முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வி.இராமசுப்பிரமணியன் நியமனம்

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வி.இராமசுப்பிரமணியன் நியமனம்.   


இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) டெல்லியில் செயல்படுகிறது. தேசிய அளவில் மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது இதன் பொறுப்புத் தலைவராக விஜய பாரதி சயானி இருக்கிறார். இந்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வி.இராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் குமாா் மிஸ்ரா,  ஜூன் மாதம் 2021-ஆம் ஆண்டு NHRC -யின் 8-ஆவது தலைவராக நியமிக்கப்பட்டாா். அவரது பதவிக்காலம் ஜூன் மாதம் 1 ஆம் தேதி, 2024-ஆம் ஆண்டுடன் முடிவடைந்ததையடுத்து இந்தப் பொறுப்பு காலியாக உள்ளது. என்எச்ஆா்சி உறுப்பினரான விஜயபாரதி சயானி அதன் தற்காலிகத் தலைவராக பணியாற்றி வருகிறாா். பிரதமா் தலைமையிலான குழு என்எச்ஆா்சி தலைவரை தோ்வு செய்யும்.

இந்தக் குழுவின் உறுப்பினா்களாக மக்களவைத் தலைவா், உள்துறை அமைச்சா், நாடாளுமன்ற மக்களவை எதிா்க்கட்சி தலைவா், மாநிலங்களவை எதிா்க்கட்சி தலைவா் மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவா் ஆகியோா் உள்ளனா். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கடந்த வாரம் மனித உரிமை ஆணையத்தில் தலைவராக வி.இராமசுப்பிரமணினை தேர்வு செய்த நிலையில்


தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வி.இராமசுப்பிரமணியனை குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி வி.இராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.         வி.ராமசுப்பிரமணியன், தமிழ்நாட்டில் மன்னார்குடியில் பிறந்து சென்னை திருவல்லிக்கேணியில் இந்து உயர்நிலைப்பள்ளியில் படித்த பிறகு விவேகானந்தா கல்லுாரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற பின்னர் சென்னை சட்டக்கல்லுாரியில் சட்டம் படித்தார். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர், 2006 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.பின்னர் தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டவர்,  ஹிமாச்சலப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றியவர் ராம.சுப்பிரமணியன். ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும்                   வி.இராமசுப்பிரமணியன் பணியாற்றியுள்ளார்.
இங்கு மனித உரிமைகள் முழுமையாக குறட்டை விட்டு உறக்கத்தில் இருக்கும் நிலையில் அந்தக் கொடியை இன்னும் உயரே தூக்கிப் பிடிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவராகியுள்ளார்கள்
நீதிபதி வி.இராமசுப்பிரமணியன் நல்ல இலக்கிய ரசனை கொண்டவர். இராமாயணம், மகாபாரதத்தில் பிரசங்க ஆர்வமுள்ளவர்! இவரது உரை வீச்சுக்கள் மிக சுவாரஷ்யமானது. நாமே சில நேரங்களில் ரசித்துள்ளோம். அதே சமயம் இவர் தன் பதவிக் காலத்தில் மக்களுக்கான நீதிபதியாக வெளிப்பட்டதைவிட  அரசு தரப்பிலான நீதிபதியாகத் தான் இருந்துள்ளார் என்பதற்கு இரண்டு உதாரணங்கள். 
முதலில் 
அதிரடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் வாசலில் வரிசையில் நின்று மயங்கி விழுந்தும், தற்கொலை செய்தும் 150 பேர் இறந்தனர்! எத்தனையோ கோடி பேர் எதிர்காலத்தைத் தொலைத்தனர். சுதந்திரத்திற்கு பிறகான இந்தியா சந்தித்த சொல்லொணாத் துயரமிது! இப்படிப்பட்ட அரசின் நடவடிக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதியாக அங்கீகரித்தவர் தான் இந்த நீதிபதி  வி.இராம சுப்பிரமணியன்.
கருப்புப் பணத்தை ஒழித்தல், பயங்கரவாதத்திற்கு பணம் செல்வதைத் தடுத்தல், ஊழலை ஒழித்தல், பொருளாதாரத்திலுள்ள பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற எதுவுமே சரியாக நடக்கவில்லை.
இந்த அறிவுப் பூர்வமற்ற நடவடிக்கையை சாதனையாகச் சொல்ல இயலாது என்பதால் தான் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பணமதிப்பிழப்பு பற்றி பாரதிய ஜனதா கட்சியினரோ, பிரதமர் நரேந்திர மோடியோ வாய் திறக்கவில்லை. 
’பணமதிப்பிழப்பு நியாயமானது தான்’ என பாரதிய ஜனதா கட்சியினரே சொல்லத் தயங்கிய நேரத்தில் அன்றைய உச்ச நீதிமன்றமோ  ’’’ இந்த நடவடிக்கை முற்றிலும் சரியானது. அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் குறைபாடு காண முடியாது’’ என்றது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தீர்ப்பை  வழங்கிய ஐந்து நீதிபதிகளில் ஒரே ஒரு பெண் நீதிபதியான நாகரெத்தினா மட்டுமே மாறுப்பட்டு, இது அரசின் தவறான முடிவு என்றார். ஆனால் வி.இராமசுப்பிரமணியனோ, அரசாங்கத்திற்கு ’ஆதரவாகத் தீர்ப்பளித்தார். இரண்டாவதாக 
கருப்புப் பணப் புழக்கத்தை கணிசமாக அதிகரிக்க வழிவகுப்பதோடு ஏழை எளிய நடுத்தரப் பிரிவு மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வரும் கிரிப்டோ கரன்சியை தடை செய்யப்பட வேண்டியது என ரிசர்வு வங்கி கிரிப்டோ கரன்சி குறித்து கூறி வருகிறது. கண்ணுக்குத் தெரியாத எலக்ட்ரானிக் பணமான கிரிப்டோ கரன்ஸியைப் பயன்படுத்தி ஏராளமான மோசடிகள் நடக்கிறது என்பதால் ஆர்.பி.ஐ கிரிப்டோ கரன்சிக்கு தடை விதித்தது.
ஆனால், அந்த கிரிப்டோ கரன்சிக்கு ரிசர்வ் வங்கி போட்ட தடை செல்லாது என தீர்ப்பளித்த நீதிபதியும் இந்த வி.ராமசுப்பிரமணியன் தான் .
இந்தத் தீர்ப்புக்கு பிறகு தான் கிரிப்டோ கரன்சியை அங்கீகரித்து அதில் 30 சதவிகித வரி விதிப்பை போட்டது மத்திய நிதி அமைச்சகம்!
இன்னும் இந்த அரசுக்கு சேவை செய்ய விரும்புகிறார் முன்னாள் நீதியரசர் வி.ராமசுப்பிரமணியன். ஆகவே, தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராகவே ஆக்கப்பட்டார் ! என் பலரும் விவாதிக்கும் நிலையில் 
இனிமேல் 
மக்களோட மனித உரிமைகளை காப்பாற்றுவதற்காகத்தான் இவர் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பதை அரசியல் அறிந்த பலர் ஏற்க மறுக்கும் நிலை உள்ளது. ஆகவேநாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் தெரிவித்ததாவது:-தேர்வு குழுவால் பாரபட்சமில்லாமல் நியமனங்கள் செய்யப்பட வேண்டும். இந்த நியமனம் முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகும். இதில் பரஸ்பர ஆலோசனை மற்றும் ஒருமித்த பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. விவாதத்தை ஊக்குவிப்பதற்கும், ஒரு கூட்டு முடிவை உறுதி செய்வதற்கும் பதிலாக, கூட்டத்தின் போது எழுப்பப்பட்ட நியாயமான கவலைகள் மற்றும் முன்னோக்குகளைப் புறக்கணித்து, பெயர்களை இறுதி செய்வதற்கு தேர்வு குழு அதன் உறுப்பினர்களின் பெரும்பான்மையை நம்பியுள்ளது. தேர்வு செயல்முறை அடிப்படையில் குறைபாடு உள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் நம்பகத்தன்மை, செயல்திறன் இந்தியாவின் அரசியலமைப்பு நெறிமுறைகளை வரையறுக்கும் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய தன்மையை பொறுத்தது. நாங்கள் முன்மொழிந்த பெயர்கள் இந்த உணர்வைப் பிரதிபலிக்கின்றன மற்றும் ஆணையத்தின் அடிப்படைக் கொள்கைகளுடன் ஒத்துப்போகின்றன என்றனர்.
தலைவர் பதவிக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரோஹின்டன் பாலி நாரிமன், கே.எம்.ஜோசப் ஆகியோரை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முன்மொழிந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...