முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மல்லிப்பட்டினத்தில் தற்காலிக ஆசிரியைக்குத் தெரிந்த நபர் செயத படுகொலை

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தற்காலிகத் தமிழ் ஆசிரியை பள்ளி வளாகத்திலேயே முன்பிருந்த காதலனால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம்


தமிழ்நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்தைத் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் உத்தரவைத் தொடர்ந்து தொடர்ந்து காவல்துறை என ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் மல்லிபட்டினத்தில் முகாமிட்டுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரைந்தார். இந்த நிலையில் பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு விளக்கமளித்துள்ளார்.

அந்த அறிக்கை, கடந்த 10.06.2024 முதல் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக தமிழ் ஆசிரியராக செல்வி ரமணி 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பாடம் போதித்து வந்தார்.

இவருக்கு முதல் பாட வேலை இல்லை என்பதால் நேற்று (20.11.2024) ஆம் தேதி காலை 10.10 மணிக்கு ஆசிரியர்களுக்கான ஓய்வு அறை வராண்டாவில் சின்னமனை மதன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

எதிர்பாராத விதமாக ஆசிரியை ரமணி கழுத்து வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திவிட்டு ஓடும் போது ஆசிரியர்கள் மதனைப் பிடித்து காவல் துறையினரிம் ஒப்படைத்தனர். ஆசிரியை ரமணி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணை செய்து வருகின்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.தற்காலிக தமிழாசிரியர் ரமணியைக் கொன்ற நபரின் பெயர் மதன் குமார், (வயது 28); சின்னமனைதான் சொந்த ஊர்; 10 ஆம் வகுப்பு படித்தவர்.
நான்கு ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்கிறார். தங்கை திருமணத்திற்காக ஊருக்குத் திரும்பியவர், மீன்பிடித் தொழில் செய்து வந்தார்.

ரமணியும், மதன்குமாரும் ஒரு ஆண்டிற்கு மேல் காதலித்த நிலையில். மூன்று மாதங்களுக்கு முன், மதனின் பெற்றோர், ரமணி வீட்டுக்குச் சென்று பெண் கேட்டபோது; அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
திடீரென ரமணியின் பெற்றோர் மனம் மாறி. மதன் நடத்தை சரியில்லாதவர் என யாரோ ஒருவர் கூறியதால் வந்த மாற்றம் எனக் கூறப்படுகிறது. பெற்றோர் பேச்சை ரமணி தட்டவில்லை; மதனுடன் பேசுவதை நிறுத்தினார்.
மதன், நேற்று முன்தினம் மாலையில், திருமணம் குறித்து ரமணியிடம் பேசியுள்ளார். ரமணி அவரை திட்டிவிட்டு போய்விட்டாராம். அந்த ஆத்திரத்தில் தான் கத்தியுடன் பள்ளிக்கு வந்து, ரமணியுடன் பேசிப் பார்த்தும் பலன் இல்லாததால், கத்தியால் குத்தியிருக்கிறான் கொலையாளி 
பள்ளியில் இருந்து 150 மீட்டரில், மாவட்ட ஆட்சியர் வருகைக்காக காவலில் நின்று கொண்டிருந்த சேதுபாவாசத்திரம் காவலர்கள் வந்து, மதனை பிடித்துச் சென்றனர். பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தின் பல ஊர்களில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இது தனிப்பட்ட நபர்கள் பிரச்சினைகளால் நடந்த கொடூரமான கொலை, இது கல்வித்துறை சார்ந்த நிகழ்வுகள் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...