முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு ஆளுநருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் பதிலாக அறிக்கை

தமிழ்நாடு ஆளுநரின் அறிவிக்கையை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த W.P. (C) 1271 / 2023. வழக்கு தற்போது நிலுவையிலுள்ளது. 


தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறையின் நிர்வாகத்தில் 13 பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. இவற்றுள் குறிப்பிட்ட ஆறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் காலியாகவே உள்ளது

குறித்து  தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கையில், "மாநில அரசு பல்கலைக்கழகங்களின் சட்டப் பிரிவுகளின்படி அமைக்கப்பட்ட தேடுதல் குழுவினால் பரிந்துரைக்கப்படும் மூன்று நபர்களில் ஒருவர் சார்ந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக ஆளுநரான வேந்தரால் நியமனம் செய்யப்படுவார். இதுவரை இந்த நடைமுறையையே பின்பற்றப்பட்டு வருகிறது.

அதன்படியே, தமிழ்நாடு அரசால் பாரதியார் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கு, ஆளுநர் அலுவலகக் கடிதத்தில், சார்ந்த பல்கலைக்கழகங்களின் சட்டவிதிகளின் படி மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழு அமைத்து அரசிதழில் வெளியிட தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அரசால் மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழு அரசிதழில் அறிவிக்கையாக வெளியிடப்பட்டது.


ஆனால், ஆளுநர் தன்னிச்சையாக, பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் 2018 ஆம் ஆண்டைய நெறிமுறைகளின்படி, மேற்கண்ட பல்கலைக்கழகங்களின் தேடுதல் குழுக்களில் நான்காவது நபராக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரை நியமனம் செய்து பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களுக்கு நான்கு பேர் அடங்கிய தேடுதல் குழு அமைத்து 06.09.2023 நாளிட்ட அறிவிக்கையை வெளியிட்டார். ஆனால், தமிழ்நாடு அரசு சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கு அப்பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி மூன்று பேர் மட்டுமே அடங்கிய தேடுதல் குழு அமைத்து அரசாணை அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது.

ஆனால், ஆளுநர் அவர்கள் இத்தேடுதல் குழுவினை ஏற்காமல், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் 2018 ஆம் ஆண்டைய நெறிமுறைகளின்படி, மேற்கண்ட பல்கலைக்கழகங்களின் தேடுதல் குழுக்களில் நான்காவது நபராக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரை நியமனம் செய்ய முதலமைச்சர் அவர்களுக்கு முகவரியிட்ட கடிதம் வாயிலாக வலியுறுத்தினார்.


பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்படும் தேடுதல் குழுவை அறிவிக்கையாக வெளியிடுமாறு ஆளுநர் அவர்கள் அரசிற்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியுமே தவிர, ஆளுநர் அவர்கள் தன்னிச்சையாக தேடுதல் குழுவினை அமைத்து அறிவிக்கை வெளியிடுவதற்கு அவருக்கு அதிகாரமில்லை.


 மேற்கண்ட ஆளுநர் அவர்களின் கடிதம் குறித்து அரசு தீவிரமாக ஆய்வு செய்து, மேற்குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களுக்கு அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்கள் அரசாணையின்படியும், அந்தந்த பல்கலைக்கழக சட்டப்படியும் தான் உள்ளதால், நான்காவது நபராக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுத் தலைவர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினரைச் சேர்த்து மேற்கண்ட பல்கலைக்கழகங்களுக்கு அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் எழவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆளுநர் அவர்களுக்கு 13.09.2023 ஆம் நாளிட்ட கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஆளுநர் அவர்களின் அலுவலகத்தின் மூலம் 09.01.2024 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தி மூலம் பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர் தேர்வு செய்வதற்காக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் அடங்கிய நான்கு பேர் கொண்ட தேடுதல் குழுவினை அமைத்து வெளியிட்ட தனது 06.09.2023 ஆம் நாளிட்ட அறிவிக்கைகளை திரும்பப் பெற்றுக்கொண்டனர் 


தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் சட்ட விதிகளின்படி துணைவேந்தர் அவர்களை தேர்வு செய்வதற்கு அமைக்கப்படும் தேடுதல் குழுவில் ஆளுநர் அவர்களால் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர், அரசால் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர் மற்றும் சார்ந்த பல்கலைக்கழக ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப்பேரவையினால் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர் ஆகிய மூன்று நபர்களைக் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்படும்.மாண்பமை உச்சநீதிமன்றத்தால், ஜெகதீஷ் பிரசாத் சர்மா மற்றும் பலர் பீகார் மாநில அரசிற்கு எதிராக தொடர்ந்த வழக்கில், "கல்வி என்பது அரசியல் சாசனத்தின் பொதுப்பட்டியலில் (பிரிவு-3) வருவதால், மாநில அரசானது கல்வியில் தனது சட்டங்களை சொந்தமாக வகுக்க சுதந்திரமும் அதிகாரமும் கொண்டுள்ளதால், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை எனவும், பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு சட்டம் 1956 ன் பிரிவு 26 ல் குறிப்பிட்டுள்ளபடி, எந்தெந்த நெறிமுறைகளை ஏற்க விரும்புகிறதோ அவற்றை மட்டுமே பின்பற்றலாம்" என தீர்ப்பு வழங்கியுள்ளது 

"மாநில அரசு பல்கலைக்கழகங்களின் சட்டப் பிரிவுகளின்படி அமைக்கப்பட்ட தேடுதல் குழுவினால் பரிந்துரைக்கப்படும் மூன்று நபர்களில் ஒருவர் சார்ந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக ஆளுநர்- வேந்தர் அவர்களால் நியமனம் செய்யப்படுவார். இதுவரை இந்த நடைமுறையையே பின்பற்றப்பட்டு வருகிறது.

மாண்பமை உச்சநீதிமன்றத்தால், ஜெகதீஷ் பிரசாத் சர்மா மற்றும் பலர் பீகார் மாநில அரசிற்கு எதிராக தொடர்ந்த வழக்கில், "கல்வி என்பது அரசியல் சாசனத்தின் பொதுப்பட்டியலில் (பிரிவு-3) வருவதால், மாநில அரசானது கல்வியில் தனது சட்டங்களை சொந்தமாக வகுக்க சுதந்திரமும் அதிகாரமும் கொண்டுள்ளதால், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை எனவும், பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு சட்டம் 1956ன் பிரிவு 26 ல் குறிப்பிட்டுள்ளபடி, அரசாணை (நிலை) எண், 5, உயர்கல்வி (எச்1) துறை, நாள் 11.01.2021 மூலம், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நெறிமுறைகள் 2018-ல் குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறை 7.3 (ii)னை ஏற்காத காரணத்தாலும், உச்சநீதிமன்றத்தால், ஜெகதீஷ் பிரசாத் சர்மா மற்றும் சிலர் பீகார் மாநில அரசிற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் வெளியிடப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், மாநில பல்லைக்கழகங்களுக்கு சார்ந்த சட்டவிதிகளின்படி தேடுதல் குழுவினை அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உரிய சட்ட அதிகாரம் மற்றும் உரிமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அரசாணை (டி) எண் 270 உயர் கல்வி (எச்1) துறை நாள் 09.12.2024 மூலம் அடுத்த துணைவேந்தர் நியமனம் செய்வதற்கு மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழு (Search Committee) அமைத்து ஆணைகள் வெளியிடப்பட்டு அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் அடுத்த துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பாக, அரசாணை (டி) எண் 277 உயர் கல்வி (ஐ1) துறை நாள் 13.12.2024 மூலம் சார்ந்த பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழுவினை (Search Committee) அமைத்து ஆணைகள் வெளியிடப்பட்டு அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டதில் எவ்வித விதி மீறல்களும் இல்லை.

மேற்கண்ட நிலையில், மேற்குறிப்பிட்ட நான்கு பல்கலைக்கழகங்களுக்கு (அண்ணாமலை, அண்ணா, பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைக்கழகங்கள்) அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்கள் சார்ந்த பல்கலைக்கழக சட்டங்களின் படியும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண், 5, உயர்கல்வி (எச்1) துறை, நாள் 11.01.2021ன் அடிப்படையிலும் தான் உள்ளது, இதில் விதிமீறல்கள் ஏதும் இல்லை. எனவே, பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினரைச் சேர்த்து, மேற்கண்ட பல்கலைக்கழகங்களுக்கு அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் எழவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் பல்வேறு இடையூறுகளை பலவகையிலும் ஆளுநர் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதிதான் துணை வேந்தர் தேடுதல் குழு அமைப்பு விவகாரத்தில் ஆளுநர் அனுப்பி உள்ள கடிதம்.

பல்வேறு மாநிலங்களைக் கொண்ட இந்தியாவில் அந்தந்த மாநில மக்களின் பண்பாட்டு கூறான கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை மாநில மக்களின் தேவைகளை உணர்ந்து அந்தந்த மாநில தேவைகளுக்கு தகுந்தார்போல் உயர்கல்வி அமைப்பினை அமைத்துக் கொள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு அதிகாரமும் உரிமையும் உள்ளது.

ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதற்கென்று உருவாக்கப்பட்ட சட்டத்தின் படியே செயல்படுகிறது. பல்கலைக்கழகம் பொதுவான சில பரிந்துரைகளை அவ்வப்போது வழங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு தனது பல்கலைக்கழகத்திற்கு தான் இயற்றிய சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும். பல்கலைக்கழக மானியக் குழு, பல்கலைக்கழகம் அல்லது அரசிற்கு ஏதேனும் தெரிவிக்க வேண்டியது இருந்தால் அதை நேரடியாக தெரிவிக்கும்.

வேந்தர் என்ற பதவி வழி பொறுப்பை பயன்படுத்தி அரசு பல்கலைக்கழக சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளை முடக்குவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. ஆளுநர் அவர்கள் சட்டத்தை தவறாக தன் கையில் எடுத்துச் செயல்முறைகள் வெளியிடும் போக்கை அரசு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் பல்வேறு இடையூறுகளை பலவகையிலும் ஆளுநர் செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதிதான் துணை வேந்தர் தேடுதல் குழு அமைப்பு விவகாரத்தில் ஆளுநர் அனுப்பி உள்ள கடிதம். பல்கலைக்கழகங்கள் பல மாதங்களாக துணை வேந்தர் இல்லாமல் செயல்படுவதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஆளுநர் நடந்து கொள்ளவது மாணவர்கள் நலனுக்கு எதிரானது ஆகும்.

மாணவர்கள் நலன் கருதி மாநில ஆளுநர் பல்கலைக்கழகச் சட்டத்திற்கு உட்பட்டு அமைக்கப்பட்ட தேடுதல் குழுவிற்கு ஒப்புதல் அளித்திடுவதே அவர் வகிக்கும் பதவிக்கு அழகாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டமன்றம் மூலம் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது ஆளுநரின் கடமை.

ஆனால் அதனை செய்யாமல் அரசால் நிறைவேற்றப்படும் மக்கள் நலன் காக்கும் பலவற்றை நிராகரித்து வருகிறார். இதிலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் ஒரு பிரதிநிதியாக செயல்பட்டு அரசு பல்கலைக்கழக சட்டத்தினை புறம்தள்ளி பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவிற்கு ஏற்றார்போல் சாதமாக செயல்பட்டு வருகிறார். இனியாவது ஆளுநர் அவர்கள் தனது செயல்பாட்டினை மாற்றிக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...