முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் காலமானார்

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் காலமானார்,


எழுத்துச் சித்தர் பாலகுமாரனுக்குப் பிறகு சிறு வயது முதல் எனக்கு மிகவும் பிடித்த ஆன்மிக எழுத்தாளர் இந்திரா சௌந்திரராஜன் பல அமானுஷ்ய நாவல்கள் (மர்மதேசம், விடாது கருப்பு) பல ஆன்மீக நாவல்கள் புகழ்பெற்றவை, இவரது பல நாவல்களை நான் படித்து ரசித்தவன் என்ற முறையில் இவரது மறைவு என்னை வெகுவாகப் பாதித்திருக்கிறது - இவரது நாவல்களில் ஒன்றுதான் "எந்திரம்", "மந்திரம்", "தந்திரம்" என்பது பற்றி மிகத்தெளிவாகக் கூறியிருப்பார். அதில் என் மனதில் நின்றதை மட்டும் பகிர்கிறேன் -


அதாவது எந்திரம் என்றால் ஆங்கிலத்தில் மெஷின். ஒரு எந்திரம் இயங்கும் மந்திரம் தேவை அதாவது பெட்ரோல், மின்சாரம் போன்று- தன் திறம் அதாவது சுயசக்தி - நமது ஹிந்து ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விக்கிரகங்கள் யாவும் எந்திரங்கள் (ஒவ்வொரு கோவில்களிலும் யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்) சமஸ்கிருத மந்திரங்களால் அந்த எந்திரங்களுக்குச் சக்தியூட்டி கோவில்களில் அதைப் பரவச்செய்கிறோம். அவர் தென்னிந்திய இந்து மரபுகள் மற்றும் புராணக் கதைகளில் நிபுணத்துவம் பெற்றவர் . அவர் முழுநேர எழுத்தாளராக ஆவதற்கு முன்பு டிவிஎஸ் குழும நிறுவனங்களில் பணிபுரிந்தார் . அவரது கதைகள் பொதுவாக இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள், தெய்வீகத் தலையீடு, மறுபிறவி, பேய்கள் போன்றவற்றை பெரும்பாலும் தமிழ்நாடு மாநிலத்தைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்து கூறப்படும் உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்லது ஈர்க்கப்பட்டவை .


இந்திரா சௌந்தர்ராஜன் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி 1958 ஆம் ஆண்டில் பிறந்த இன்று காலமான போது 66 வயதாகிறது தமிழ் எழுத்தாளர், பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதியவர். நாவல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித்தொடர்கள், ஆன்மிக சொற்பொழிவு போன்ற பல துறைகள் மூலம் புகழ் பெற்றவர். தென்னிந்திய மரபுகள் மற்றும் புராணக்கதைகளின் அடிப்படையில் வரலாறு, சமூகம், ஆன்மிகம், மர்மங்கள், சித்தர்கள் பற்றிய நூல்களை எழுதிக்கொண்டிருப்பவர்.


இந்தியா சௌந்தரராஜனின் மனைவி ராதா. மகள்கள் ஐஸ்வர்யா, ஸ்ரீநிதி. டி.வி.எஸ் நிறுவனத்தில் துணைப்பொறியாளராக பணியாற்றி. பின்னர் தொலைக்காட்சியிலும் திரைப்படத்துறையிலும் பணியாற்றத் தொடங்கினார். தாய் பெயர் சூடிய இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய என் பெயர் ரெங்கநாயகி என்னும் படைப்பு தமிழ் வளர்ச்சித்துறையின் 1999-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான மூன்றாம் பரிசினை பெற்றது .

சிருங்காரம் என்ற திரைப்படம் 2007- ஆம் ஆண்டுக்கான தேசிய விருது, மைலாப்பூர் அகாடமி விருது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விருது மற்றும் தமிழ்ச்சங்கம் விருதுகளைப்பெற்றுள்ளது .



'ருத்ரம்' தொலைக்காட்சித் தொடருக்காக தமிழ்நாடு அரசின் விருது பெற்றார்

'இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருது பெற்றார்


'அள்ளி அள்ளித் தருவேன் ’ நாவல் ஏர்வாடி கவிஞர் ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை விருதைப் பெற்றது. இந்திரா சௌந்தர்ராஜனின் படைப்புக்கள் தமிழ்நாட்டை சுற்றியுள்ள கிராமங்களில் நடந்த உண்மைச்சம்பவ நாட்டார் தெய்வங்களையும் நம்பிக்கைகளையும் சித்தர்கள் போன்ற மரபான நம்பிக்கைகளையும் புனைவுகளுக்கு அடிப்படையாகக் கொள்வதனால் அவை பொதுமக்களின் ரசனைக்குரியவையாக உள்ளன. இவரது நாவல்கள் கிரைம் ஸ்டோரி மற்றும் டுடே கிரைம் நியூஸ் போன்ற வெளியீடுகளில் ஒவ்வொரு மாதமும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுவரை இவர் 700 சிறுகதைகள், 340 நாவல்கள் மற்றும் 105 தொடர்களை எழுதியுள்ளார். இவரது பல படைப்புக்கள் மின் நூலாகவும் கிடைக்கின்றன. அவரது படைப்புகளில் கண்ட வார்த்தைகளில்:- "அயோத்தியில் சூர்ய வம்சத்தில் அரசாட்சி புரிந்து வந்த வைவஸ்வத மனு புக்ரனான இக்ஷாவாகுவுக்கும் இப்படித்தான் அவன் வாழ்வில் ஞானம் குறித்த எண்ணம் ஏற்பட்டது. ‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் மாறிடும் தன் உடல் திசுக்கள், இளமை முதுமை எனும் அதன் அடையாளங்கள், சற்றும் எதிர்பாராமல் வரும் உடல் உபாதைகள், உடன் இருந்து அன்பு காட்டுபவரின் மரணங்கள்’ என்று அவன் வாழ்வின் சம்பவங்கள், `மாற்றம் ஒன்றே இந்த உலகில் மாறாதது’ என்பதை அவனுக்கு உணர்த்தியதோடு, இப்பூவுலகில் நிலைத்த இளமையோடு வற்றாத சக்தியோடு வாழ்ந்தவர் என்றோ, வாழப்போகிறவர் என்றோ ஒருவர் கூட இல்லை என்கிற உண்மையையும் அவனுக்கு உணர்த்திற்று" .


ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசங்களில் முதலா வதும் பூலோக வைகுண்டம் எனப்படுவதுமான  ஸ்ரீ ரங்கம் தொடரின் பிரதானக் களம்! காவிரி நதியையே தன் தோள்மாலை போல் நிலமிசை சூடிக்கொண்டு, தாமச நித்திரையில் துயில் கொண்டிருப்பது போல் தோற்றம் தரும் அரங்கநாதப் பெருமாளே தொடரின் நாயகன்!

அரங்கன், தொடரின் நாயகன் மட்டுமல்ல, ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் அவனே நாயகன்! மண்மிசை குடிகொண்டிருக்கும் இவன் கோயிலின் பின்புலத்தில் தான் எத்தனை ரசமான சங்கதிகள்! `கோவில்’ என்றாலே பிரதான மிக்கதாயும், வரலாற்றுத் தொடர்புடையதாகும் அற்புதங்களின் நிலைக்கலனாகவும் இருப்பதை, நாம் நம் மண்மிசை உள்ள பல கோயில்களை வைத்து உணரலாம். தனக்கும் முதுமை வரும், தன் வாழ்வும் ஒரு நாள் முடிந்து போய்விடும் என்கிற எண்ணம் அவனை நெருடத் தொடங்கி விட்டது. இந்த நெருடல், `நிறைவான பூரணமான வாழ்வென்பது எது’ என்கிற கேள்வியையும் எழுப்பியபோது, அதற்கான விடை அவன் தந்தையான மனுவிடமிருந்தே அவனுக்குக் கிடைத்தது.பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜனின் எழுத்தில் உள்ள ரசனை இது, அவரது உறவினர் ஏ.எஸ்.ராகவன் எழுத்தாளர். சேலத்திலிருந்த எழுத்தாளர் மகரிஷியுடன் நெருக்கம் பா.செயப்பிரகாசம் எழுதி சிகரம் இதழில் வெளியான இருளுக்குள் இழுப்பவர்கள் சிறுகதை அவரை எழுதத்தூண்டியது  இந்திரா சௌந்தரராஜன். தனது முன்னோடியாக பா.செயப்பிரகாசம் மற்றும் லா.ச. ராமாமிர்தம் ஆகியோரை குறிப்பிடுகிறார். இவர் தன் அன்னை பெயரை இணைத்துக்கொண்டு எழுத தூண்டியவர் மகரிஷி.


இந்திரா சௌந்தர்ராஜனின் முதல் படைப்பு 1978- ஆம் ஆண்டில்  கலைமகள் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு வென்ற 'ஒன்றின் நிறம் இரண்டு' என்ற குறுநாவல். இந்திரா சௌந்தர்ராஜன் எழுத வந்த காலங்களில் மர்மக்கதைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால் அவரும் மர்மக்கதைகள் பல எழுதி அதில் நிறைவில்லாமல் வாழ்க்கை பற்றிய தேடல்கள், கேள்விகள் மூலமாக மூலம் அமானுஷ்ய நாவல்களை எழுத ஆரம்பிக்கிறார். ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்த 'கோட்டைபுரத்து வீடு' என்ற தொடரின் மூலம் பொதுவாசகர்களைக் கவர்ந்த இவர் பின்னர் 'ஐந்து வழி மூன்று வாசல்', 'ரகசியமாய் ஒரு ரகசியம்' போன்ற தொடர்களை எழுதினார். அமானுஷ்யம், சித்தர்கள் பற்றிய குறிப்புகள், ஆன்மிக மர்மங்கள் போன்றவற்றை களமாகக்கொண்டு கதைகளை எழுதினார்.

காலமான. பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் 

மதுரை டி.வி.எஸ் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

தனது வீட்டில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. பத்திரிகையாளர்கள் மற்றும் இலக்கிய வட்டம் திரைப்பட எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்ட காலப் பெட்டகம் காலமானதால் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...