முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விக்கிரவாண்டி சட்ட மன்றப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு: ஓர் அரசியல் பார்வை

விக்கிரவாண்டி சட்ட மன்றப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு


என்பதும் நாடகமாகவே காணும் நிலையில் அது ஒரு பொம்மலாட்டம் அல்லது பாவைக்கூத்து நூல் இருந்து ஆட்டுவிக்கும் இடம் வேறு.. அதை அறிவிக்கும் இடம் வேறு.. அவ்வளவே, என்பது தான் அரசியல் பார்வையாளர்கள் கருத்து. அரசியலில் ஒதுங்குவதும் ஓய்வெடுப்பதும் தற்கொலைக்குச் சமம்! -  என சட்ட மன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் விமர்சனம் செய்துள்ளதில் உண்மை உண்டு. 



எடப்பாடி வட்டம் சிலுவம்பாளையம் கே பழனிச்சாமி  அதிமுகவை அழிப்பதற்காகத் தான் பாரதிய ஜனதா கட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் என அதிமுகவிலிருந்து பிரிந்த கட்சி அமமுக சொல்வதில் உண்மை இருக்கலாம்.

முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் மரணம், கொடநாடு எஸ்டேட் கொள்ளைகள் அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் நடத்திய கொலைகள் ஒரு சாதுர்யத்தால் மறைக்கவோ, அல்லது மறக்கடிக்கப்படுகின்றன. என சாமானிய மக்கள் பேசுகின்றனர். பாஜக சொல்லுது அதை பழனிச்சாமி  செய்யுது !             


இது நான்காண்டுகளாக பாஜக நடத்தி வரும் அரசியல் பலப்பரீட்சை என்பது அரசியல் அறிந்தவர்களுக்குப் புரியும் ! தேர்தலுக்கு முன்பே சறுக்கல்.

இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கை கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி, இந்த முறை விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நிற்கிறது. 




ஆனால் தமிழ்நாட்டிலேயே  அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அதிமுக தான் எனச் சொல்லிக் கொள்ளும் அதிமுக, முக்கியத்துவம் வாய்ந்த சட்டமன்ற இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது. 

வெற்றி பெறுவோமா என்ற சந்தேகத்தைத் தாண்டி இது எந்த இடத்தில் கொண்டு போய் நிறுத்துமோ என்ற எண்ணம் எடப்பாடி கே. பழனிச்சாமியை அதிகமாகவே துளைத்தெடுக்கலாம்.


நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. கூட்டணி அமைப்பதில் எடப்பாடி கே.பழனிச்சாமி கோட்டை விட்டுவிட்டார் என தற்போது உள்ள அதிருப்தி கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

நாம் ஏற்கனவே பல தடவை சொல்லி இருக்கிறோம். ஒரு கட்சிக்கு  எவ்வளவு வருஷம் வேண்டுமானாலும் ஒருவர் சிறப்பாக தலைமை யேற்று நடத்தலாம்.

ஆனால் அந்தக் கட்சியை தேர்தல் களத்தில் வெற்றி பெற வைப்பதில் தான் அவருடைய உண்மையான பங்கு மற்றும் செல்வாக்கு அடங்கி இருக்கிறது.


தமிழ்நாட்டில் கட்சி தொடங்கி நெடுங்காலமாக நடத்தி வரும்  பலரும் இந்த இடத்தில் தான் சற்று சறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பல்லாண்டு காலம் ஆண்ட கட்சிக்குத் தலைமை பொறுப்பை வகிக்கும் எடப்பாடி கே பழனிச்சாமியின் சறுக்கல்,  மிகவும் வித்தியாசமாகவே உள்ளது..

எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாதது, திமுகவுக்கு எதிராக  பாரதிய ஜனதா கட்சியை வளர்த்து விடவே உதவப்போகிறது.. 

வட மாவட்டங்களில் வன்னியர் பகுதியில் செல்வாக்குப் பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின்  வாக்கு வங்கியை, தனதாக்கிக்கொண்டு பாரதிய ஜனதா கட்சி இதனை திறம்படவே செய்யும்.

தேர்தலில் தான் சறுக்கல் என்றால் இந்த முறை........?  இனி பல சோதனைகளை சந்திக்க வேண்டிய நிலையும் உள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி ஏற்றுக் கொண்டபின் அவர் தலைமையில்,  முக்கிய கூட்டம் நடந்ததில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்புத் தலைவர்கள்  பங்கேற்றனர்.



'நாடு முழுதும், ஒவ்வொரு அமைப்பின் கீழ், எத்தனை வழக்குகள் நிலுவையிலுள்ளது? அதன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?' என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது.

அனைத்து வழக்குகள் குறித்தும், சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு ஆகிய மூன்றும் தனித்தனியாக ஒரு அட்டவணையை அமைச்சரிடம் கொடுத்த நிலையில், நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்த அனைத்து விபரங்களுமிருந்தன; தமிழ்நாட்டிலிருந்து, எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதால்.

அனைத்தையும் பார்த்த பிறகு 'எந்த ஒரு வழக்கையும் தாமதம் செய்ய வேண்டாம்; அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடருங்கள்' என, உத்தரவிடப் பட்டதாகத் தகவல்.




நிதி அமைச்சகத்தில் கட்டுப்பாட்டில் அமலாக்கத்துறை இருந்தாலும், FCRA படி வெளிநாட்டுப் பண விவகாரமிருந்தால், அதில் உள்துறை அமைச்சகமும் சம்பந்தப்பட்டதென்பதால், அமலாக்கத்துறை இயக்குனர் இந்த ஆலோசனையில் பங்கேற்றார்.


அரசியல் தொடர்பான வழக்குகளில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, போதைப் பொருள் விவகாரம், மணல் கடத்தல் என, அரசியல்வாதிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் இனி விசாரணை வேகமெடுக்கும். ஒரு சில அதிரடி சோதனைகளும் நடக்க வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது.             


 எதிர் வரும் 2026 ஆம் ஆண்டு திமுகக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி காலுன்ற முடியாது எனச் சொன்ன அனைவருக்கும் அது அதிர்ச்சியைக் கொடுக்கும்.

6 மாதங்களுக்கு முன்பு நடந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் 13 சதவீதம் வாக்குகள் மட்டும் எடுத்த பாரதிய ஜனதா கட்சி

இந்த பாராளுமன்றத் தேர்தலில் 35 சதவீதம் வாக்குகள் எடுக்குமென்று யாராவது நம்பினோமா?

தமிழ்நாட்டில் 3.5 சதவீதமாக எடுத்த பாரதிய ஜனதா கட்சி  12 சதவீதம் வாக்குகள் எடுக்குமென யாராவது நம்பினோமா? 12 சதவீதம் வாக்குகள் சாதாரணமானதல்ல

திமுகவுக்கு இது நேரடியாக விடுத்த எச்சரிக்கையாகவே பார்க்க முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு