முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன் கைதாகி சிறை சென்ற காவல் பெண் ஆய்வாளர் சத்திய ஷீலா

 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் இராமருக்கும் அதே ஊர் இராமசாமிக்கும் கோவிலில் சிங்கச் சிலை வைப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.


இராமசாமி, அவரது மகன்கள் ராஜேந்திரன், ராம்குமார், காவல்துறை ஆய்வாளர் சத்ய ஷீலா (வயது 42) ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இராமரை தாக்கியதில், தலையில் பலத்த காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இராமசாமி மற்றும் அவரது மகன் இராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராம்குமாரும், சத்ய ஷீலாவும் தலைமறைவாகவே இருந்தனர். அவர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது பெங்களூரில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். தீவிர விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைத்தனர். இந்த நிலையில், சத்யஷீலா மீது ஏராளமான புகார்கள் வந்ததால், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் துறை ரீதியாக விசாரணை நடத்தி, சத்யஷீலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


மேலும் காவல்துறை ஆய்வாளரிடம் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. டிக் டாக் மூலம் இராம்குமாருக்கும், சத்ய ஷீலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.  அதன் பிறகு பெண் டிஎஸ்பி ஒருவருடன் இராம்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகுதான், ராம்குமார், பெண் இன்ஸ்பெக்டர் சத்ய ஷீலாவுடன் வாழ்வது தெரிந்துக் கொண்ட பெண் டிஎஸ்பி. பின் தன் காவலர்களை அனுப்பி, இருவரையும் காவல்துறை வேனில் ஏற்றி வரும்படி உத்தரவிட்டார்.


இரண்டு நாட்கள் விசாரணைக்குப் பின் இராம்குமாரின் செல்போனை மட்டும் பறிமுதல் செய்து அவரை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு இராம்குமார் இன்ஸ்பெக்டருடன் வசித்து வந்தார். சரியாக வேலைக்குச் செல்லாத பெண் ஆய்வாளர் , ராம்குமாருடன் சேர்ந்து கந்து வட்டித் தொழில் செய்து வந்தார். அதனால் அவர் மண்டபம் அகதிகள் முகாம் காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். தற்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.                          அதே நேரத்தில், சில மாதங்களுக்கு முன், சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய போது, ​​20க்கும் மேற்பட்ட இடங்களில் பேக்கரி நடத்திய  நாச்சியப்பனை அழைத்து வந்து, போக்சோ வழக்குப் பதிவு செய்து, கைது செய்தார்.

அது பொய் வழக்கு எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நாச்சியப்பன் தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு. விசாரணையில் அவர் மீதான வழக்கு பொய்யானது என்பது தெரிய வந்தது. அந்த வழக்கில் சத்யஷீலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது சத்யஷீலா மீது மேலும் புகார்கள் உள்ளதா என ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இராமநாதபுரம் சைபர் கிரைம் காவல்துறை ஆய்வாளராகப் பணியாற்றும் முன்பு சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக சத்திய ஷீலா பணியாற்றியுள்ளார். அப்போது தேவகோட்டையில் உள்ள காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தார். அங்கு வசித்தபோது தான் ராம்குமாருடன் தொடர்பு ஏற்பட்டு நெருங்கிப் பழகியுள்ளார். அதைத் தொடர்ந்து ராம்குமாரை தன்னுடனே அவர் தங்க வைத்தார். நாளடைவில் அது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு புகார்கள் வரத் தொடங்கிய நிலையில் மற்றொரு ர திருப்பமாக ராம்குமாரின் ரீல்ஸ் வீடியோவுக்கு, மதுரையைச் சேர்ந்த பெண் காவல்துறை உயரதிகாரி ஒருவரும் லைக் கொடுத்து உள்ளார். அதிகாரியைப் பற்றி தெரிந்து கொண்டு, இராம்குமார் தொடர்ந்து தகவல்களை அனுப்பி வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இராம்குமாரின் தகவல்கள் வரம்பு மீறியதால் அவரைப் பற்றி விசாரித்த போது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில்  ஆய்வாளர் சத்தியஷீலாவுடன், ராம்குமார் வசித்து வந்தது தெரிந்ததைத் தொடர்ந்து அந்த பெண் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இராம்குமாரை மதுரைக்கு கொண்டு சென்று விசாரித்ததில் அவர் ஏற்கனவே சில பெண்களை ஏமாற்றி நகை உள்ளிட்டவற்றை மோசடி செய்த தகவல் சத்திய ஷீலாவிற்கு தெரிய வந்ததனால் தனக்கு எதுவும் பிரச்சினை வந்து விடுமோ என்ற அச்சத்தில் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சத்திய ஷீலா தலைமறைவானார்.

விசாரணைக்குப் பின்னர் ராம்குமார் திருப்பி அனுப்பப்பட்ட தகவல் கிடைத்த பின்னரே, மீண்டும் இருப்பிடத்திற்கு வந்துள்ளார்.

இதுபோன்று சத்திய ஷீலா மீதும் தொடர்ந்து புகார்கள் வந்ததால் அவர் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மறுவாழ்வு முகாம் அலுவலக ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.

பின்பு சத்தியஷீலா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, சைபர்கிரைம் பிரிவுக்கு கூடுதல் பொறுப்பு ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புகார்களில் சிக்கி உள்ள ஆய்வாளர் சத்தியஷீலா, இரண்டு பணிகளில் நியமிக்கப்பட்டது காவலர்கள் மத்தியில் பரபரப்பாகவும் பேசப்பட்ட சூழலில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தன்னுடன் இருந்த இராம்குமாருடன், சென்றபோது ஏற்பட்ட தகராறில் நடந்த கொலையில் சிக்கி சிறை சென்றிருப்பது காவல் துறை வட்டாரத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் திருவிழாவில் நடந்த தகராறின் போது ராமர் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் சைபர் கிரைம் காவல் துறை ஆய்வாளர் சத்திய ஷீலா (வயது 42)


, அவருடைய  கள்ளக்காதலன் ராம்குமார் ( வயது 35) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ராம்குமாருக்கு திருமணமாகவில்லை. சமூகவலைத்தளங்களில் வீடியோ பதிவிடுவதில் ஆர்வம் கொண்டவர், ரீல்ஸ் வீடியோக்கள், டிக்-டாக் என்று பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அவரது வீடியோ பிடித்து லைக் கொடுப்பவர்கள், பெண்களாக இருந்தால் அவர்களிடம் வம்படியாகச் சென்று பேசுவது ராம்குமாரின் வழக்கம். சிலர் அவரது பேச்சில் நம்பிக்கை வைத்து மணிக்கணக்கில் தொடர்ந்துள்ளனர்

அவ்வாறு வீடியோவுக்கு லைக் கொடுத்து பேசத்தொடங்கியவர்களில் ஒருவர் தான் சத்தியஷீலா. முதலில் அவர் சாதாரண பெண் போலத்தான் பேசி இருக்கிறார். சில நாட்களில் அவர் காவல்துறை ஆய்வாளர் என்பதும், தனியாக வசிப்பதும் ராம்குமாருக்கு தெரியவந்ததால், அவரை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...