முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து செய்யப்படுமா ? என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து செய்யப்படலாம் எனவும் அதற்கு தக்கபடி விசாரணை ஒத்திவைப்பு எனவும் தகவல்கள் வருகின்றன, 


சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று  இரண்டாவதாக சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட்டார்.

அரசு வாகனத்தில்  வராமல் தனிப்பட்ட வாகனத்தில் பாதுகாவலர் இல்லாமல் வந்து  அவர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்ட நிலையில் காத்திருந்த நிலையில் ஜாமீன் கையெழுத்திட்டார்.  கடுமையான ஜாமீன் நிபந்தனை உள்ள நிலையில் 




தமிழ்நாடு அமைச்சராகப் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் நேற்று அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு செந்தில் பாலாஜி வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பலத்த  பாதுகாப்பு காவல் துறையினரால் .போடப்பட்டது. காலை 10:45 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜரானார் உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைப்படி கையெழுத்திட்டுச் சென்றார் ஆனால் இந்த நிலையில். 

  

அமைச்சர் பதவியால் நிபந்தனை மீறிய செந்தில் பாலாஜிக்கு  ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில்  வாதம் முன்வைக்கப்பட்டது!   

ஏற்கனவே செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை எனவே சாட்சிகளைக் கலைக்கமாட்டார் என ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராகி விட்டார். எனவே அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தரப்பு வாதத்தை முன் வைத்தது.  






உச்ச நீதிமன்றம்,  வழங்கிய நிபந்தனையில் வாரந்தோறும் திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும், வழக்கின் சாட்சியங்களைக் கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது, கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும், மாதத்தின் முதல் சனிக்கிழமையில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்தது.





 ஜாமீனில் வெளி வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகி  சிறை செல்வதற்கு முன்பு வகித்த அதே இலாகாக்களுக்கு மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றார்  மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் ஏற்று, தலைமைச் செயலகம் சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்புகளை ஏற்ற நிலையில், நேற்று செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை ஓராண்டுக்குள் முடிக்க உத்தரவிடக் கோரிய தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் முக்கிய வாதம் ஒன்றை முன்வைத்தார். செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை எனவே சாட்சியைக் கலைக்கமாட்டார் என்று தான் மாண்பு மிகு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் தற்போது நிபந்தனை மீறிய செந்தில் பாலாஜி அமைச்சராகி விட்டார். எனவே செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீன் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரினார். அதற்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஓஹா, அப்படி என்றால் ஜாமீனை மறு பரிசீலனை செய்வதற்கு புதிதாக தனியே ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யுங்கள் எனத் தெரிவித்தார். செந்தில் பாலாஜி வழக்கை பிரத்யேகமாக விசாரிக்கும் சிறப்பு நீதிபதியை நியமிக்க வேண்டுமென்று மூத்த வழக்கறிஞர் எஸ். குரு.கிருஷ்ணகுமார் கோரினார். அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே, மோசடி செய்த செந்தில் பாலாஜியை மட்டும் ஏன் தனிமைப்படுத்த வேண்டும்? ஊழல் செய்துள்ள மற்ற அமைச்சர்களும் உள்ளனர் எனத் தெரிவித்தார். அதற்கு நீதிபதி ஓஹா, இதைப் பற்றி அரசு கவலைப்படக் கூடாது. இந்த வழக்குக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று அரசு கூற வேண்டும் என்றார். அதற்கு அரசு வழக்கறிஞர் நபாடே, அதில் சிரமம் ஒன்றுமில்லை. மற்ற அமைச்சர்கள் அதற்கு மகிழ்வார்கள் எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி ஓஹா, "அமைச்சர்களுக்கு எதிராக எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதை அடுத்த வாய்தா தேதியில் சுட்டிக்காட்டுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். அமைச்சர்கள் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதைச் சொல்லுங்கள். இதே போன்ற உத்தரவை பிறப்பிக்கலாம்." எனத் தெரிவித்தார்.




மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பணிச் சுமை அதிகமாக உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க முடியுமா? இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


செந்தில் பாலாஜி தொடர்புடைய இந்த வழக்கு விசாரணையை விரைவாகக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி ஓஹா உத்தரவிட்டார்.தமிழ்நாட்டில் எத்தனை அமைச்சர்கள் மீது  ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன?' -என உச்சநீதிமன்றம் வினா எழுப்புகிறது !  ஒரு அமைச்சர் நேர்முகப் போட்டித் தேர்வில் செட்டிங் செய்து அரசு வேலை வாங்கித் தருகிறேன் என அவரது தம்பி மற்றும் உதவியாளர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 30,000 நபர்களிடம் ஒவ்வொரு வரிடமும் தலா மூன்று லட்ச ரூபாய் என்று 960 கோடி வசூல் செய்திருக்கிறார்கள், இதில் பணம் லஞ்சமாகக் கொடுத்த வாங்கிய இருதரப்பினரும் சட்டபூர்வ குற்றவாளிகள் தான் 
அதில் வெறும் 250 பேருக்கு மட்டும் லஞ்சம் பெற்ற போது சொன்ன படி வேலை கொடுத்து விட்டு மீதி 29 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கவில்லை, அவர்கள் இதுவரை பணி நீக்கம் செய்யப்படவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், பணம் கொடுத்தவர்களில் சிலர் , பணத்தைத் திருப்பிக் கேட்க வெறும் 2500 பேருக்கு மட்டும் திருப்பிக் கொடுத்து விட்டு உயர் நீதிமன்றத்தில் எல்லோருக்கும் பணம் திருப்பிக்  கொடுத்து விட்டோம் எனவே நான் குற்றமற்றவன் எனப் பிரமாணமும் செய்து பொய் சொல்லி நீதிபதியிடம் கேட்க நீதிபதியும் நீங்கள் லஞ்சம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விட்டதால் இன்று முதல் நீங்கள் நிரபராதி என்று அழைக்கப்படுவீர்கள் என சட்டம் அப்போது தனது கடமையைச் செய்யாமல் விட்டு விடுகிறது. இந்த விபரம் அதன் பின்னர் வெளிவந்த நிலையில், கொடுத்த லஞ்சப் பணம் 
திருப்பிக் கிடைக்காத 25,000 பேரில் எல்லோரும் மாட்டிக் கொள்வோம் எனப் பயந்து பணம் திரும்ப கேட்காமல் அது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கும் போது அதில் ஒரு பத்து முதல் 15 பேர் வரை ஒன்றாக இணைந்து உச்ச நீதிமன்றத்திற்கு நீதி கேட்டுச் செல்கிறார்கள் , உச்ச நீதிமன்றம் அது எப்படி இலஞ்சம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டால் குற்றமில்லை என்றாகும் எனவே வழக்கை ஒழுங்காக விசாரித்து நடவடிக்கை எடுக்க இந்த வழக்கைப் பதிவு செய்த சென்னை காவல்துறை கியூ பிராஞ்ச்க்கு உத்தரவிடுகிறது...
பணம் கொடுத்தவர்களில் சிலர் மன உளைச்சலில் தற்கொலை செய்து இறந்தும் விடுகிறார்கள், வேலை கிடைக்காதவர்களிலும் சிலர் தற்கொலை செய்து இறந்து விடுகிற நிலையில் அந்த அமைச்சர் மீண்டும் அதே துறையின் அமைச்சராகி விடுகிறார்.
இப்போது இந்த வழக்கை பதிவு செய்த காவல்துறை தனது அமைச்சரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் பல இருந்தும் ஏதோ ஒரு காரணத்தால் குற்றப் பத்திரிகையில் 2000 பேரின் பெயரைச் சேர்த்து விடுகிறார்கள். அவர்கள் லஞ்சம் கொடுத்தாவது குறுக்கு வழியில் வேலை பெற முயன்றவர்கள். அதோடு இந்த ஏற்பாடுகளை எல்லாம் செய்த அவரின் தம்பியை தீவிரமாகத் தேடாமல் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.
2000 பேரையும் விசாரணைக்குக் கூப்பிட்டு வழக்கை முடிக்க குறைந்த பட்சம் 80 ஆண்டுகள் ஆகும் எனும் நிலையில் இதுதான் சட்டம் எனும் நிலையில் 
சட்டப்படி தண்டனை கிடைக்காது எனும் தைரியம். ஆனால் தார்மீகப் படி இவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க மாட்டேன் என்று சொல்ல வேண்டிய முதலமைச்சர் இவரை தியாகி என்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...