முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரபல மலையாள மூத்த நடிகர் டி.பி மாதவன் காலமானார்

பிரபல  மலையாள மூத்த நடிகர் டி.பி மாதவன் வயது 88 நேற்று முன்தினம் முதுமை காரணமாக காலமானார்.


அவர் நடித்த தமிழ்  திரைப்படம் முதல்வனில் ஊழல் அரசியல் தலைவராக நடித்த டி.பி.மாதவன் 1935 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி  திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் இராஜ்யம்  திருவனந்தபுரத்தில் டாக்டர் என்.பி.பிள்ளை மற்றும் சரஸ்வதிக்கு மூத்த மகனாகப் பிறந்தவருக்கு நாராயணன் என்ற சகோதரனும் ராதாமணி என்ற சகோதரியும் உண்டு, இவரது தந்தை கேரளா பல்கலைக்கழகத்தின் டீனாக பணியாற்றியவர் . மாதவன் ஒரு இலக்கியவாதி பி.கே.நாராயண பிள்ளையின் பேரனும் நாடக ஆசிரியருமான டி.என்.கோபிநாதநாயரின் மருமகனுமாவார் .  ஆக்ரா பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார் .

மாதவன் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார் , ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு கையில் காயம் ஏற்பட்டு விடவே வெளியேறினார். பின்னர் பம்பாயில் இந்தியன் எக்ஸ்பிரஸில் பத்திரிகையாளராகப் பணியாற்றத் தொடங்கினார் , மாதம் ரூபாய்.175 சம்பளம் பெற்றார். பின்னர் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார் , அங்கு அவர் ரூபாய்.400  சம்பள உயர்வுடன் ஒரு விளம்பர நிறுவனத்தில் சேர்ந்தார். இறுதியில், கொல்கத்தாவுக்கு இடம்பெயர்ந்தார் , இது அவரது திரைப்படத் துறையில் நுழைவதற்கு வழி வகுத்தது.      தனது 50 வருட திரையுலக வாழ்க்கையில் கிட்டத்தட்ட 600 படங்களுக்கு மேல் நடித்துள்ளவர், மலையாள நடிகர் சங்கத்தில்  முதல் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். கடந்த சில வருடங்களாகவே படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு கேரளாவில் பத்தினாபுரத்திலுள்ள ஆதரவற்றோர் புகலிடமான காந்தி பவனில் வாழ்வைக் கழித்தார்     


1980 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டங்களில் மலையாளத் திரைப்படங்களில் 600 க்கும் மேற்பட்டவைகளில் நடித்தவர். 1960களில் ஆங்கில பத்திரிகைகளில் வேலை பார்த்த இவர் தன்னுடைய 40 வயதில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த ராகம் என்னும் மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்தவர் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். மலையாளத் திரையுலகின் நடிகர் சங்க அமைப்பான அம்மாவின் (AMMA) முதல் பொதுச் செயலாளராவார்    பதவிக் காலத்தில் பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்தார். டி.பி. மாதவனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பாலிவுட் இயக்குனர் ராஜா கிருஷ்ண மேனன் இவரது மகன் குடும்பப் பிரச்சனைகள் காரணமாக 30 வருடங்களுக்கு முன்பே மகன் இரண்டரை வயதில் குடும்பத்தினர் பிரிந்தனர். மகனைப் பார்ப்பது அவரது கடைசி ஆசையாக இருந்தது. ஆனால் அது நிறைவேறாமலேயே அவர் இறந்து விட்டார். இந்த நிலையில் இத்தனை வருடங்களாகப் பிரிந்திருந்த அவரது மகன் ராஜா கிருஷ்ண மேனனும் அவரது தங்கை தேவிகாவும் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற டி.பி மாதவனின் இறுதிச்சடங்கில்  கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். திரைப்பட வாய்ப்புக் குறையத் தொடங்கும் பொழுது தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வந்தார். ஆனால் இவருக்கு திடீரென ஞாபக மறதி நோய் (செலக்டிவ் அம்னீஷியா) ஏற்பட்டதனால் 2015 ஆம் ஆண்டு முதல் தனியே வசித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியினால்  பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் 88 வயதில் தனி அறையில் இருக்கும் பொழுது இயற்கை எய்தினார். இவரது இறப்பு திரையுலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...