முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முகமதிய கோஷா விதவைகள் உதவி அறக்கட்டளை' நிதி ஆதாரம் உண்மை நிலை

இஸ்லாமிய மதத்தில் ஆதரவற்ற நிலையில், வறுமையில் தவிக்கும் பெண்களுக்கு


உதவிடும் வகையில், 1892 ஆம் ஆண்டில் மன்னர் ஆட்சியில் ஆற்காடு நவாப் சார்பில், 'முகமதிய கோஷா விதவைகள் உதவி அறக்கட்டளை' எனும் அமைப்பு துவங்கப்பட்டது. பின்னர் அது, 'முஸ்லிம் பெண்கள் உதவிச் சங்கம்' எனப், பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அது, இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு 1976 ஆம் ஆண்டில் தமிழநாடு  சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒரு சங்கமாகப் பதிவு செய்யப்பட்டது. தற்போது, மாவட்ட ஆட்சித் தலைவரை அதன் தலைவராகக் கொண்டு, இந்தச் சங்கங்கள் செயல்படுகின்றன.




சென்னையில் மட்டும் செயல்பட்டு வந்த இந்தச் சங்கம், 2007 ஆம் ஆண்டில்  மற்ற மாவட்டங்களிலும் தனித்தனியாக துவங்கப்பட்டன. தற் போதைய நிலவரப்படி, 38 மாவட்டங்களில், 43 முஸ்லிம் பெண்கள் உதவிச் சங்கங்கள் செயல்படுகின்றன.



இந்தச் சங்கங்கள் வாயிலாக, இதுவரை, 3.75 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. இவ்வாறு திரட்டப்படும் நிதி ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பத்திரப்பதிவின்போது, பொதுவாக கொடி நாள் நிதி வசூலிப்பது வழக்கம். ஆனால், தற்போது முஸ்லிம் பெண்கள் அமைப்புக்கு நிதி திரட்ட பதிவுத்துறை உயர் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். இதே போல், பிற மதங்களைச் சேர்ந்த ஆதரவற்ற பெண்களுக்கும் உதவ, மாநில பத்திரப் பதிவுத்துறை பரிந்துரைக்குமா என்ற வினா தற்போது எழுந்துள்ளது.



ஆதரவற்ற பெண்களுக்காக அரசின் பல்வேறு துறைகள் சார்பில், சமூக நல திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில், இப்படி தனித்தனியாக மதம் சார்ந்த நிதி திரட்டப் பரிந்துரைப்பது எந்த விதத்தில் சரி என்பது தெரியவில்லை. இது ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி வருமா ? வரும் எனில் ஏன் நடவடிக்கைகள் இல்லை என மிஸ்டர் பொதுஜனம் எழுப்பும் வினா இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கருத்து என்ன என்பதே நமது எழு வினாவாகும்.ஜனவரி மாதம் 2012 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தில் வெளிவந்த செய்தி இது முஸ்லிம் பெண்கள் சங்கத்திற்கு மானியமாக ஆண்டுதோறும் வழங்கும்.

இந்தச் சங்கம் மூலம் ஆதரவற்ற முஸ்லிம் விதவைகளுக்கு உதவி செய்தல், மாதாந்திர உதவித் தொகை வழங்குதல்,  கைவினைப் பொருள்கள் செய்யப் பயிற்சி அளித்து, சிறு தொழில் தொடங்க உதவுதல், விதவைகள், முதியோருக்கு இருப்பிடம் அமைத்துக் கொடுத்தல். மருத்துவ உதவி செய்தல், வியாபாரம், தொழில், கல்வித் துறையில் உதவுதல், சுய உதவிக் குழுக்கள் அமைத்து, அதன் மூலம் பயிற்சியளிக்கப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பல தரப்பட்ட கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம், தேவையான பெண்களுக்கு கடனுதவி அளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழ்மை நிலையிலுள்ள அனைத்துப் பெண்களும் பயனடைய மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரைச் சந்தித்து பயன் பெறலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடத்தக்கது.இத் திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) நிர்வாக இயக்குநரின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது. இச்சங்கங்களுக்கான விதைத் தொகை (Seed Money) ரூ.1 இலட்சம் மற்றும் அரசின் இணைத் தொகை ஆகியவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநர் மூலம் விடுவிக்கப்படும்.

இச்சங்கங்கள் உறுப்பினர் கட்டணம் மற்றும் சந்தா மற்றும் நன்கொடை வசூல் மூலமாக நிதியைத் திரட்டுகின்றன. தமிழ்நாடு அரசு முன்னரே குறிப்பிட்டவாறு சங்கங்கள் திரட்டிய நிதிக்கு இணை மான்யமாக ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சம் ரூபாய்.10 இலட்சம் ஆண்டுதோறும் அரசு வழங்குகின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...