தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு.
சி மற்றும் டி பிரிவு அரசுப் பணியாளர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு..க. ஸ்டாலின் உத்தரவு.
ஆசிரியர்களுக்கு ரூபாய்.3000 மிகை ஊதியம். இந்த உத்தரவின்படி, சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3000 என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்,
மேலும் தொகுப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023-24 ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லறைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் ஆயிரம் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும் .
மேலும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூபாய். 500 பொங்கல் பரிசு
சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ரூபாய். 500 பொங்கல் பரிசாக வழங்கப்படுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பரிசு வழங்கிட ரூபாய்.163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டு இருப்பதால். விரைவில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும்.
கருத்துகள்