முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்புக்காக இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் முக சரிபார்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்புக்காக இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் முக சரிபார்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎப்ஓ) 78 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தைத் தொடர ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். முன்னதாக அவர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வங்கிகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. அதன் சவால்கள் காரணமாக சில குறைகள் ஏற்பட்டன.

'வாழ்க்கையை எளிதாக்குவதை' மேம்படுத்த, இபிஎப்ஓ  2015-ல் அதன் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை  அறிமுகம் செய்தது.  ஓய்வூதியதாரர்களிடமிருந்து பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் அடிப்படையில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்கிறது. பயோமெட்ரிக் அடிப்படையிலான டி.எல்.சியை சமர்ப்பிப்பதற்கு ஓய்வூதியதாரர் எந்தவொரு வங்கி, தபால் அலுவலகம், பொது சேவை மையம் அல்லது ஈ.பி.எஃப்.ஓ அலுவலகத்தின் கிளைக்கு நேரடியாக செல்ல வேண்டும். ஏனெனில் அங்கு கைரேகை / கருவிழி பதிவு சாதனங்கள் இருக்கின்றன.

ஒரு வங்கி / தபால் அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டியிருப்பதால் வயதானவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்  மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆகியவை முக அங்கீகார தொழில்நுட்பத்தை  உருவாக்கியுள்ளன. இதன் மூலம் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆயுள் சான்றிதழைப் பெறலாம். இபிஎப்ஓ இந்த தொழில்நுட்பத்தை 2022 ஜூலையில் ஏற்றுக்கொண்டது. இது ஓய்வூதியதாரர்கள் தங்கள் வீடுகளிலிருந்து டி.எல்.சி.க்களை சமர்ப்பிப்பதற்கான முற்றிலும் புதிய முறையை அறிமுகப்படுத்தியது, இது ஓய்வூதியதாரர்களுக்கு இந்த செயல்முறையை மிகவும் அணுகக்கூடியதாகவும் மலிவானதாகவும் ஆக்குகிறது. வயதான காலத்தில் வங்கிகள், தபால் நிலையங்கள் போன்றவற்றிற்கு  பயணிக்கும் தொந்தரவுகளை தவிர்க்க இந்த செயல்முறையை முடிக்க அவர்கள் எந்த ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்மார்ட்போனையும் பயன்படுத்தலாம்.

இந்த முறை ஓய்வூதியதாரர்களை அவர்களின் வீடுகளில் இருந்து ஸ்மார்ட்போன் கேமராவைப் பயன்படுத்தி முகத்தை ஸ்கேன் மூலம் அடையாளம் காண அனுமதிக்கிறது. முக அங்கீகார பயன்பாட்டைப் பயன்படுத்தி, ஆதார் தரவுத்தளத்திற்கு எதிராக இந்த சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது.

தொடங்கப்பட்டதிலிருந்து, முக அங்கீகார தொழில்நுட்ப அடிப்படையிலான டிஎல்சிக்கள் 2022-23 ஆம் ஆண்டில் 2.1 லட்சம் ஓய்வூதியதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன, இது 2023-24 ஆம் ஆண்டில் 6.6 லட்சமாக உயர்ந்துள்ளது, இது இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் ஆண்டுக்கு 200% வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. 2023-24 ஆம் ஆண்டில் 6.6 லட்சம் முக அடையாள அடிப்படையிலான டிஎல்சிக்கள் ஆண்டில் பெறப்பட்ட மொத்த டிஎல்சிக்களில் கிட்டத்தட்ட 10% ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக சுமார் 60 லட்சம் டி.எல்.சி.க்கள் ஓய்வூதியதாரர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.

முக அங்கீகார முறையைப் பயன்படுத்துவதற்கு தங்கள் ஸ்மார்ட்போன்களில் "ஆதார் ஃபேஸ் ஆர்டி" மற்றும் "ஜீவன் பிரமான்" ஆகிய இரண்டு ஆப்களை நிறுவ வேண்டும். இந்த பயன்பாடுகளுக்கான ஆபரேட்டர் சரிபார்ப்பு ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. வெற்றிகரமாக ஃபேஸ் ஸ்கேன் செய்வதை உறுதி செய்ய விரிவான வழிகாட்டுதல்கள் செயலிகளில் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கேன் முடிந்ததும், ஜீவன் பிரமான் ஐடி மற்றும் பிபிஓ எண்ணுடன் மொபைல் திரையில் டி.எல்.சி சமர்ப்பிப்பு உறுதிப்படுத்தப்பட்டு, வீட்டிலிருந்து எளிதாக செயல்முறையை முடிக்கிறது.

ஓய்வூதியதாரர்களின் டிஎல்சி நோக்கத்திற்காக இந்த புதுமையான மற்றும் வசதியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது 2022 ஜூலையில் இபிஎப்ஓ-வின்  மென்பொருளில் உட்பொதிக்கப்பட்டது. இந்த புதிய முறையை அதிக அளவில் ஓய்வூதியம் பெறுவோரிடையே பிரபலப்படுத்துவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து கள அலுவலகங்களுக்கும் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கள அலுவலகங்களில் மட்டுமின்றி, 2023 ஜனவரி முதல் இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் நிதி ஆப்கே நிகாத் நிகழ்ச்சியின் போதும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த செயல்முறை தொடர்ந்து விளக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த விரிவான வீடியோ EPFO @SOCIALEPFO இன் அதிகாரப்பூர்வ YouTube –தளத்தில் கிடைக்கிறது.

இந்த முறையின் வசதி மேலும் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று EPFO நம்புகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்