முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் நாளை விசாரணை.

முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் நாளை விசாரணை.

தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து அவதூறான கருத்து பேசியதாகக் கொடுக்கப்பட்ட புகாரில்  மதுரை திருநகர் காவல் நிலையம் மூலம் பதிவான FIR குற்ற எண் 612/ 2024.  ன்படி சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் Bharatiya Nagarik Suraksha Sanhita 482.பிரிவில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் நடிகை கஸ்தூரி அவரது வழக்கறிஞர் தினேஷ் ஹரி மற்றும் M சுதர்ஷன், உள்ளிட்டோர் மூலம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நாளை நீதியரசர் என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் CRL OP(MD) 19526/2024 விசாரணைக்கு வருகிறது. சென்னை எழும்பூரில்  கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற பிராமணர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக அவர் மீது மதுரை, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வழக்குப் பதிவு செயப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் வழக்கறிஞர் ஆன நடிகை கஸ்தூரியை கைது செய்ய காவல்துறை தேடி வருகின்ற நிலையில் மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில இன்று மனு தாக்கல் செய்துள்ளதில், “தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத் தோடு, என் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே, எனக்கு இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்.” எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நாளை விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக, வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்ற சம்மனை வழங்க சென்னை போயஸ் கார்டனிலுள்ள நடிகை கஸ்தூரியின் வீட்டுக்கு காவல் துறையினர் நேற்று சென்ற போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அதனால் அவரது செல்போன் எண்ணை  தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததனால் காவலர்கள் சம்மனை அவரது வீட்டுச் சுவரில் ஒட்டிவிட்டுச் சென்றனர். கைது நடவடிக்கையை தவிர்க்க நடிகை கஸ்தூரி தலைமறைவாகி விட்டார் என்று பேசப்பட்டது. மேலும் அவர் முன் ஜாமீனுக்கு முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியான நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.நடிகை கஸ்தூரிக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது 

தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அளித்த புகாரில், 6 பிரிவுகளின் படி மதுரை திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 திருச்சிராப்பள்ளி குற்றப்பிரிவு காவல்துறையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில்  4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அரசு ஊழியர்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சுக்கு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர்  கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்களின் குறிப்பிட்ட சில பிரிவினர் அதிகமாக லஞ்சம் பெறுவதாக பேசிய நடிகை கஸ்தூரியின்  பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் !?  நிகழ்வுகளை வைத்து, குறிப்பிட்ட பிரிவுகளை சார்ந்த ஊழியர்களை கொச்சைப்படுத்துவதா ? என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறிப்பிட்ட பிரிவினர் மீது தவறான பிம்பம் ஏற்படும் வகையில் விதமாக பேசிய நடிகை கஸ்தூரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் பரவலாக லஞ்சம் உள்ளது மட்டும் உண்மை. மற்ற தகவல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சரியான நடவடிக்கை.   பிராமணர்கள் சங்கத்தின் நிகழ்வில் பேசிய நடிகை கஸ்தூரி காஷ்மீரில் நடப்பது மட்டும் படுகொலை அல்ல. ஒரு சமுதாயத்தை அழிப்பதும் இனப் படுகொலை தான். பிறப்பிலிருந்து இறப்பு வரை முக்கியமான அங்கமாக இருக்க வேண்டியது பிராமணர் சமூகம். இந்த கைபர் கணவாய் வழியாக வந்தவர்களை பற்றி பேசினால் உங்கள் ஓட்டுகள் தான் குறையும் என பேசினார். அது மட்டும் அல்லாமல் தெலுங்கு மக்களை அவதூறாக பேசியதாக கஸ்தூரிக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்ததோடு 


இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு பிராமணர் சங்க ( தம்ப்ராஸ்) மாநில தலைவர் ஆன நாராயணன்," சமீப காலமாக பிராமண துவேஷம் என்பதை நாம் பொறுத்துக் கொண்டு வந்தோம். சகித்துக் கொண்டு வந்தோம். தற்போது லக்ஷ்மன் ரேகை என்ற எல்லைக்கோட்டை அது தாண்டிவிட்டது. இதனால் நாம் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 400 க்கும் அதிகமான கிளைகளை நிறுவியுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் பிராமணர்கள் ஒற்றுமை அருமையாக இருக்கிறது. பிராமணர்களை கோழை என்றோ பலவீனமானவர்கள் என்றோ நினைக்கக் கூடாது. தமிழகத்தில் ஆறாவது பெரிய சமூகம் பிராமணர்கள். அவர்கள் மனதை குலைக்கும் முயற்சிக்கின்றனர்.


குட்டிக்கரணம் போட்டாலும் அது நடக்காது" என பேசி இருந்தார். இது தனியே ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. பேசியிருக்கும் நாராயணன்," தமிழ் தாத்தா என்று உ.வே.சுவாமிநாத ஐயரை அழைக்கின்றனர்.  என்றார். மேலும் அவர் இன்னும் அவதூறு பேசிய பதிவுகள் உலா வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...