முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வன உயிரினங்கள் குறித்த திரைப்படங்களின் இயக்குநர் திரு சுப்பையா நல்லமுத்து

வன உயிரினங்கள் குறித்த திரைப்படங்களின் இயக்குநர் திரு சுப்பையா நல்லமுத்து,

18வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் வி.சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்

18-வது மும்பை  சர்வதேச திரைப்பட விழாவின்  வி சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பிரபல வன உயிரினங்கள் குறித்த திரைப்பட இயக்குநர்  திரு சுப்பையா நல்லமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளதாக  மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார்.


தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "இந்தப் பதிப்பில் மதிப்புமிக்க விருதை வென்ற நல்லமுத்துவை நான் வாழ்த்துகிறேன்" என்று கூறினார். வன உயிரின திரைப்படங்களில்  அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் திரு சுப்பையா நல்லமுத்துவுக்கு எம்ஐஎஃப்எஃப் இந்த விருதை வழங்குகி கௌரவித்துள்ளது. மும்பையின் நாரிமன் பாயின்ட் பகுதியில் உள்ள நிகழ்த்து கலைகளுக்கான தேசிய மையத்தில் நடைபெற்ற, கதையல்லாத திரைப்படத்திற்கான தெற்காசியாவின்  மிகப்பெரியதும், பழமையானதும் என அறியப்படுகின்ற மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் பிரமாண்ட தொடக்க நிகழ்வில் இந்த விருது திரு சுப்பையா நல்லமுத்துக்கு வழங்கப்பட்டது.  இந்த விருது வனவிலங்குகள் குறித்த திரைப்படத் தயாரிப்பில் அவரது மிகச்சிறந்த பங்களிப்புக்கான அங்கீகாரமாகும்.


இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் மாணவரான  திரு சுப்பையா நல்லமுத்து சுற்றுச்சூழல் பற்றிய தொடர்களுக்காக பாண்டா விருது பெற்றவர். லிவிங் ஆன் தி எட்ஜ் என்ற இவரது படைப்பு மிகுந்த முக்கியத்தும் வாய்ந்ததாகும். அதிவிரைவு கேமராமேன் என்ற நிலையில் இவரது நிபுணத்துவம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணி வாய்ப்பை அளித்தது. வனவிலங்குகளை படம் படிப்பதில் அவரது அபரிமிதமான பங்களிப்பு உலகளாவிய பாராட்டைப் பெற்றுத்தந்துள்ளது.

ராயல் பெங்கால் புலி மீதான அவரது ஆர்வம் புலியை மையப்படுத்திய ஐந்து ஆவணப்படங்களாக  மாற்றம் கொண்டது. இந்தப் படங்கள், பிபிசி, நேஷனல்  ஜியாகிரஃபிக் சேனல் ஆகியவற்றுக்காக தயாரிக்கப்பட்டன. டைகர் டைனாஸ்டி (2012-2013), டைகர் குயின் (2010), தி வேர்ல்ட்ஸ் மோஸ்ட் ஃபேமஸ் டைகர் (2017) உள்ளிட்டவை இவரது மிகச்சிறந்த படைப்புகளாகும். சுற்றுச்சூழல் குறித்தும், மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையேயான உரையாடல்கள் குறித்தும் ஏராளமான  ஆவணப்படங்களை இவர் தயாரித்துள்ளார். இவற்றில்  எர்த் ஃபைல் (2000) என்பதை பிபிசி வேர்ல்ட்  நிறுவனத்திற்காகவும் தி வேர்ல்ட் கான் ஒயில்ட் (2001) என்பதை அனிமல் பிளானெட் நிறுவனத்திற்காகவும் தயாரித்துள்ளார். இந்தியாவில் வனவிலங்குகள் குறித்த படத்தயாரிப்பில் 4000 பிக்சல் அளவில் படப்பிடிப்பு செய்வதை முதல்முறையாக பயன்படுத்தியவர் திரு சுப்பையா நல்லமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து தேசிய திரைப்பட விருதுகள் உட்பட ஏராளமான தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை இவர் பெற்றுள்ளார். ஜாக்சன் ஹோல் வனவலங்கு திரைப்பட விழாவில் தொடர்ந்து நடுவராக இருந்து வருபவர். மேலும் இந்திய பனோரமா திரைப்பட விழாவில் (2021) நடுவர் குழு தலைவராகவும் பணியாற்றியவர். 

வி சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது பற்றி மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் ஒவ்வொரு முறையும், ஆவணப்படங்களுக்கு சிறந்த பங்களிப்பு செய்வதோடு, இந்தியாவில் அதன் வளர்ச்சிக்குப் பாடுபடுகின்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கு கௌரவம் மிக்க டாக்டர் வி சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.  இது 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசையும், கோப்பையையும், பாராட்டுப் பத்திரத்தையும் கொண்டதாகும். ஷியாம் பெனகல், விஜயா முலே உள்ளிட்ட பிரபல திரைப்படத் தயாரிப்பார்கள் முந்தைய ஆண்டுகளில் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். பழமை வாய்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் வி சாந்தாராம் நினைவாக இந்த விருது நிறுவப்பட்டது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...