முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேங்கை வயல் பாதிக்கப்பட்டவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாதலால் வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற சிபிசிஐடி கோரிக்கை

தமிழ்நாடு CBCID காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாதென வேங்கைவயல் பகுதி ஆதிதிராவிட மக்கள் சார்பில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் நிலையில் 


வேங்கைவயல் கிராமத்தில் பலத்த காவல் துறை பாதுகாப்பும் போடப்பட்டது.

கிராமத்திற்குள் வெளிநபர்கள் யாரும் செல்ல முடியாத வகையில் ஆங்காங்கே சோதனைச்சாவடிகளை அமைத்து  காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26- ஆம் தேதி 

குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பல அரசியல் கட்சிகள், சார்ந்த அமைப்புகள், மாநிலத்தின் மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகள்  கோரிக்கை விடுத்தது.

2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் CBCID. காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்தனர். இந்த வழக்கில் ஜனவரி மாதம்  20- ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததில், முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக தெரிந்தது.


முட்டுக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் பத்மாவின் கணவரைப் பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவுகள் மேற்கண்ட குற்றவாளிகளால் கலக்கப்பட்டதாகக் குற்றப்பத்திரிகையில் தமிழ்நாடு அரசு தெரிவித்ததில் முரளிராஜா வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயுதப்படைக் காவலராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு குரல் மாதிரி பரிசோதனை, மற்றும் DNA பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய இருவரும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மூவரிடமும் ஆரம்பத்திலிருந்தே சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.


அறிவியல் பூர்வமான சாட்சிகளின் அடிப்படையில் CBCID  காவல்துறையினர் இவர்களை சம்பந்தப்பட்ட குற்றம் செய்த நபர்களாகக் கருதியுள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களையே குற்றவாளிகள் எனக் கூறியுள்ளதாக அவர்கள் சார்ந்துள்ள சமூகத்தினர் சார்ந்த தரப்பினர் எதிர்த்துள்ளனர்.

வேங்கைவயல் பகுதி மக்கள் உண்மைக் குற்றவாளிகளை கண்டறியவும், சி.பி.ஐ. விசாரிக்கக் கோரியும் வேங்கைவயலில் நேற்று முன்தினம் முதல் அப்பகுதி ஆதிதிராவிட மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மூன்றாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. கருப்பு துணியை வாயில் கட்டி அந்த சமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தையொட்டி வேங்கைவயல் கிராமத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் அந்தக் கிராமத்திற்குள் வெளிநபர்கள் யாரும் சென்றுவிடாத நிலையில்  ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், அந்தக் கட்சிகாரர்களை ஒரு சில விஷயத்தில் மட்டும் தான் கட்சி அவர்கள் தகுதி அடிப்படையில் காப்பாற்றும். சிலர் கட்சிக்கு எவ்வளவு நன்மை செய்திருந்தாலும், நீண்ட காலம் அக்கட்சியில் இருந்தாலும் கூட சமூக விரோதச் செயலில் ஈடுபடுபவர்களை ஒரு  சூழ்நிலையில் கட்சி விலக்கி வைத்து விடும்.

மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்துக்களையும் விசிக திருமாவளவன் கருத்துக்களையும் எடைபோட்டு ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது. கடந்த பத்தாண்டுகளாக திருமாவளவனின் பேச்சுகள் மற்றும் செயலும் ஒவ்வொன்றும் தெளிவான அரசியல் புரிதலோடு நுணுக்கமான அரசியலை அவர் சார்ந்த சமூகத்தின் வெற்றிக்காக தெளிவாகவே பேசுகிறார் என்பது அரசியல் தெறிந்த அனைவரும் அறிந்ததே.

'யாரைக் காப்பாற்றுகிறது அரசு' என்ற அவரின் விமர்சனம் மட்டுமே தற்போது புரிதலற்ற கேள்வியாகிது. இந்த விவகாரம் குறித்து அவருக்கு ஏற்கனவே தெரியாமல் இருந்திருக்காது. காரணம் அவர் தடய அறிவியல் சார்ந்த துறைகளில் பணி செய்தவர் தற்போது இதுபோல ஒரு கருத்தை கூறுவது ஆச்சரியமளிக்கிறது.

இப்போது ஒரு கருத்தை உற்று நோக்கும் நிலையில் 

வேங்கைவயல் விவகாரத்தில் Mainstream Media வில் பணிபுரியும் எந்த செய்தியாளர்களிடம் கேட்டாலும் ஒரே பதிலைதான் சொல்வார்கள் அதுதான் உண்மையும் கூட.

காவல்துறைக்கு தெரியாத விஷயங்கள் கூட அட இந்த மாவட்டச் செய்தியாளர்கள், தாலுகா செய்தியாளர்களுக்கு எளிதாக தெரிந்துவிடும். ஏனென்றால் அவர்கள் மக்களோடு மக்களாக இருப்பவர்கள் ஏன் நிறைய செய்திகளில் தொலைக்காட்சியைப் பார்த்துத் தான் காவல்துறைக்கு விஷயம் தெரியும். அவர்களுக்கு முன்பே இவர்கள் CCTV யை கேட்ச் செய்து விடுவார்கள்.சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழப்பு கூட ஒரு தொலைக்காட்சி 

தமிழ் செய்தியாளரின் சிசிடிவி காட்சி தான் முக்கியத் திருப்பமாக அமைந்தது. செய்தி எழுதும் போது ஏதேனும் தகவல் தேவைப்பட்டாலோ, சந்தேகமிருந்தாலோ செய்தி வழங்கிய செய்தியாளரிடம் நேரடியாக பேசித்தான் செய்தி எழுதுவார்கள் அனைத்து தொலைக்காட்சியிலும். இவ்விவகாரத்தை நானும் நிறைய முறை களத்தில் இருப்பவர்களிடம் கண்டுள்ளேன் கேட்டும் தெரிந்து கொண்டேன். எல்லா செய்திகளையும் யார் கொடுத்தாலும் நான் முழுமையாக விசாரிக்காமல் அதை அணுகியதே இல்லை.

காவல்துறை தற்போது கூறியவை தான் உண்மை, இது அப்போதே அனைத்து செய்தியாளர்களுக்கும் தெரியும். யாரிடம் வேண்டுமானாலும் விசாரிக்கலாம். திமுக மீதும் திமுக அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டு, விமர்சனம், குறைபாடுகள் இருப்பது உண்மைதான் ஆனால் வேங்கைவயல் விவகாரத்தில் அரசை சாடுவது அறமல்ல.

அனைத்துக் கட்சி, மதம், ஜாதி இதில் எல்லாவற்றிலும் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்ட அயோக்கியர்களும் இருப்பார்கள். ஒடுக்கப்பட்டவரே இதை செய்திருப்பாரா என்று சிலர் சொல்வது ஆச்சரியமளிக்கிறது. 'யார் குத்தினாலும் கத்தி குத்தும்', 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் 'என்ற திரைப்படத்தின் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.



சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற அவர்கள் தரப்பில் கோரிக்கை இருந்தாலும் CBCID காவல் துறை சார்பில் மேலும் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திலிருந்து மாவட்டக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு வாழக்கை மாற்றக் கோரிக்கை வைக்கப்பட்ட மனு இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதில் பொது நீதி யாதெனில் பாதிக்கப்பட்டவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒரே ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்திலிருந்து இந்த வழக்கை புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2-க்கு மாற்ற




CBCID காவல் துறை தரப்பில் அரசு வழக்கறிஞர், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) வசந்தியிடம் வலியுறுத்தினார். மேலும் இதற்கான கடிதத்தை CBCID காவல்துறை. தரப்பில் வழங்கப்பட்டதையடுத்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...