முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரூபாய்.60,000 லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் (பொறுப்பு) உள்ளிட்ட இருவர் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள இணை 2 பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், ரூபாய்.60,000 லஞ்சம்  பெற்ற சார் பதிவாளர் (பொறுப்பு) முத்துப்பாண்டி மற்றும் ஆவண தயாரிப்பு எழுத்தர் இ சேவை மையம் நடத்தும் புவணப்பிரியா உள்ளிட்ட இருவர் கைது. வெள்ளிக்கிழமை நவம்பர் மாதம் 15 ஆம் தேதி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் பழைய கண்டனூர் சாலையில் வசிக்கும் வைரவேல் தனது இட


த்தை விற்பனை செய்ய பத்திரப்பதிவு செய்த நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக உள்ள நபர் விடுப்பில் இருக்க அதில் (பொறுப்பு) அலுவலராகப்  பணியிலிருந்த முத்துப்பாண்டி பத்திரப் பதிவு செய்த ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்க ரூபாய் 60 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாகத் தெரிகிறது. பத்திரம் பதிவு செய்த பின்னர் அதைக் கூறிய நிலையில் தொடர்ந்து பத்திரப்பதிவும் நடைபெற்றது. ஆனால், லஞ்சம் கேட்ட பணத்தைக் கொடுக்காததால் பத்திரத்தைத் பணம் இல்லாமல் திருப்பித் தர மறுத்ததால் ஆத்திரமுற்ற நிலம் விற்பனை செய்த வைரவேல் சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாரளித்தார். 

அதைத் தொடர்ந்து, நேற்று ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழிகாட்டுதலின் படி பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய்.60,000-தை அரசு தரப்பில் சாட்சிகள் முன்பு புகார்தாரர் வைரவேல் அரசு சாட்சி ஆகியோர் காரைக்குடி  எண்.2 இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் சென்று சார்பதிவாளர் (பொறுப்பு) முத்துப்பாண்டியை பார்த்து தான் பதிவு செய்த ஆவணங்கள் சம்மந்தமாக கேட்க மதியம் 1.45 மணிக்குச்   சென்றவர்களிடம், அங்கிருந்த சார்பதிவாளர் (பொறுப்பு) முத்துப்பாண்டியைச் சந்தித்து பத்திரம் ரெடியாகி விட்டதா என கேட்டதற்கு அவர் எல்லாம் ரெடியாகிவிட்டது, நான் கேட்ட பணம் ரூபாய்.60,000/-த்தைகா கொண்டு வந்திருக்கிறீர்களா? எனக் கேட்டதாகவும்,  பணத்தை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தவுடன்,



அவர் தன்னுடைய "பணத்தை ஆவண இ சேவை எழுத்தர் புவனப்பிரியாவிடம் கொடுத்து விட்டு, அவர் பணத்தை வாங்கிட்டேன்னு எனக்கு போன் பண்ணி சொல்லச் சொல்லுங்க எனக் கூறியதால், அங்கிருந்து புறப்பட்டு, ஆவண இ சேவை எழுத்தர் புவனப்பிரியாவின் அலுவலகத்திற்கு வைரவேலும் அரசு சாட்சியும்  சென்று இ சேவை ஆவண எழுத்தர் புவனப்பிரியாவைச் சந்தித்து பத்திரம் ரிலீஸ் ஆகிவிடுமா? என கேட்டதாகவும், அதற்கு அவர் தன்னிடம் சப்ரிஜிஸ்டர் சார் கேட்ட பணம் ரூபாய்.60,000/-த்தைக் கொண்டு வந்திருக்கிறீர்களா? என கேட்டதாகவும் அதற்கு வைரவேல் சாரை இப்ப பார்த்துட்டுத்தான் வருகிறேன், பணத்தை வாங்கியவுடன் உங்களை போன் பண்ணி வாங்கிட்டோம்னு சொல்லச் சொன்னாங்க எனக் கூறி பினாப்தலீன் இரசாயனப் பவுடர் தடவப்பட்ட பணம் ரூபாய்.60,000/-த்தை பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து புவனப்பிரியாவிடம் கொடுத்த உடன் புவனப்பிரியா அந்த பணத்தை  வாங்கி, இரண்டு கைகளாலும் எண்ணிப்பார்த்துவிட்டு, ஒரு வெள்ளை நிற கவரில் வைத்து அவரது மேஜை மேல் வைத்துவிட்டு, அவரது மொபைல் தொலைபேசியில் இருந்து சார்பதிவாளர் (பொறுப்பு) முத்துப்பாண்டியை அழைத்து "பத்திரம் ரிலீஸ் பண்றதுக்கு சார் கேட்ட பணம் ரூபாய்.60,000/-த்தை வைரவேல் கொடுத்துவிட்டார் எனக் கூறிய பின்னர் அவர் வைரவேலிடம் உங்க ஆவணங்கள் எல்லாம் ரெடியாக இருக்கு, வாங்கிய பார்ட்டிகளைப் போய் வாங்கிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னதும்,  அரசு சாட்சியுடன் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்து, வைரவேல் சைகை செய்தததைத் தொடர்ந்து அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக்கண்காணிப்பாளர், என்ன நடந்தது என்று கேட்க, அவரும் பணம் கொடுத்தை கூறினார். பின்னர் காவல் துணைக்கண்காணிப்பாளர், ஆவண எழுத்தர் அலுவலகத்திற்குள் குழுவாகச் சென்று, அவ்வலுவலகத்தில் இருந்த புவனப்பிரியாவை வைரவேல் அடையாளம் காட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக்கண்காணிப்பாளர் ஜான் பிரிட்டோ குழுவினரிடம் புவனப்பிரியா சிக்கிய பின் அழுது புலம்பி, என்னைக் காப்பாற்றுங்கள், சப்ரிஜிஸ்டர் சார் கேட்ட பணம் ரூபாய்.60,000/-த்தை அவரிடம் கொடுப்பதற்காகத்தான் வழக்கம் போல் வாங்கிவிட்டதாகவும், அந்தப்பணம் தனக்கு உரியது இல்லை என்றும், மேஜை மீதிருந்த பணத்துடன். வெள்ளை நிற தபால் கவரினை காண்பித்து, அதில் தான் வைரவேலிடம் வாங்கிய பணத்தை வைத்துள்ளதாகவும், அந்தப்பணத்தை அப்படியே சப்ரிஜிஸ்டர் முத்துப்பாண்டியிடம் கொடுக்க உள்ளதாகவும் கூறவே. காவல் துணைக்கண்காணிப்பாளர் ஜான்பிரிட்டோ, அவரை ஆசுவாசப்படுத்தி பின்னர் தொடர் நடவடிக்கையாக காவல் துணைக்கண்காணிப்பாளர், காரைக்குடி எண்.2 இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் சென்று, ரூபாய்.60,000/- லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் முத்துப்பாண்டியை பிடித்த நிலையில் சோடியம் கார்பனேட் கரைசல்கள் பரிசோதனை நடத்தப்பட்டது பின்னர் விசாரணை முடிந்து  வழக்கு குற்ற எண். 12/2024 U/S 7(a) and 12 of Prevention of Corruption Act 1988 as amended by the PC (Amendment) Act 2018 ன் படி லஞ்சம் பெற்ற காரைக்குடி இணை 2 அலுவலக சார் பதிவாளர் (பொறுப்பு) முத்துப்பாண்டி முதல் குற்றம் செய்த நபராகவும், இ சேவை ஆவண எழுத்தர் புவணப்பிரியா இரண்டாம் நபராகவும் கைது செய்யப்பட்டு சிவகங்கை கூட்டிச் சென்று அரசு மருத்துவமனையில் சான்றிதழ் பெற்ற பின்னர் இன்று அதி காலை உரிய நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தி மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் எத்தனையோ அதிகம் பணம் பெறும் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பலர் இருக்க இவர்கள் சிக்கியது பலரும் பேசும் நிலை உள்ளது. இந்த சம்பவம் கேள்விப்பட்டு அப் பகுதியில் இருந்து பல பத்திர எழுத்தர்கள் கடையை மூடி விட்டு உடன் தப்பித்த நிலையில் அப்பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது பத்திரப் பதிவு அமைச்சர் எனது நெருங்கிய உறவினர் என்னை யாரும் அசைக்க முடியாது என புதிய மாவட்டப் பதிவாளர் அராஜகமாகப் பேசுவதை நாமே பலமுறை பார்த்துள்ளோம் இந்த நிலை மாறவேண்டும் அல்லது அரசு இவர்களை ஒட்டுமொத்தமாக மாற்றம் செய்யாத வரை இலஞ்சம் லாவண்யங்கள் தொடரும். இன்னும் பல ஊழல் பூதங்கள் அலுவலகத்தில் ஒழிந்துள்ளது அதுவும் விசாரணை வளையத்தில் வரவேண்டும் என்பதே பலரின் கருத்தாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...