முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆளுநர் மாளிகையில் ஜம்புத்தீவு பிரகடனம் நினைவேந்தல் நிகழ்வு

ஜம்புத்தீவு பிரகடனம்


பிரிட்டிஷ் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்கான மூலோபாய மற்றும் தொலைநோக்கு ஆவணம், இந்த நாளில் - ஜூன் 16, 1801 அன்று தமிழ்நாட்டின் மாபெரும் போர்ப்படைத் தலைவர்களான சிவகங்கை சமஸ்தானத்தின் பேரரசி கௌரி வல்லப மேதகு இராணி வேலுநாச்சியார் தளபதி பிரதானி முடிசூடா மன்னர்களான  மருது பாண்டியரால் பிரகடனம் செய்யப்பட்டது.


நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சென்னை கிண்டியில் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை ராஜ்பவனில் நடைபெற்ற மாமன்னர் மருது சகோதரர்கள் வெளியிட்ட ஜம்பு தீவு பிரகடனத்தின் நினைவேந்தல் நிகழ்வு மற்றும்  சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து ஆய்வு செய்தவர்களுக்கு பாராட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என்.ரவி, தேசத்துக்காக உயிரைக் காவு கொடுத்து பாடுபட்ட மருது சகோதரர்கள் துரதிர்ஷ்டவசமானவர்கள். ஜாதித் தலைவர்களாக ஆக்கப்பட்டது”. தவறான செயல் 


சுதந்திரத்துக்குப் பிறகு சுதந்திரப் போராட்ட வீரர்களை மறந்து அந்நியர்களாகப் பார்க்கிறோம் என்றார் ஆளுநர் திரு ஆர் என்.ரவி. "அதற்குப் பதிலாக, எங்களை அழித்தவர்களை நாங்கள் மகிமைப்படுத்துகிறோம், மேலும் சிலர் சுதந்திரம் எங்களுக்கு பரிசளிக்கப்பட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்."



80 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்வியல் குறித்து ஆய்வு செய்து சிறப்புத் திட்டங்களை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் மருது சகோதரர்களின் உறவினர் வழிவந்த வழித்தோன்றல்கள் மற்றும் பிரபல பேச்சாளர்களை ஆளுநர் கௌரவித்தார். மருது சகோதரர்களின் திருவுருவப் படத்துக்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


பேராசிரியர் என்.எஸ்.சந்தோஷ் குமார், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்; பாரத் கியானின் நிறுவனர்களான ஹரி மற்றும் ஹேமா ஹரி; P. செந்தில் குமார், பாஞ்சாலங்குறிச்சி போர் குறித்து எழுதியவர் ; பி.கோலப்பன், தி இந்துவின் மூத்த துணை ஆசிரியர்; மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வித் துறை இயக்குநர் கே.எஸ்.சர்வாணி ஆகியோர் பங்கேற்றனர். ஆளுநர் மாளிகை, ஜம்புத்தீவு பிரகடன தினத்தை கொண்டாடியதுடன் தாயக சுதந்திரத்துக்காக உயிர் நீத்த எண்ணற்ற தியாகிகளையும் இந்நாளில் நினைவுகூர்ந்தது. இதையொட்டி மருது சகோதரர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் 60  வயதுக்கு மேற்பட்ட சிலர் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். ஆளுநர் மாளிகையின் முன்முயற்சியில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் 90க்கும் மேற்பட்ட ஆய்வறிஞர்களால் ஆவணப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டின் சுமார் 100 கற்கும் மேற்பட்ட அதிகம் உலகம் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் அதோடு பல வெளியிடப்பட்டன.


ஆய்வறிஞர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய பேராசிரியர்கள் அவர்களின் கடினமான பங்களிப்புகளுக்காக தமிழ்நாடு ஆளுநரால் பாராட்டப்பட்டனர். தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்தவர்கள் மற்றும் மக்கள்  சுதந்திரத்துக்காக முன்னெடுத்த யுத்தம் மற்றும்  போராட்டங்களை ஆராய்ந்து அத்தகவல்களை வெளியிட்ட சில சிறந்த அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களும் பாராட்டப்பட்டனர்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, "தமிழ்நாட்டைச் சேர்ந்த எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து, அவர்களை நாம் மறக்கக் கூடாது என்றும்,  நாம் அனுபவிக்கும் சுதந்திரம் நமது தியாகிகளின் ரத்தம் மற்றும் துன்பங்களிலிருந்து பிறந்தது என்றும் கூறினார். நமது துணிச்சல்மிகு முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், நமது இளைஞர்களுக்கு உத்வேகமூட்டும் விதமாகவும், நமது சுதந்திர இயக்கத்தின் உண்மையான வரலாற்றை பதிப்பிக்க வேண்டும் என்றும் ஆய்வறிஞர்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்.


பிரிட்டிஷ் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி படைத்தளபதி கர்னல் அக்னியூ விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து திருச்சிராப்பள்ளியில் சிவகங்கை சமஸ்தானத்தின் சார்பில் உள்ள பல சமஸ்தானத்தின் கூட்டமைப்பு சார்பில் சின்ன மருது வெளியிட்ட மறுப்பு அறிவிப்புத் தான் ஜம்புத் தீவு பிரகடனம். இந்த அறிக்கை, 1801 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி திருச்சிராப்பள்ளி கோட்டையில் ஒட்டப்பட்டது.  அதன் சான்றாவணமாக: Tamilnadu A Real History- Rajayyan.K.-Ratna Publications, Trivandrum-2005. மற்றும்.                South Indian Rebellion,The first war of Indebendence-1800-1801 Rajayyan.K.-Rao and Raghavan, Mysore Publications, -1971 உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு