முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்

அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு






நிபந்தனை ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம்


முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்கள் முடிவில் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.




மது ஒழிப்பு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் அமைச்சரான செந்தில் பாலாஜி, 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறைகைது செய்து சிறையில் அடைத்தனர்.


 ஜாமீன் கேட்டு அவரளித்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்த நிலையில் 




ஓராண்டுக்கும் மேல்  சிறையிலிருந்து வந்த செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு செய்தார். ஆகஸ்ட்  மாதம் 8 ஆம் தேதி அந்த வழக்கின் இறுதி விசாரணை  நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வில் நடந்தது.

அமலாக்கத்துறை சார்பில் வாதாடிய சொலிஷ்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் வழக்கு சந்தேகங்களைக் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்த நிலையில்




இன்று 26.09.2024  ஆம் தேதி காலை 10:30 மணிக்கு செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு.



செந்தில் பாலாஜி திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை யின் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும், சாட்சிகளைக் கலைக்க எந்த விதமான முயற்சிகளும் செய்யக் கூடாது


என்பது உள்ளிட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டதுடன் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவு மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், விசாரணைக் கைதியாகவே இருப்பதனால், அடிப்படை உரிமை கருதி இந்த நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும்,



ரூபாய் 25 லட்சத்துக்கு இரண்டு நபர்கள் உத்தரவாதம் வழங்க வேண்டுமெனவும் நிபந்தனை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்ப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜியின் வழக்கறிஞரான என்.ஆர் இளங்கோ,




செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்க எந்தத் தடையுமில்லை எனக் கூறியுள்ளார்.


குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீண்ட காலம் விசாரணையின்றி சிறையிலடைக்கும் கருவியாக, பணமோசடி தடுப்பு (PMLA) பிரிவு 45 போன்ற விதிகளை அமலாக்கத்துறை இயக்குனரகம் (ED) பயன்படுத்துவதை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் அனுமதிக்க முடியாதென்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது பணமோசடி வழக்கில் ஜூன் 2023 ஆம் ஆண்டில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கில்  நீதிபதி அபய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் , அரசியலமைப்பு நீதிமன்றங்கள் அதைச் செயல்படுத்தவில்லை என்றால் இத்தகைய வழக்குகளின் அதிகார வரம்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21 வது பிரிவின் கீழ் விசாரணைக் கைதிகளின் உரிமைகள் தோற்கடிக்கப்படும்.


"அரசியலமைப்பு நீதிமன்றங்கள் PMLA இன் கீழ் வழக்குகளைக் கையாளும் போது மனதில் கொள்ள வேண்டும், சில விதிவிலக்கான வழக்குகளைத் தவிர, அதிகபட்சமாக தண்டனை ஏழு ஆண்டுகள் இருக்கலாம். பிரிவு 45 (1) (ii) போன்ற விதிகளை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் அனுமதிக்க முடியாது. திட்டமிடப்பட்ட குற்றத்தின் விசாரணை மற்றும் PMLA குற்றம் நியாயமான நேரத்திற்குள் முடிவடையும் சாத்தியமில்லாத போது, ​​நீண்ட காலம் சிறைவாசத்தைத் தொடர அமலாக்கத்துறை (ED) ன் கைகளில் கருவியாக மாற வேண்டும்" என்று நீதிமன்றம் கூறியது. இன்னும் அதிகமாக  மேல்முறையீட்டாளரின் தடுப்புக்காவல் தொடர்ந்தால், அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21 வது பிரிவின் கீழ் அவரது அடிப்படை உரிமையை மீறுவதாக அமையும்" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

PMLA வின் கீழ் திட்டமிடப்பட்ட குற்றம் அல்லது குற்றத்தின் விசாரணை தாமதமானது குற்றம் சாட்டப்பட்டவருக்குக் காரணமாக இருந்தால், அரசியலமைப்பு நீதிமன்றங்கள் எப்போதுமே தங்கள் அதிகார வரம்பைப் பயன்படுத்த மறுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, சித்தார்த் லுத்ரா ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். அமலாக்கத்துறை (ED)சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் (SG) துஷார் மேத்தா மற்றும் சிறப்பு வழக்கறிஞர் ஜோஹெப் ஹொசைன் ஆகியோர் வாதிட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...