முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டெல்லி குழந்தைக் கடத்தல் தடுப்பு ஆபரேஷன் மிகப் பெரிய வெற்றி

டெல்லி காவல்துறையின் தலைமைக் காவலர்கள் சீமா தேவி மற்றும் சுமன் ஹூடா ஆகியோர் 9 மாதங்களில் காணாமல் போன 104 குழந்தைகளைக் கண்டுபிடித்து சாதனை படைத்தனர்.2 நகர காவலர்கள் காணாமல் போன 104 குழந்தைகளை 9 மாதங்களில் அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் சேர்த்தனர் கடந்த 9 மாதங்களில் காணாமல் போன 104 குழந்தைகளைக் கண்டுபிடித்ததில் தலைமைக் காவலர்கள் சீமா தேவி மற்றும் சுமன் ஹூடா ஆகியோர் பாராட்டத்தக்கவர்கள்



ஹரியானா, பீகார் மற்றும் உத்திரப் பிரதேசத்திலுள்ள தொலைதூரப் பகுதிகளுக்குச் சென்று குழந்தைகளைக் கண்டறிந்தனர். குழந்தைகளின் சமீபத்திய புகைப்படங்கள் இல்லாத குடும்பங்கள், பேசும் மொழித் தடைகள், அறிமுகமில்லாத இடங்கள் மற்றும் பிற மாநிலங்களில் அவர்கள் சென்ற இடங்களில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் உட்பட அவர்களை நெருங்கிய சவால்கள் அதிகம். இத்தகைய இடையூறுகள் இருந்த போதிலும், இருவரும் வெற்றிகரமாக குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களது  குடும்பங்களுடன் மீண்டும் இணைத்தனர். 

டில்லி வடக்கு புறநகர் மாவட்டத்தில் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவில் காவலர்களாக நியமிக்கப்பட்ட நிலையில் . ஆபரேஷன் மிலாப்பின் கீழ் 2024 ஆம் ஆண்டு மார்ச் முதல் நவம்பர் மாதம் வரை மீட்பு நடவடிக்கை நடந்ததாக காவலர் தேவி தெரிவித்தார் .சில தொலைதூரமான இடங்களில், பார்த்திராத நிலப்பரப்பு மற்றும் மக்கள் மற்றும் இடத்தின் அறிமுகமின்மை ஆகியவை முக்கிய சவாலாக இருந்ததாகவும். அவர்கள் உள்ளூர் காவல்துறையினரிடம் உதவி கேட்க வேண்டியிருந்தது. "குழந்தைகள் மக்களைத் தொடர்பு கொள்ளப் பயன்படுத்திய தொலைபேசி எண்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் இருந்தன. இது போன்ற சந்தர்ப்பங்களில், தொலைபேசியின் கடைசி இடத்தைக் கண்டறிய அவர்கள் சைபர் குற்றத் தடுப்புக் குழுவின் உதவியைப் பெற்றோம்," எனக் கூறினார்.தேவி ஒரு குறிப்பிடத்தக்க கடத்தல் வழக்கை நினைவு கூர்ந்தார்: "பவானாவைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி காணாமல் போனார்.அவள் நலமாக இருப்பதாகக் கூறி பல



தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி அந்தக் குழந்தையை அழைத்ததாக அவளுடைய இளைய சகோதரர் காவலர்களிடம் தெரிவித்தார். இருப்பினும், அவர் வெவ்வேறு எண்களைப் பயன்படுத்தியதால் தவறான நபர்கள் என அவர் சந்தேகித்தார். நாங்கள் வழக்கை விசாரித்து, நொய்டாவிலுள்ள ஜார்ச்சாவில். அவளைக் கூர்ந்து கண்காணித்தோம். அங்கு,அவள் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருப்பதைக் கண்டோம். உடனடியாக அவளை மீட்டோம்” என்றார்.  புதிய இடங்களில், பெண்கள் உள்ளூர் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டியிருந்தது, இது நேரமெடுத்தது, அதன் பிறகு அவர்கள் வீடு வீடாகத் தேடலாம்.காலாவதியான புகைப்படங்கள் சில குழந்தைகளை பல சந்தர்ப்பங்களில் அடையாளம் காண முடியாமல் போனதாகவும் தேவி கூறினார்.

குடும்பங்களில் தங்கள் குழந்தைகளின் சமீபத்திய புகைப்படங்கள் இல்லாத போது, மீட்கப்பட்டவர்கள், அவர்களில் பெரும்பாலோர் 4 முதல் 17 வயது வரை, பெற்றோரால் உடல் அங்க அடையாளங்கள் ரீதியாக அடையாளம் காணப்பட வேண்டியிருந்தது.  

மார்ச் மாதம் AHTU இல் இணைந்த ஹூடா, குழந்தைகளை அவர்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்க முடிந்ததில் பெரிய பெருமையும் நிம்மதியையும் உணர்ந்ததாகத் தெரிவித்தார். "எங்களுக்கு நிலையான பணி நேரம்மில்லை. காணாமல் போன குழந்தைகளைப் பற்றிய தகவல் கிடைத்தால், நாங்கள் எங்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறோம். நான் என் குழந்தைகளைப் பார்க்காத நாட்களும் உண்டு,” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் 

சில சிரமங்களைப் பட்டியலிட்டவர், ரேடாரில் இல்லாத கிராமங்களில் காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிவது சவாலானது என்றும் கூறினார். "இதுபோன்ற பகுதிகளில் போக்குவரத்துக்கள் இல்லாததால் நாங்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தோம். பலர் எங்களுக்கு உதவத் தயாராகவே இருந்தனர்,ஆனால் காவல்துறைக்கு உதவுவது சட்டச் சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று நினைப்பவர்களும் இருந்தனர்" என காவலர் ஹூடா கூறினார். இரயில் நிலையங்களில் பிச்சைக்காரர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளிடமிருந்து எப்படி முக்கியத் தடயங்கள் கிடைத்தன என்பதை அந்த இரு தலைமைக் காவலர்கள் வெளிப்படுத்தினார்கள். காணாமல் போன குழந்தைகளின் புகைப்படங்களை அவர்களிடம் காண்பிப்பது, அவர்கள் பார்த்தது பற்றிய தகவல்களை அடிக்கடி வெளிப்படுத்தியது. 13 முதல் 17 வயதுடையவர்கள் சமூக ஊடகங்களில் சந்தித்த அந்நியர்களின் செல்வாக்கிற்கு குறிப்பாக எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை காவலர் ஹூடா சுட்டிக்காட்டினார். 

காவலர்களின் கூற்றுப்படி, குழந்தைகள் காணாமல் போனதற்கான காரணங்கள், போதைப்பொருள் பழக்கம், பெற்றோரின் கவனிப்பு இல்லாமை மற்றும் போதிய கல்வியின்மை ஆகியவை அடங்கும்.  காவலர் தேவிக்கு 16 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். "நான் ஓரிரு நாட்கள் வெளியில் இருக்கும்போது, என் இளைய மகன் என்னை மிகவும் மிஸ் செய்கிறான்," எனக் கூறினார். ஒரு தாயாக, பெற்றோர்கள் குழந்தைகளுடன் பேசுவதும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதும் மீட்பு முயற்சியில் முக்கியம் என்றார்.

காவல் துறை இணை ஆணையர் டில்லி (வெளி வடக்கு) நிதின் வல்சன் கூறுகையில், ஆபரேஷன் "மிலாப் நடவடிக்கையில் காவலர்கள் சீமா மற்றும் சுமன் செய்த சிறப்பான பணிக்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவர்களின் சாதனை குழந்தைக் கடத்தலை எதிர்த்து நமது சமூகத்தை பாதுகாக்கும் எங்கள் உறுதியை வலுப்படுத்துகிறது" எனக் கூறினார்.இதற்கு முன்னர் கடந்த 2015 ஆம் ஆண்டில் இதேபோல் ஒரு ஆபரேஷன் நடந்தது அது  டெல்லியில் உள்ள குழந்தைகள் இல்லங்கள், ரயில் நிலையத்தின் நடைமேடைகள், பேருந்து நிலையங்கள், சாலைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றில் தங்கியுள்ள 165 குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

உள்துறை அமைச்சகமும் இந்த விஷயத்தில் ஒரு முன்முயற்சியை எடுத்து அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஜனவரி, 2015 ல் `ஆபரேஷன் ஸ்மைல்' முறையில் ஒரு மாதத்திற்கு ஒரு நிலையான பிரச்சாரத்தைத் தொடங்குமாறு அறிவுறுத்தியது. மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் எம்ஹெச்ஏவின் முன்முயற்சியைப் பாராட்டின, மேலும் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து கிடைக்கும் அறிக்கைகளின் படி, இந்த நடவடிக்கையின் போது இதுவரை 2500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அதுகுறித்து நாடாளுமன்ற மக்களவையில் அப்போது உறுப்பினர் ஸ்ரீமதியின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் ஸ்ரீ ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி இதனைத் தெரிவித்தார்.  ஆனால் தற்போது நடைபெற்ற ஆபரேஷன் வித்தியாசமானது மிகவும் சவாலானது. நடிகர் சூர்யா பொய்யாக நடித்த சிங்கம் 1 முதல் 3 வரை படத்தை ரசித்த மக்கள் இந்த உண்மையான டில்லி காவல் துறை தனிப்படையின் இரண்டு சிங்கங்கள் பாராட்டுக்குறியவர்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...