முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை.


சென்னை செம்பியம் பகுதியில் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே நின்று கொண்டிருந்த போது அவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு 6 நபர்கள் கும்பல் அங்கிருந்து தப்பியோடினர். 

படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட  நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் 


ஆம்ஸ்ட்ராங்கை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டியதாகக் கூறப்படுகிறது. ஆம்ஸ்டாங்கை வெட்டி விட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.வருத்தம் தரும் செய்தி. ஆன போதிலும் இவர்கள் திடீர் தலைவர்களாக எப்படி உருவானார்களோ அதே வழியில் உயிரையும் இயற்கை எடுத்து விடுகிறது.



ஜாதிய வழி கட்டப்பஞ்சாயத்துக்கள் சென்னை பகுதியில் கடந்த காலங்களில் நடந்த பல நிகழ்வுகள் இதன் தொடர்ச்சியாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை செல்லும் வாய்ப்பு உள்ளது

சென்னையில் கொளத்தூர் பகுதி சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஆம்ஸ்ட்ராங் வயது: 52 வழக்கறிஞர் LLB, ஆண்டு 2009, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், திருப்பதியில் பயின்றார்,

 கடந்த 2009 ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் குறித்த செய்தி வெளியாகியதில், சென்னையில் உள்ள கேங்ஸ்டர்கள் பட்டியலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் இருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அப்போதைய ஆசிரியர் சுனில் நாயர், பத்திரிக்கையாளர் செல்வராஜ், வெளியீட்டாளர் நாராயணன் ஆகியோர் மீது சென்னை எழும்பூர் சிவில் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் அவதூறு வழக்கைத் தொடர்ந்தார்.



அதில் ஆம்ஸ்ட்ராங் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி ஆனந்தன், எந்த ஒரு ஆதாரங்களும் இல்லாமலும் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தச் செய்தி வெளியிட்டுள்ளதாக வாதிட்டார். மேலும், இது தொடர்பாக தங்கள் தரப்பில் அனுப்பிய நோட்டீசுக்கும் அவர்கள் பதில் அளிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய 13 வது எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த செய்தி வெளியிட்டுள்ளது நிரூபணம் ஆகியுள்ளதாகக் கூறி, மூன்று பேருக்கும் ஆறு மாத காலம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.


மேலும் மூன்று பேருக்கும் தலா 2000 ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். பின்னர், தங்களுக்கு உடனடியாக ஜாமின் வழங்கக் கோரி மூன்று பேர் தாக்கல் செய்த மனுவையும் ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மூன்று பேருக்கும் ஜாமின் வழங்கியும் உத்தரவிட்டது. தற்போது தேர்தவில் திமுக கூட்டணியின் நாமக்கல்  வேட்பாளர் ஜாதி வெறியர் என சூரியமூர்த்தியின் வேட்பு மனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி, தமிழ்நாடு மற்றும் தேசிய தேர்தல் ஆணையத்திடன் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக புகார் மனுவை  அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.  சென்னை மாநகராட்சி முன்னாள் சுயேச்சை கவுன்சிலர் (2006)- வழக்கறிஞர் -பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங், 
சென்னை பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை.
"பூர்விக வாழ்விடம் பெரம்பூரில் இருந்து அண்ணாநகருக்கு இடம் பெயர்ந்தவர்,


நண்பர்களை பார்த்துப் போக பெரம்பூர் வந்தபோது இந்த கொடூரச்செயல் நிகழ்ந்து விட்டது" என்கின்றனர் அவர் ஆதரவாளர்கள். 
ஆம்ஸ்ட்ராங் உடல் உடற்கூராய்வுக்காக அப்பல்லோவில் இருந்து சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது


இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு
பட்டத்து யானையாக சென்னையில் வலம்வந்த  கே. ஆம்ஸ்ட்ராங்
படுகொலை செய்த சம்பவத்தில் ஏற்கனவே கொலையான ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு உட்பட 8 பேர்


சரண்டைந்தனர்
ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை காவல்துறை தரப்பில் :
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது), முன் விரோதம் காரணமாக பெரம்பூர்,  செம்பியம் PS எல்லையில் உள்ள வேணுகோபால் சாமி கோவில் தெருவில் அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் தாக்கப்பட்டார்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக 10 காவல் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்ற சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் விசாரணை தொடர்கிறது. இங்கு சில முன் சம்பவம் காணவும் :-     பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையும், ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடிக்கு ஆதரவான ஆற்காடு சுரேஷ் மரணமும்.! 
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகிலுள்ள புண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவுடி சுரேஷ். இவர் மீது 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. காஞ்சி சங்கரராமன், ரவுடி ராதாகிருஷ்ணன், சின்னா மற்றும் வழக்கறிஞர் பகத்சிங் கொலை என பல கொலை வழக்குகளும், மேலும் வழிப்பறி வழக்குகளும் இவர் மீதுள்ளன. 8 முறை குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். மேலும், தமிழ்நாடு தாண்டி ஆந்திரப் பிரதேசத்திலும் இவர் மீது பல வழக்குகள் உள்ளன. 
 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி ஒரு வழக்கு விசாரணைக்காக ஆற்காடு சுரேஷ், அவரது வழக்கறிஞருடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு பிறகு புளியந்தோப்பு மாதவன் உட்பட சில நண்பர்களுடன் மெரினா கடற்கரையையடுத்த பட்டினப்பாக்கம் கடற்கரைக்குச் சென்று  மணல்பரப்பில் அமர்ந்து மாதவனுடன் மது குடிக்கும் போது காரில் வந்த மர்மக் கும்பல் ஒன்று ஆற்காடு சுரேஷையும், மாதவனையும் வெட்டி விட்டு தப்பிச் சென்றது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆற்காடு சுரேஷ் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த மாதவன் சிகிச்சை பெற்று உயிர் தப்பினார்.
ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் அதிமுக ஜோகன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கொலைச் சம்பவத்தின் முக்கிய சாட்சியான மாதவனையும் அந்த கும்பல், ஆற்காடு சுரேஷை கொலை செய்த 5 மாதங்களில் அதாவது கடந்த ஜனவரி மாதம் கொலை செய்தது.
ஆற்காடு சுரேஷ் கொலை பின்னணியில் ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி விவகாரம் இருப்பது அப்போது விசாரணையில் தெரிய வந்தது.


ஆற்காடு சுரேஷ் அந்நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார்.
ஆனால், ஆருத்ரா கோல்டு பண மோசடியில் பாதிக்கப்பட்ட சிலருக்கு, தற்போது கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் பணத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறார் என்பது தான் ஹை லைட் செய்தி.  
இந்த நிலையில் ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதன் பின்னால் ஆம்ஸ்ட்ராங் மீது சந்தேகப்பட்டு சுரேஷ் தரப்பினர் கடும் கோபம் கொண்டனர் எனவும் ஆற்காடு சுரேஷின் தம்பி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆம்ஸ்ட்ராங்கைத் தொடர்ந்து கண்காணித்தும் வந்துள்ள நிலையில் தான் நேற்று மாலை இருள் சூழ்ந்த நிலையில் பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே வைத்து கொல்லப்பட்டிருக்கிறார்.
"பட்டினப்பாக்கம் கொலைக்கு பழி தீர்க்கத்தான் பழிக்குப் பழியாக பெரம்பூரில் வைத்து ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் விசாரனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது”  என்கிறார்கள் காவல்துறை தரப்பில்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு