முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொலை வழக்கில் கள்ளக்காதலனுடன் கைதாகி சிறை சென்ற காவல் பெண் ஆய்வாளர் சத்திய ஷீலா

 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் இராமருக்கும் அதே ஊர் இராமசாமிக்கும் கோவிலில் சிங்கச் சிலை வைப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.


இராமசாமி, அவரது மகன்கள் ராஜேந்திரன், ராம்குமார், காவல்துறை ஆய்வாளர் சத்ய ஷீலா (வயது 42) ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இராமரை தாக்கியதில், தலையில் பலத்த காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இராமசாமி மற்றும் அவரது மகன் இராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராம்குமாரும், சத்ய ஷீலாவும் தலைமறைவாகவே இருந்தனர். அவர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது பெங்களூரில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். தீவிர விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைத்தனர். இந்த நிலையில், சத்யஷீலா மீது ஏராளமான புகார்கள் வந்ததால், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் துறை ரீதியாக விசாரணை நடத்தி, சத்யஷீலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


மேலும் காவல்துறை ஆய்வாளரிடம் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. டிக் டாக் மூலம் இராம்குமாருக்கும், சத்ய ஷீலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.  அதன் பிறகு பெண் டிஎஸ்பி ஒருவருடன் இராம்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகுதான், ராம்குமார், பெண் இன்ஸ்பெக்டர் சத்ய ஷீலாவுடன் வாழ்வது தெரிந்துக் கொண்ட பெண் டிஎஸ்பி. பின் தன் காவலர்களை அனுப்பி, இருவரையும் காவல்துறை வேனில் ஏற்றி வரும்படி உத்தரவிட்டார்.


இரண்டு நாட்கள் விசாரணைக்குப் பின் இராம்குமாரின் செல்போனை மட்டும் பறிமுதல் செய்து அவரை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு இராம்குமார் இன்ஸ்பெக்டருடன் வசித்து வந்தார். சரியாக வேலைக்குச் செல்லாத பெண் ஆய்வாளர் , ராம்குமாருடன் சேர்ந்து கந்து வட்டித் தொழில் செய்து வந்தார். அதனால் அவர் மண்டபம் அகதிகள் முகாம் காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். தற்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.                          அதே நேரத்தில், சில மாதங்களுக்கு முன், சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய போது, ​​20க்கும் மேற்பட்ட இடங்களில் பேக்கரி நடத்திய  நாச்சியப்பனை அழைத்து வந்து, போக்சோ வழக்குப் பதிவு செய்து, கைது செய்தார்.

அது பொய் வழக்கு எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நாச்சியப்பன் தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு. விசாரணையில் அவர் மீதான வழக்கு பொய்யானது என்பது தெரிய வந்தது. அந்த வழக்கில் சத்யஷீலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது சத்யஷீலா மீது மேலும் புகார்கள் உள்ளதா என ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இராமநாதபுரம் சைபர் கிரைம் காவல்துறை ஆய்வாளராகப் பணியாற்றும் முன்பு சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக சத்திய ஷீலா பணியாற்றியுள்ளார். அப்போது தேவகோட்டையில் உள்ள காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தார். அங்கு வசித்தபோது தான் ராம்குமாருடன் தொடர்பு ஏற்பட்டு நெருங்கிப் பழகியுள்ளார். அதைத் தொடர்ந்து ராம்குமாரை தன்னுடனே அவர் தங்க வைத்தார். நாளடைவில் அது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு புகார்கள் வரத் தொடங்கிய நிலையில் மற்றொரு ர திருப்பமாக ராம்குமாரின் ரீல்ஸ் வீடியோவுக்கு, மதுரையைச் சேர்ந்த பெண் காவல்துறை உயரதிகாரி ஒருவரும் லைக் கொடுத்து உள்ளார். அதிகாரியைப் பற்றி தெரிந்து கொண்டு, இராம்குமார் தொடர்ந்து தகவல்களை அனுப்பி வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இராம்குமாரின் தகவல்கள் வரம்பு மீறியதால் அவரைப் பற்றி விசாரித்த போது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில்  ஆய்வாளர் சத்தியஷீலாவுடன், ராம்குமார் வசித்து வந்தது தெரிந்ததைத் தொடர்ந்து அந்த பெண் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இராம்குமாரை மதுரைக்கு கொண்டு சென்று விசாரித்ததில் அவர் ஏற்கனவே சில பெண்களை ஏமாற்றி நகை உள்ளிட்டவற்றை மோசடி செய்த தகவல் சத்திய ஷீலாவிற்கு தெரிய வந்ததனால் தனக்கு எதுவும் பிரச்சினை வந்து விடுமோ என்ற அச்சத்தில் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சத்திய ஷீலா தலைமறைவானார்.

விசாரணைக்குப் பின்னர் ராம்குமார் திருப்பி அனுப்பப்பட்ட தகவல் கிடைத்த பின்னரே, மீண்டும் இருப்பிடத்திற்கு வந்துள்ளார்.

இதுபோன்று சத்திய ஷீலா மீதும் தொடர்ந்து புகார்கள் வந்ததால் அவர் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மறுவாழ்வு முகாம் அலுவலக ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.

பின்பு சத்தியஷீலா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, சைபர்கிரைம் பிரிவுக்கு கூடுதல் பொறுப்பு ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புகார்களில் சிக்கி உள்ள ஆய்வாளர் சத்தியஷீலா, இரண்டு பணிகளில் நியமிக்கப்பட்டது காவலர்கள் மத்தியில் பரபரப்பாகவும் பேசப்பட்ட சூழலில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தன்னுடன் இருந்த இராம்குமாருடன், சென்றபோது ஏற்பட்ட தகராறில் நடந்த கொலையில் சிக்கி சிறை சென்றிருப்பது காவல் துறை வட்டாரத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் திருவிழாவில் நடந்த தகராறின் போது ராமர் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் சைபர் கிரைம் காவல் துறை ஆய்வாளர் சத்திய ஷீலா (வயது 42)


, அவருடைய  கள்ளக்காதலன் ராம்குமார் ( வயது 35) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ராம்குமாருக்கு திருமணமாகவில்லை. சமூகவலைத்தளங்களில் வீடியோ பதிவிடுவதில் ஆர்வம் கொண்டவர், ரீல்ஸ் வீடியோக்கள், டிக்-டாக் என்று பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அவரது வீடியோ பிடித்து லைக் கொடுப்பவர்கள், பெண்களாக இருந்தால் அவர்களிடம் வம்படியாகச் சென்று பேசுவது ராம்குமாரின் வழக்கம். சிலர் அவரது பேச்சில் நம்பிக்கை வைத்து மணிக்கணக்கில் தொடர்ந்துள்ளனர்

அவ்வாறு வீடியோவுக்கு லைக் கொடுத்து பேசத்தொடங்கியவர்களில் ஒருவர் தான் சத்தியஷீலா. முதலில் அவர் சாதாரண பெண் போலத்தான் பேசி இருக்கிறார். சில நாட்களில் அவர் காவல்துறை ஆய்வாளர் என்பதும், தனியாக வசிப்பதும் ராம்குமாருக்கு தெரியவந்ததால், அவரை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்