முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வங்காள தேசத்தில் கலவரம் இந்தியர்கள் நாடு திரும்பும் நிலை

வங்காள தேசத்தின் அரசு வேலை வாய்ப்புகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கு இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பு, இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகள் மற்றும் வாரிசுகளான அடுத்த தலைமுறை பேரன் பேத்திகள், உறவினர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படும் நிலையில், அதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது அது வன்முறையாகவும் மாறியது.  இந்தப் போராட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அணைத்தும் மூடப்பட்டன, இணைய வழிச் சேவைகள் நிறுத்தப்பட்டன.  அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாணவர்கள் அமைப்பினர் மறுத்து விட்டனர் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டாக்கா உள்ளிட்ட பகுதிகளில் மாணவர் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.தொடர்ச்சியான போராட்டங்களால்  பதற்றமான சூழல்கள் நிலவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.கலவரங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆகவும் அதிகரித்துள்ள நிலையில்,

ஊரடங்குச் சட்ட விதிமுறைகளை மீறுவோரைக் கண்டதும்  துப்பாக்கிச் சூடு நடத்த காவல் துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியில் உள்ள அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர் தெரிவித்தார். தொடர் போராட்டங்களால் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கல்வி மற்றும் வேலை உள்ளிட்டவைகளுக்காக வங்காள தேசம் சென்ற இந்தியர்கள் ஏறத்தாழ ஆயிரம் பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். அதேபோல் அமெரிக்கர்கள் மறு உத்தரவு வரும் வரை வங்காள தேசத்திற்குச் செல்ல வேண்டாமென அந்த நாட்டரசு உத்தரவிட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கும் வங்கள தேசத்திற்குமிடையே நடைபெற்ற போரில் ஈடுபட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு இதுவரை வழங்கப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில், அப்படி ரத்து செய்யப்பட்டது செல்லாதென்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டுமென்றும் 2024 ஜூன் மாதம் 5 ஆம் தேதி அந்த நாட்டின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தான் மாணவர்களின் இந்தப் போராட்டத்திற்குக் காரணமெனக் கூறப்படுகிறது. நாடு தழுவிய இந்தப் போராட்டத்தில் பல இடங்களில் வன்முறைகள் வெடித்தது.  கட்டுப்படுத்த ஷேக் ஹசீனா அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. பாதுகாப்புப் பணியில் காவல்துறையினருடன் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டனர். இணைய வழி சேவைக முடக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு படையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. மத்திய வங்காள தேசத்திலுள்ள நர்சிங்டி சிறையை போராட்டக்காரர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டு. சிறைக்கு தீவைத்தவர்கள், நூற்றுக்கணக்கான கைதிகளையும் விடுவித்தனர்.

திறமையின் அடிப்படையில் தான் அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில் போராட்டக்காரர்களை அவமதிக்கும் வகையில் பிரதமர் ஷேக் ஹசீனா ஜூலை மாதம் 14-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்தது.

ஆம்னெஸ்ட் இண்டர்நேஷனல் அமைப்பின் பாபு ராம் பந்த் வெளியிட்ட அறிக்கையில், “வங்காள தேசத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. கருத்து வேறுபாடு மற்றும்போராட்டத்துக்கு எதிராக வங்காள தேச அதிகாரிகளின் முழுமையான சகிப்புத் தன்மை இன்மையைத் தான் இது காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

வங்காள தேசத்திலுள்ள இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்புவதை வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி வருகிறது. அது தொடர்பாக சிவில் விமானப்போக்குவரத்துத் துறை, குடியேற்றத்துறை, எல்லைச் சாவடிகள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையுடன் இணைந்து செயல்படுகிறது.

அது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:    வங்கதேசத்தில் இருந்து இதுவரை 778 இந்திய மாணவர்கள் பல்வேறு எல்லைச் சாவடி வழியாக பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். தவிர டாக்கா மற்றும் சிட்டகாங்கிலிருந்து சுமார் 200 மாணவர்கள் வழக்கமான விமான சேவை மூலம் நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பிய இந்திய மாணவர் எண்ணிக்கை 998 ஆக உயர்ந்துள்ளது. இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப டாக்காவிலுள்ள இந்தியத் தூதரகம், சிட்டகாங், ராஜ்ஷாகி, சில்ஹெட், குல்னா ஆகிய இடங்களில் உள்ள துணைத் தூதரகங்கள் உதவுகின்றன. இன்னும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் வங்காள தேசத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உள்ளனர். அவர்களுடன் இந்தியத் தூதரகங்கள் தொடர்பிலிருந்து வருகின்றன. தேவையான உதவிகளை செய்தும் வருகின்றன.

சாலை வழியாக நாடு திரும்புவோருக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. வங்காள தேசத்திலிருந்து தொடர் விமான சேவை உறுதிப்படுத்தப்படுகிறது. இதற்காக வங்காள தேச சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களுடன் டாக்காவிலுள்ள இந்தியத் தூதரகம் ஒங்கிணைந்து செயல்படுகிறது. என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது



.

மேலும் வங்கதேசத்தில் உள்ள இந்திய மாணவர்கள் தொடர்பான தகவல்களுக்கு டாக்கா தூதரகம் மற்றும் பல துணைத் தூதரகங்கள் உதவி எண்களையும் அறிவித்துள்ளது.


இந்த நிலையில்வங்காள தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு வழங்க எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து வங்காள தேச உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கதேசம் முழுவதும் கலவரம் வெடித்த நிலையில் இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...