முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூட்டிய வீடுகளில் இரவுத் திருட்டில் சிக்கி தலைமறைவான பாஜக நிர்வாகி கைது

பூட்டிய வீடுகளில் இரவுத் திருட்டில் சிக்கி தலைமறைவான பாஜக நிர்வாகி கைது. 


 இரண்டு ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் இரவில் திருட்டில் ஈடுபட்டுத் தலைமறைவாக இருந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணித் துணைத்தலைவர் பிரபாகரன் கைது

அவரிடமிருந்து ரூபாய் 51 லட்சம் மதிப்புள்ள 85 சவரன் நகைகளை உருக்கிய தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையடித்த பணத்தில் ஒரு கோடி மதிப்பில் அவரது கிராமத்தில் சொகுசான வீடும் கட்டியுள்ளார் அதன் விபரம் வருமாறு:- 


திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை  சுற்றுவட்டாரத்தில்  பூட்டிய வீடுகளில் நடந்துள்ள கொள்ளைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் இரவில் புகுந்து கொள்ளையடித்ததாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணித் துணைத்தலைவர் பிரபாகரன் மீது புகார் எழுந்ததையடுத்து, விசாரணை நடத்திய காவல்துறையினர் பிரபாகரனைக் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூபாய்.51 லட்சம் மதிப்புள்ள 85 சவரன் நகைகளை உருக்கிய தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில், பிரபாகரன் கொள்ளையடித்த பணத்தில் ரூபாய் ஒரு கோடி மதிப்பில் அவனது  கிராமத்தில் சொகுசான வீடு கட்டியுள்ள தாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பற்றியும் காவல் துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கடந்த ஒரு மாதம் முன்பு இதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி ஒருவர் வழிபறி செய்ததாக வேலூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்ட பாஜக இளைஞரணித் தலைவராக இருப்பவர் கிளி என்கிற சதீஷ் (வயது 34) இவர் மீது பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக வழக்குகளும் உள்ளது . அரக்கோணம் பகுதியில் கொலை வழக்கு தொடர்பாக இவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, சதீஷ் வழிமறித்து கத்தியைக் காட்டி, பணம் கேட்டு மிரட்டி ஆபாசமாகப் பேசி வழிப்பறியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது தொடர்பாக பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் வழிபறியில் பாதிக்கப்பட்ட விஜய் என்பவர் கடந்த மாதம் கொடுத்த புகாரின் அடிப்படையில், பள்ளிகொண்டா காவல்துறையினர் சதீஷ் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதேபோல், வேலூர் மாவட்டம், வெள்ளக்கல் மேடு அருகே காங்கேயநல்லூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை கடந்த மாதம் இரண்டு நபர்கள் வழிமறித்து கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டினர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் இருவரையும் பிடித்து வைத்து காட்பாடிகாவல நிலையத்திற்கு  அளித்த தகவலறிந்து விரைந்து வந்த காட்பாடி காவல் நிலையத்தினர் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடத்திய  விசாரணையில், இருவரும் விருதம்பட்டு டி.கே.புரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் நவீன்குமார் என்பதும், அதில் ராஜேஷ் பாரதிய ஜனதா கட்சியின் தொழில்நுட்பப் பிரிவில் மாவட்டச் செயலாளராக இருப்பதும், நவீன்குமார் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாவட்டப் பொறுப்பாளராக இருப்பதும்  தெரியவந்தது. இதில் ஒரு உண்மை யாதெனில் இவர்கள் அனைவரும் துவக்க காலத்தில் இருந்து வந்த பாரதிய ஜனதா கட்சியினராக இருக்க வாய்ப்பில்லை, இடையில் சேர்ந்து  பொறுப்பு வாங்கிய நபர்கள் தான் இப்போது அதிகம் சிக்கி வருகிறார்கள், பழைய பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் சாதுவான நடவடிக்கைகள் உள்ளவர்கள் ஆவர்.   குற்றவாளிகள் நீக்கம் செய்ய வேண்டும் என்பதே மாநில மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் விடுக்கும் கோரிக்கையாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...