முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்ட என் சி பி தலைவர் பாபா சித்திக் பல தலைவர்கள் கண்டணம்

மஹாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான பாபா சித்திக் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.


அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) பாபா சித்திக் மும்பையின் பாந்த்ரா பகுதியில் நேற்று சனிக்கிழமை 12 அக்டோபர் 2024 இரவு 9.30 மணியளவில் நீலம் நகரிலுள்ள அவரது மகனான பாந்த்ரா கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலியான நிலையில் காவல் துறையினர் இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர்.


ஒருவர் ஹரியானாவை சேர்ந்தவர், மற்றவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்” என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறினார்.  துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பியோடிய 3 வது குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் இதில் ஏதாவது கும்பல் ஈடுபட்டுள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்திக்கிற்கு அண்மையில் அச்சுறுத்தல் வந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மரணம் குறித்த புதிய தகவல் பரவியதையடுத்து, மருத்துவமனைக்கு வெளியே ஏராளமானோர் திரண்டனர். அப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.NCP (SB) தலைவர் சரத் பவார், சித்திக் மரணத்தைத் தொடர்ந்து முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுத்தார்.


“மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, இது கவலையளிக்கிறது. நாட்டின் நிதித் தலைநகரான மும்பையில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது வருத்தமளிக்கிறது. உள்துறை அமைச்சரும் ஆட்சியாளர்களும் அரசின் வண்டியை இவ்வளவு லேசாகத் தள்ளப் போகிறார்கள்

என்றால், சாமானியர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகும்  இதற்குப் பொறுப்பேற்று ஆட்சியாளர்கள் பதவியில் இருந்து விலக வேண்டிய தேவையும் உள்ளது. பாபா சித்திக் அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி. அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்” என X ல் பதிவிட்டுள்ளார். 

மஹாராஷ்டிராவில் 42 வருடம் காங்கிரஸ் கட்சியிலிருந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார் பின்னர் தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பின்னர் அஜீத் பவார் தலைமை ஏற்றார், முதலில் ஷஹாபுதீன், பின்னர் அதிக் அகமது, பிறகு முக்தார் அன்சாரி, அடுத்து பாபா சித்திக் என அனைவரும் இஸ்லாமிய தலைவர்கள். அனைவரும் ஏதோ ஒரு சதியால் கொல்லப்பட்டுள்ளனர். என அச் சமுக மக்கள் மத்தியில் கேள்விகள் எழுகின்றன, என்ன நடக்கிறது?

தாவூத் இப்ராஹிம் தொடர்பு மூலம் லாரன்ஸ் கூட்டாளி தனுஜ் தாபன் படுகொலைக்கு பழி வாங்கவே, பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது, மும்பையில் ஆதிக்கம் செலுத்துவதில் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் நிழல் உலகத் தாதா தாவூத் இப்ராஹிம் இடையே நீண்ட காலமாக இருந்த போட்டியே பாபா சித்திக் கொலைக்கு காரணமா? என்ற கோணமும் இதில் அடங்கும்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவருமான பாபா சித்திக் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சுமார் 48 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் பயணித்த அவர் மக்களிடையேயும் கட்சியினர் இடையே செல்வாக்கு பெற்றவராவார்.

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் தலைவருமான பாபா சித்திக் மும்பையில் மர்ம நபர்களால் சுடப்பட்ட நிலையில் 
வயிறு,மார்பில் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.         

பாலிவுட் நடிகர் சல்மான் கான், தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் தொடர்பு வைத்ததே மகாராஷ்டிரா மாநிலத்தின் மாஜி அமைச்சர் கொலைக்கு காரணம்? என்ற கோணத்தில் நடக்கும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்; லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு யாராவது உதவி செய்தால் பாபா சித்திக் இருக்கும் நிலைமை தான் அவர்களுக்கு ஏற்படும் என்று பிஸ்னோய் கும்பல் மிரட்டல் சல்மான் கான் உடன் நெருக்கமாக இருந்ததற்காக ஏற்கனவே இரண்டு பிரபலங்களை பிஷ்னோய் கும்பல் தாக்கியதாகவும் காவல் துறை தரப்பில் தகவல் வரும் நிலையில் சல்மான் கான் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...