முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலாச்சார பாரம்பரிய முக்கியத்துவம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்

கலாச்சார பாரம்பரிய முக்கியத்துவம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்

கலாசார பாரம்பரிய முக்கியத்துவம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய கலாச்சார அமைச்சகம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

கலாச்சார விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், உலக பாரம்பரிய தினம், உலக பாரம்பரிய வாரம், சர்வதேச அருங்காட்சியக தினம், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்ற பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களையொட்டி, கண்காட்சிகள், விரிவுரைகள், ஸ்லைடு ஷோக்கள், பயிலரங்குகள்,   பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பிற நிகழ்ச்சிகள் மூலம் அமைச்சகம் தொடர்ந்து கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் உள்ள காட்சி விளக்க மையங்களில் காணொலிப் படங்கள் காண்பிக்கப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, அம்பேத்கர் ஜெயந்தி,  ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள், வாசிப்பு நாள், சர்வதேச அருங்காட்சியக தினம், ஆசிரியர் தினம் போன்ற முக்கியமான நிகழ்வுகளின் போது, புத்தக கண்காட்சிகள், கண்காட்சிகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு கலாச்சார அமைச்சகம் தொடர்ந்து ஏற்பாடு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கலைக்கூடங்கள், நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பிரிவு சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி, நூலகங்களின் திருவிழா மற்றும் இந்திய கலை மற்றும் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை பயிலரங்குகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், மாஸ்டர் வகுப்புகள், நேரடி பயிற்சி போன்றவற்றின் மூலம் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.கலை, கலாச்சாரத்தை மேம்படுத்தி, பாதுகாக்க மத்திய அரசு நிதியுதவி


கலை, கலாச்சாரத்தை மேம்படுத்தி, பாதுகாக்க பாடுபட்டு வரும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. 

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அயராது பாடுபடும் தகுதிவாய்ந்த கலாச்சார அமைப்புகள் / தனிநபர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

பால்கர் மாவட்டம் உட்பட மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் பல்வேறு கலாச்சார அமைப்புகள் / தனிநபர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ள விவரத்தை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்



60 வயது அதற்கு மேற்பட்ட வயதுடைய, ரூ.72,000-த்திற்கு மிகாத ஆண்டு வருமானம் உடைய கலைஞர்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக, “வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்” என்ற பெயரிலான ஒரு திட்டத்தை மத்திய கலாச்சார அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. தேர்ந்தெடுக்கப்படும் கலைஞர்களுக்கு, அதிகபட்சமாக மாதம் ரூ.6,000/- நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது. துடிப்புடன் பணியாற்றிய காலத்தில், கலை, எழுத்து உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய அல்லது இன்னும் வழங்கி கொண்டிருந்தாலும், வயது முதிர்ச்சி காரணமாக நிலையான வருமானம் ஈட்ட முடியாத நிலையில் உள்ள, வயது முதிர்ந்த கலைஞர்கள் மற்றும் அறிஞர்களுக்கு நிதியுதவி அளித்து, அவர்களது சமூக- பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின் கீழ் கடந்த ஐந்தாண்டுகளில் மாநில வாரியாக வழங்கப்பட்ட தொகை, விவரம் வருமாறு:

(ரூ.லட்சங்களில்)

வ.எண்.

மாநிலங்கள்

 2019-20 நிதியாண்டு

2020-21

நிதியாண்டு

2021-22 நிதியாண்டு

2022-23

நிதியாண்டு

2023-24

நிதியாண்டு

வழங்கப்பட்ட தொகை

1

ஆந்திரப் பிரதேசம்

22.16

5.10

72.29

84.66

153.30

2

அசாம்

1.92

0.96

0.48

1.57

2.41

3

பீகார்

-

-

-

-

15.47

4

தில்லி

-

-

-

-

5.87

5

அரியானா

0.04

-

0.93

0.56

3.69

7

ஜார்கண்ட்

1.11

2.28

3.00

3.59

3.88

8

கர்நாடகா

30.29

29.97

59.55

64.32

341.98

9

கேரளா

13.34

8.18

24.49

25.30

64.21

10

மத்தியப் பிரதேசம்

5.41

2.44

5.04

3.86

6.95

11

மகாராஷ்டிரா

85.86

106.61

190.49

273.49

795.97

12

மணிப்பூர்

3.08

3.36

7.84

0.60

14.70

13

நாகாலாந்து

0.04

0.48

0.92

0.12

3.28

14

ஒடிசா

84.04

119.46

276.95

306.77

1063.40

16

ராஜஸ்தான்

0.87

0.07

1.23

0.71

1.36

17

தமிழ்நாடு

9.92

0.87

15.49

14.60

46.96

18

தெலங்கானா

86.18

53.20

217.29

268.16

274.94

19

திரிபுரா

0.06

0.24

0.92

0.12

-

20

உத்தரப் பிரதேசம்

3.20

5.12

13.08

15.46

67.24

21

உத்தராகண்ட்

-

-

-

-

2.43

22

மேற்கு வங்கம்

8.26

5.09

12.31

11.71

28.53

மொத்தம்

355.82

343.46

902.30

1075.60

2896.57

எல்ஐசி

1461.78

527.85

639.87

783.58

-

மொத்தம்

1817.60

871.31

1542.17

1859.18

2896.57

 எல்ஐசி வாயிலாக 2022-23 முதல் நிதியுதவி பெறும் பயனாளிகளின் மாநில வாரியான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை.


மேற்கண்ட தகவலை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்  மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...