முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருமாவளவனின் விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜுனா விலகல்

திருமாவளவனின் விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜுனா விலகல்  விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா கடிதம் மூலம் அறிவிப்பு

நான் என்றும் மதிக்கும் அன்புத் தலைவர்' என திருமாவளவனைக் குறிப்பிட்டு ஆதவ் அர்ஜுனா இராஜினாமா கடிதம் எழுதினார்.  கட்சியிலிருந்து ஆறு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், வீணான விவாதங்களுக்கு வழிவகுக்கக் கூடாது என்று எண்ணுகிறேன். - ஆதவ் அர்ஜூனா விலகல் கடிதம்

இதற்கான அரசியலில் அவர் கொடுத்த விலை 145 கோடிக்காக இருக்கலாம் என்பதே தற்போது அரசியல் தலைவர்கள் மத்தியில் உள்ள பேச்சாக அமையும், ஆதிதிராவிட பழங்குடியினர் மக்களுக்காக அரசியல் செய்வது அவசியம். அவர்களின் நலன் முக்கியம். அது மட்டுமே ஒருவகை, ஆதிதிராவிட பழங்குடியினர் மக்களை மையப்படுத்தி அரசியல் செய்வது அரசியலை சுருங்கச் செய்துவிடும். 


அனைத்து சமூக மக்களுக்கான நல ஜனநாயக வெகு ஜனஅரசியல் வேண்டும். அதே நேரம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான  அரசியலையும் தவிர்க்காமல் செய்த  ஓமந்தூர் ரெட்டியார், குமாரசாமி ராஜா, ராஜகோபாலாச்சாரி, கு.காமராஜ், சி.என்.அண்ணாதுரை, கலைஞர் மு.கருணாநிதி எம்.ஜி.ராமச்சந்திரன் இங்கு முதல்வர்கள் போன்ற தலைவர்கள் உண்டு. 


ஆனால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அரசியல் மட்டுமே பிரதான அரசியல் என்று கொண்டு போனவர்களும் தற்போது தாங்கள் பொதுவானவர்கள் என்று காட்டிக்கொள்ளும் போது பொதுவான மக்களுக்கான அரசியல், அதில் கூடுதலாக ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த கவன அரசியல் தான் சிறப்பாக இருக்கும். அதை விடுத்து ஒருசாரர் பக்கம் எடுக்கப்படும் அரசியல் மற்ற சமூக மக்களுக்கு எதிரானவர் என்கிற கருத்தை எதிராளிகள் அச்சமூகத்தினர் இடையே பதிவு செய்ய நாமே வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக அமைந்து விடும். அரசியலில் முடிவெடுப்பதில் ஆரோக்கியமான நடுநிலையான கவனமும், பொது சிந்தனையும் முக்கியம்.


என்பதை ஆதவ் அர்ஜுனா விரைவில் உணர்வார் திருச்சிராப்பள்ளியைப்  சேர்ந்த ஆதவ் அர்ஜுனா 1982ஆம் ஆண்டு பிறந்தவர்.. ஆதவ் அர்ஜுனாவின் தாய் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அலுவலர் திலகவதியின் சகோதரியாவர். ஆதவ் அர்ஜுனாவுக்கு 5 வயதாகும் போதே அவரது தாய் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர்களின் குடும்பத்திற்குப் பெரிய வருமானம் இல்லாமல் இருந்ததனால் குடும்ப வன்முறையை எதிர்கொண்ட தனது தாய் தற்கொலை செய்து கொண்டதாக ஆதவ் அர்ஜுனா ஒரு நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தார். தாய் உயிரிழந்து விட்டதால். உறவினர் ஒருவரின் பாதுகாப்பிலேயே ஆதவ் அர்ஜுனா வளர்க்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் சேர்ந்த லாட்டரி சீட்டு மார்ட்டினின் மகள் டெய்ஸியை ஆதவ் அர்ஜுனா காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் கூடைப்பந்தில் ஆர்வமாக இருந்தார். இதனால் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்தார். இப்போது கூட இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராக ஆதவ் அர்ஜுனா உள்ளார். விளையாட்டு ஒரு பக்கம் வைத்து அரசியலிலும் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தினார் அது வியாபாரம் கருதியே செய்தார். 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை உள்ள காலத்தில் காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அப்போது நமக்கு நாமே என்ற பயணத்தை தற்போதய முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். அந்தப் பயணத் திட்டத்தைச் செயல்படுத்தியவர்களில் ஒருவராக ஆதவ் அர்ஜுனா இருந்ததாகத் தெரிகிறது.



கோயம்புத்தூர் மொத்த லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினின் மகள் டெய்ஸி என்பவரை ஆதவ் அர்ஜுனா காதலித்துத் திருமணம் செய்து கொண்டதன் பிறகும் கூடைப்பந்தில் ஆர்வமாக இருந்தார். இதனால் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவராக வழி வகுத்தது 

"கனத்த இதயத்துடன்.. விசிகவில் இருந்து விலகுகிறேன்.." என ஆதவ் அர்ஜுனா கடிதம் மூலம்  அறிவிப்பு

அதன் பிறகு தேர்தல் வியூக வல்லுநர்களான பிரசாந்த் கிஷோர் மற்றும் சுனில் ஆகியோருடன் இணைந்து பயணித்து இருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் திமுகவுக்காக அவர் பணியாற்றியதாகச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிலிருந்து விலகியவர். 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். விசிகவுக்காக பணியாற்றத் தொடங்கினார். இந்தாண்டு தொடக்கத்தில் விசிக சார்பில் திருச்சிராப்பள்ளியில் "வெல்லும் ஜனநாயகம்' என்ற தலைப்பில் நடந்த மாநாட்டையும் ஒருங்கிணைத்தார்.

அதன் பிறகு தேர்தல் வியூக வல்லுநர்களான பிரசாந்த் கிஷோர் மற்றும் சுனில் ஆகியோருடன் இணைந்து பயணித்து இருக்கிறார். அந்த காலகட்டத்தில் திமுகவுக்காக அவர் பணியாற்றியதாகச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அதில் இருந்து விலகிய இவர். 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். விசிகவுக்காக பணியாற்றவே

விசிக: அந்த மாநாட்டில் தான் திருமாவளவன் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா  இணைந்தார். அதன் பிறகு 21 நாட்களில் அவருக்கு விசிக துணைப் பொதுச்செயலாளராக  பணி வழங்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட அவர் விசிக சார்பில் போட்டியிட இருந்தார். இதற்காகவே விசிக ஒரு பொதுத் தொகுதியைக் கேட்டதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், பொதுத் தொகுதி கிடைக்காததால் அந்தத் தேர்தலில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடவில்லை.

இந்தச் சூழலில் தான் விசிகவில் இருந்து முழுமையாக விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அதேநேரம் அவர் நடிகர் விஜய் தலைமை கொண்ட தமிழக வெற்றிக் கழகத்திலும் இணையலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...