
நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த அறிக்கைகள் பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடியவையாகும். இவை அமைச்சகத்தின் இணையதளமான www.mospi.gov.in -ல் இடம்பெற்றுள்ளன.
கருத்துகள்