முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனநல மருத்துவம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தனியார் வசமாகிறதா குழப்பத்தில் மருத்துவப் பணியாளர்கள்

அரசின் மனநல மருத்துவமனைகள் தனியார் வசமாகிறதா ?


தற்போது மனநல மருத்துவம் என்பது தனியாரின் ஆதிக்கத்திற்கு மாற உள்ளது. மனநோய்களுக்கு காரணமான சமூக அமைப்பை உருவாக்கும் சக்திகளுக்கே மனநல மருத்துவ சிகிச்சை அளிக்கும் வாய்ப்பும் கிடைக்க உள்ளது. இந்தப் போக்கில் மனநோயாளிகள் என்ன ஆவார்கள் என்பது குறித்து இந்த கம்பெனிகளுக்கோ அல்லது தனியார் தொண்டு நிறுவனங்களுக்கோ அக்கறை இல்லை.



அவர்களைப் பொறுத்தவரை லாபம் தான் இலக்கு. பிரச்சினைகள் இங்கிருந்து தான் துவங்குகிறது. தனியார் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது என்பது மனநல மருத்துவத் துறையையே தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கை என மன நல மருத்துவர்களும் அந்தத் துறையிலுள்ள செயல்பாட்டாளர்களும் மனநலச் சமூகப் பணியாளர்களும் தெரிவிக்கும் நிலையில். புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தேர்தல் முடியும் வரை வெளியிட முடியாதென மறுத்துள்ளது தமிழ்நாடு அரசு. அதையும் மீறி வந்துள்ள செய்திகளில், ஹான்ஸ் பவுண்டேஷன், பேனியன் என்ற தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழ்நாடு அரசுடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.


வெளியாகியுள்ள ஒப்பந்தத்தின் படி அரசு மனநல மருத்துவமனையில் நீண்டகாலமாகத் தங்கி சிகிச்சை பெற்று வந்த மனநோயாளிகளை ஒப்படைக்க வேண்டும். தேர்தல் நடந்து வரும் வேளையில் அந்தப் பரபரப்பைப்பயன்படுத்திக்கொண்டு சத்தமில்லாமல் மனநல மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான  முன் தயாரிப்பாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


ஒன்று இந்தப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தேர்தல் முடியும் வரை வெளியிட முடியாது என மறுத்துள்ளது தமிழ்நாடு அரசு. உடல் நலம் எந்த அளவு முக்கியமோ அதே அளவுக்கு மன நலமும் முக்கியம். ஏனெனில் பெரும்பாலான உடல் ஆரோக்கியப் பிரச்சினை மன ஆரோக்கியமே முக்கியக் காரணியாக இருக்கிறது. மன அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகமான நபர்களைப் பாதிக்கிறது. அதனால் உடல் ஆரோக்கியத்திலும் நிறைய மாற்றங்கள் உண்டாகின்றன. அதன் முக்கியத்துவம் தெரிந்த வெகுசிலர் மட்டுமே தனியார் மருத்துவமனைகளில் உள்ள மனநல ஆலோசகரிடம் கவுன்சிலிங் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களுக்குள் இதுவும் ஒரு அங்கம். தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் மனநலத்திற்கென்று தனிப் பிரிவுகள், சிறப்பு சிகிச்சைகள் உண்டு. அவற்றை பற்றி நாம் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.மன ஆரோக்கியம் குறித்த சில நோக்கங்களை அடிப்படையாக வைத்து இந்த திட்டமானது உருவாக்கப்பட்டது.

எதிர்காலத்தில் இந்திய மக்கள் அனைவருக்கும் குறிப்பாக, மன ஆரோக்கியம் அதிகமாக பாதிக்கப்படுகிற பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட அடித்தளத்தில் உள்ள மக்களுக்கு குறைந்தபட்சமான மனநல ஆரோக்கியம் கிடைக்க கட்டாயம் வழிவகை செய்ய வேண்டும்.

பொது சுகாதாரத்திலும் சமூக வளர்ச்சியிலும் மனநலத்தையும் அதுகுறித்த அறிவையும் பயன்படுத்துதல், அதை மக்களுக்குக் கற்றுத்தருதல்,


மனநலச் சேவை வளர்ச்சியால் சமூக முன்னேற்றத்திற்கு கிடைக்கும் பங்களிப்பை தூண்டுதல் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகக் கருதப்பட்டன. மாவட்ட மனநலத் திட்டத்தை சுருக்கமாக DMHP என்று அழைப்பார்கள். இதுவும் தேசிய மனநலத் திட்டத்தின் கீழ் இயங்குகிற, அதேசமயம் மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிற ஒரு அமைப்பாகும்.

மன ஆரோக்கியம் குறித்த சில நோக்கங்களை அடிப்படையாக வைத்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டது

எதிர்காலத்தில் இந்திய மக்கள் அனைவருக்கும் குறிப்பாக, மன ஆரோக்கியம் அதிகமாக பாதிக்க வாய்ப்பு உள்ளது.

​மாவட்ட மனநல திட்டம் (District Mental Health Programme)

​மாவட்ட மனநல திட்டம் (District Mental Health Programme)

மாவட்ட மனநலத் திட்டத்தை சுருக்கமாக DMHP என்று அழைப்பார்கள். இதுவும் தேசிய மனநலத் திட்டத்தின் கீழ் இயங்குகிற, அதேசமயம் மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிற ஒரு அமைப்பாகும்.

தற்போது தமிழ்நாட்டில் நேரடியாக மத்திய அரசின் மனநலத் திட்டத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளும் இருக்கின்றன. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவமனைகளும் இருக்கின்றன. அவற்றின் விவரம் வருமாறு:-

சென்னையில் இயங்கி வருகிற மனநல மருத்துவக் கழகம் மனநலம் தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்குகிற மிக முக்கிய மையமாகச் செயல்படுகிறது. கிட்டதட்ட 1200 க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தொடர் சிகிச்சையிலிருந்து வருகிறார்கள்.

தினமும் 350 பேருக்கு மேலாக வெளிநோயாளிகளாக தினசரி சிகிச்சைக்கு வருகிறார்கள். கிட்டதட்ட 1800 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் இங்கு செய்யப்பட்டு இருக்கின்றன.

மன ஆரோக்கியம் குறித்த சில நோக்கங்களை அடிப்படையாக வைத்து இந்த திட்டமானது உருவாக்கப்பட்டது.

பொது சுகாதாரத்திலும் சமூக வளர்ச்சியிலும் மனநலத்தையும் அதுகுறித்த அறிவையும் பயன்படுத்துதல், அதை மக்களுக்குக் கற்றுத்தருதல்,

மனநலச் சேவை வளர்ச்சியால் சமூக முன்னேற்றத்திற்கு கிடைக்கும் பங்களிப்பை தூண்டுதல் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகக் கருதப்பட்டன.

மாவட்ட மனநலத் திட்டத்தை சுருக்கமாக DMHP என்று அழைப்பார்கள். இதுவும் தேசிய மனநலத் திட்டத்தின் கீழ் இயங்குகிற, அதேசமயம் மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிற ஒரு அமைப்பாகும்.

தற்போது தமிழ்நாட்டில் நேரடியாக மத்திய அரசின் மனநலத் திட்டத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளும் இருக்கின்றன. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவமனைகளும் இருக்கின்றன.

குழந்தைகளுக்கான தனிப்பிரிவு சென்னையில் குழந்தைகளுக்கு ஏற்படுகிற மனநலக் கோளாறுகளை சரிசெய்வதற்கென பிரத்யேக சிகிச்சை மையமும் இருக்கிறது.

சென்னை எலும்பூரில் உள்ள குழந்தைகள் நல நிறுவனத்தில் (ICH) தான் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கான சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் மனநல மையங்கள்

தமிழ்நாட்டில் செயல்பட்டு கீழ்க்கண்ட 18 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. அவை, எம்.எம்.சி & ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, சென்னை-3, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை-1, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, தர்மபுரி மருத்துவக் கல்லூரி, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம், அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி, கே.ஏ.பி. விஸ்வநாதன் அரசு, திருச்சிராப்பள்ளி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, தேனி மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவாரூர் மருத்துவக் கல்லூரி, சிவகங்கை மருத்துவக் கல்லூரி 

​தமிழ்நாடு அனைத்து மாவட்ட தலைமையிட மையங்கள்

தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட 31 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமையிட மருத்துவ மனைகளிலும் மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்குவதற்கான சிறப்பு மையங்கள் செயல் படுகின்றன.மாவட்டத் தலைமை மருத்துவமனைகளான, காஞ்சிபுரம், நாகப்பட்டினம்,திண்டுக்கல்,திருப்பூர், ஈரோடு,கடலூர், இராமநாதபுரம், தர்மபுரி,விருதுநகர்,சிவகங்கை,கும்பகோணம்,கரூர்,விழுப்புரம்,திருவாரூர்,மேட்டூர் அணை, நாமக்கல், உசிலம்பட்டி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், புதுக்கோட்டை,கோயம்புத்தூர், தூத்துக்குடி,திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர்,அரியலூர், தேனி,நீலகிரி, நாகர்கோவில், ஆகியவை அடங்கும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...