முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எட்டாயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சிச் செயலாளர் கைது

தேனி மாவட்டம் கம்பம்  வட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் சுருளிப்பட்டி ஊராட்சியில் ஏற்கனவே செலுத்தும் வீட்டுவரிக்கு  பெயர் மாற்றம் செய்து ரசிது வழங்க ரூபாய். எட்டாயிரம் லஞ்சமாக வாங்கிய ஊராட்சிச் செயலாளர் சந்திரசேகர்  கைது.


தேனி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் அளிக்கப்பட்ட புகாரில் ஊராட்சிச் செயலாளர் சந்திரசேகரை, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பொறி வைத்துப் பிடித்துக் கைது செய்தனர். லஞ்சம் பெற்ற கையுடன் சிக்கிய ஊராட்சிச் செயலாளரை நீண்ட நேரம் விசாரணை நடத்தியதுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பப்பட்டார். 

தேனி மாவட்டம் கம்பம் வட்டம் சுருளிப்பட்டி சாவடித் தெருவில் வசித்துவரும் 73 வயதாகும் சிவானந்தன் விவசாயி அவரது வீட்டுக்கு வரி விதிப்பு பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்து. அதற்காக 6 மாதங்களுக்கு முன் சுருளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்துக்கு சென்று அங்கு சுருளிப்பட்டி ஊராட்சி செயலாளர் சந்திரசேகரிடம் வீட்டுவரி பெயர் மாற்றத்துக்கு ஆதாரங்கள் இணைந்து மனு அளித்துள்ளார். அப்போது வீட்டு வரி முன் பாக்கி ரூபாய்.600 செலுத்தாமல் இருப்பதாக ஊராட்சிச் செயலாளர்  சந்திரசேகரன் கூறியதையடுத்து விவசாயி சிவானந்தன் அந்த பணத்தை அலுவலக ஊழியரிடம் கொடுத்து விட்டு வந்தாராம். ஆனால் அதன் பின்னரும் வீட்டு வரி பெயர் மாற்றம் செய்யப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விவசாயி சிவானந்தன் கடந்த மாதம் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவை விசாரித்து, வீட்டுவரி பெயர் மாற்றம் செய்யும் படி சுருளிப்பட்டி ஊராட்சி செயலாளர் சந்திரசேகருக்கு, கம்பம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜெயபிரகாஷ் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் அதன் பின்பும் பெயர் மாற்றம் செய்யாமல் ஊராட்சி செயலாளர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். அதையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன் சிவானந்தன் மீண்டும் சுருளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்துக்கு சென்று. அங்கு ஊராட்சி செயலாளர்  சந்திரசேகர், வீட்டுவரி பெயர் மாற்றம் செய்ய ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். அதற்கு பேரம் பேசி, கடைசியில் சிவானந்தன் ரூபாய்.8 ஆயிரம் தருவதாக கூறிவிட்டு வந்திருக்கிறார். எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாதவர்

தேனி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்ததன் பேரில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரராஜன், ஆய்வாளர் ஜெயப்பிரியா மற்றும் குழுவினர் ஊராட்சிச் செயலாளரை பொறி வைத்துப் பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய்.8 ஆயிரத்திற்கான நோட்டுக்களை அரசு தரப்பில் சாட்சிகளுடன் விவசாயி சிவானந்தன் கொண்டு வந்த பணத்தை திருப்பிக் கொடுத்து அனுப்பினர். அங்கு வந்து சந்திரசேகரை பணம் பெற்ற கையுடன் பிடித்தனர். அவரிடமிருந்த இரசாயனம் தடவிய பணத்தைக் கைப்பற்றிய பின்னர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு அலுவலகத்தில்  வைத்து சந்திரசேகரிடம் நீண்ட நேரம் தீவிர விசாரணை நடத்தினர். முதலில் பதிவு செய்த FIR படி சந்திரசேகரைக் கைது செய்தனர். கம்பம் பகுதியில் லஞ்சம் வாங்கியதாக ஊராட்சிச் செயலாளர்  கைதான சம்பவம் அப்பகுதியில் ஊழல் செய்து வரும் அரசு பணியாளர் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது, அழிக்க முடியாத கரையாக இந்த பிரச்சனை இருக்கும். எனவே லஞ்சம் வாங்காமல் சேவை செய்வதே தற்போதைய நிலையில் அரசு ஊழியர்களுக்கு இருக்கும் நல்ல வாய்ப்பாகும். அதேநேரம் லஞ்ச ஊழலில் கைதாகும் ஊழியர்கள் மீதான வழக்கை ஓராண்டில் நடத்தி முடிக்க அரசு உத்தரவிடும் பட்சத்தில், லஞ்சம் வாங்குவோருக்கு பயம் அதிகரிக்கும். எனவே இதற்காக அரசு சட்டம் தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள போதும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உரிய நியமனம் இன்றி வலுவிழந்து உள்ளது என்பது யாவரும் அறிந்ததே. கர்நாடக மாநிலத்தில் அந்த மாநிலத்தில் உள்ள முன்னாள் இன்னாள் முதலமைச்சர்கள் மீதே நடவடிக்கைகள் எடுக்கும் நிலையில் உள்ள லோக் ஆயுக்தா தமிழ்நாட்டில் மாத்திரம் சரியான படி செயல்பட வைக்கும் நிலையில் அரசு செயல்படவில்லை என சமூக ஆர்வலர்கள் மத்தியில் பேசும் நிலை உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...