முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

15 க்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்து மோசடி செய்த பெண் மற்றும் தரகர் உள்ளிட்ட இருவரைத் தேடும் காவல்துறை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இளைஞர்  தாராபுரத்திலிருந்து உடுமலைப்பேட்டை சாலையில் அடுமனை மற்றும் கால்நடைத் தீவனங்களும் விற்பனை செய்து வரும் மகேஷ் அரவிந்த் ( 29 வயது) டைய நபருக்கு 


திருமணத்திற்குப் பெண் கிடைக்காததால்,  உறவினர்கள்  பெண் தேடியுள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம் கொடுமுடி சந்தியா (வயது 30) என்பவர் 'அம்பி டேட் தி தமிழ் வே' என்ற திருமண இணையதள அப்ளிகேஷன் மூலம் அந்தப் பெண்ணைச் சந்தித்தார்.பின்னர் இருவரும் பழனி அருகிலுள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதை அந்த இளைஞரின் பெற்றோரும் திருமணத்தை ஏற்றுக்கொண்டு அந்தப் பெண்ணுக்குத் தேவையான நகைகள், புடவைகள் அனைத்தையும் வாங்கிக் கொடுத்து கவனித்துக் கொண்டனர். திருமணமாகி 3 மாதங்களாகியும் சந்தியாவுக்கு வயது, தோற்றம் பொருந்தாததால் சந்தேகமடைந்து ஆதார் அட்டையைச் சரி பார்த்த போது சென்னையைச் சேர்ந்த அருன் என்ற வேறொருவர்  கணவர் பெயராக இருப்பதும், வயதும் தெரியவந்தது.

மேலும் பெயர் மாற்றமாகப் பதிவு செய்துள்ளதையும் அறிந்ததனால் அதிர்ச்சியடைந்த இளைஞரின் குடும்பத்தினர் சந்தியாவிடம் விசாரித்ததில், ஆத்திரமடைந்தவர், மற்றும் குடும்பத்தினரை மிரட்டினார். அதனால் பதற்றமடைந்த அந்த நபர், தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அந்த பெண்ணை அழைத்து சென்று நடந்த சம்பவத்தை  காவல் நிலையத்தில் தெரிவித்தார். விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு  பத்தாண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த அருன் என்ற ஒருவருக்கும் நடந்த திருமணத்தில் குழந்தை இருப்பதும் தெரிந்தது. இவர் கரூரில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், காவல்துறை ஆய்வாளர், மதுரையில் மற்றொரு காவல்துறை சார்பு ஆய்வாளர் கார்த்திக், கரூரில் கருவூல அலுவலர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்ததாகத் தெரிகிறது. திருமணமான சில மாதங்களிலேயே சந்தியா கணவருடன் தகராறு செய்து நகை பணத்துடன் தலைமறைவாவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சந்தியாவின் திருமணப் பட்டியல்  நீளமாகச் செல்கிறது. சந்தியாவிடம்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரைத் திருமணம் செய்து கொண்டு பல தொழிலதிபர்கள் தங்களிடம் இருந்த நகை பணத்தை தொலைத்து விட்டு அதைப் பற்றி வெளியே கூற முடியாமல் திணறி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. 15 க்கும் மேற்பட்டோரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியின் மோசடி ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்தியாவுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த அருன் என்ற ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளதாம். அதன் மூலம் ஒரு குழந்தை இருப்பதும் அதன் பிறகு கரூரைச் சேர்ந்த காவல்துறை சார்பு ஆய்வாளர் கார்த்திக் மற்றும் கொடுமுடியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி ராஜமாணிக்கம் மகன் பிரகாஷ், நில அளவை சர்வேயர் ராஜேஷ் உள்பட 15 பேர் வரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக சந்தியா மீது புகார்.  ஈரோட்டைச் சேர்ந்த சந்தியா என்ற பெண், பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தொடர்பாக விசாரித்த நிலையில். தமிழ்செல்வி, வயது 34, என்ற திருமண புரோக்கர் வாயிலாக பல ஊர்களில் திருமணத்துக்காக காத்திருப்பவர்களை அறிந்து, அவர்களை திருமணம் செய்து, பணம், நகையுடன் தலைமறைவாகியுள்ளனர்

இதுவரை இந்த மாதிரி 15 க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியுள்ளனர்.  இது தொடர்பாக வெளியில் தெரிந்தால் அவமானம் என்று நினைத்தவர்கள் பலர் புகார் கொடுக்கவில்லை இந்த  இருவரும் பிடிபடும் பட்சத்தில், முழுமையான விவரம் விசாரணை மூலம் தெரிய வருமாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு