முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்ட என் சி பி தலைவர் பாபா சித்திக் பல தலைவர்கள் கண்டணம்

மஹாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான பாபா சித்திக் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.


அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) பாபா சித்திக் மும்பையின் பாந்த்ரா பகுதியில் நேற்று சனிக்கிழமை 12 அக்டோபர் 2024 இரவு 9.30 மணியளவில் நீலம் நகரிலுள்ள அவரது மகனான பாந்த்ரா கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலியான நிலையில் காவல் துறையினர் இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர்.


ஒருவர் ஹரியானாவை சேர்ந்தவர், மற்றவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்” என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறினார்.  துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பியோடிய 3 வது குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் இதில் ஏதாவது கும்பல் ஈடுபட்டுள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்திக்கிற்கு அண்மையில் அச்சுறுத்தல் வந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மரணம் குறித்த புதிய தகவல் பரவியதையடுத்து, மருத்துவமனைக்கு வெளியே ஏராளமானோர் திரண்டனர். அப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.NCP (SB) தலைவர் சரத் பவார், சித்திக் மரணத்தைத் தொடர்ந்து முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுத்தார்.


“மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, இது கவலையளிக்கிறது. நாட்டின் நிதித் தலைநகரான மும்பையில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது வருத்தமளிக்கிறது. உள்துறை அமைச்சரும் ஆட்சியாளர்களும் அரசின் வண்டியை இவ்வளவு லேசாகத் தள்ளப் போகிறார்கள்

என்றால், சாமானியர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகும்  இதற்குப் பொறுப்பேற்று ஆட்சியாளர்கள் பதவியில் இருந்து விலக வேண்டிய தேவையும் உள்ளது. பாபா சித்திக் அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி. அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்” என X ல் பதிவிட்டுள்ளார். 

மஹாராஷ்டிராவில் 42 வருடம் காங்கிரஸ் கட்சியிலிருந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார் பின்னர் தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பின்னர் அஜீத் பவார் தலைமை ஏற்றார், முதலில் ஷஹாபுதீன், பின்னர் அதிக் அகமது, பிறகு முக்தார் அன்சாரி, அடுத்து பாபா சித்திக் என அனைவரும் இஸ்லாமிய தலைவர்கள். அனைவரும் ஏதோ ஒரு சதியால் கொல்லப்பட்டுள்ளனர். என அச் சமுக மக்கள் மத்தியில் கேள்விகள் எழுகின்றன, என்ன நடக்கிறது?

தாவூத் இப்ராஹிம் தொடர்பு மூலம் லாரன்ஸ் கூட்டாளி தனுஜ் தாபன் படுகொலைக்கு பழி வாங்கவே, பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது, மும்பையில் ஆதிக்கம் செலுத்துவதில் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் நிழல் உலகத் தாதா தாவூத் இப்ராஹிம் இடையே நீண்ட காலமாக இருந்த போட்டியே பாபா சித்திக் கொலைக்கு காரணமா? என்ற கோணமும் இதில் அடங்கும்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவருமான பாபா சித்திக் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சுமார் 48 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் பயணித்த அவர் மக்களிடையேயும் கட்சியினர் இடையே செல்வாக்கு பெற்றவராவார்.

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் தலைவருமான பாபா சித்திக் மும்பையில் மர்ம நபர்களால் சுடப்பட்ட நிலையில் 
வயிறு,மார்பில் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.         

பாலிவுட் நடிகர் சல்மான் கான், தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் தொடர்பு வைத்ததே மகாராஷ்டிரா மாநிலத்தின் மாஜி அமைச்சர் கொலைக்கு காரணம்? என்ற கோணத்தில் நடக்கும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்; லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு யாராவது உதவி செய்தால் பாபா சித்திக் இருக்கும் நிலைமை தான் அவர்களுக்கு ஏற்படும் என்று பிஸ்னோய் கும்பல் மிரட்டல் சல்மான் கான் உடன் நெருக்கமாக இருந்ததற்காக ஏற்கனவே இரண்டு பிரபலங்களை பிஷ்னோய் கும்பல் தாக்கியதாகவும் காவல் துறை தரப்பில் தகவல் வரும் நிலையில் சல்மான் கான் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...