முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தேசிய மகளிர் ஆணையம் மற்றும் உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரணை தீவிரம்

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை  வழக்கிலுள்ள பின்னணிகளை


முழுமையாக விசாரணை செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டதன்படி, சென்னை அண்ணா நகர் காவல் துறை துணை ஆணையர் சிநேக பிரியா, ஆவடி காவல்துறை துணை ஆணையர் ஜமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகிய மூன்று பெண் இந்திய காவல் பணி அலுவலர்கள் தலைமையிலான குழுவில் பூஜியக் குற்றக் காவல்துறை  உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் உள்ளனர். முன்னதாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் காவலர்கள் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் மாற்றியது. அதனால், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், சிசிடிவி கேமரா பதிவுகள், உள்ளிட்ட ஆதாரங்கள்

அனைத்தையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.           மேலும், தேசிய மகளிர் ஆணையத்தின் குழுவினர் அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு கிடைக்கப்பெற்ற தகவல்களை கொண்டு சிறப்புப் புலனாய்வுக் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு. உள்ளதாகவும் கூறப்படுகிற நிலையில், இன்று (ஜனவரி மாதம் 2 ஆம் தேதி) காலை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்துள்ளனர். மேலும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் எந்தெந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது என்பதை நேரடியாகச் சென்று ஆய்வு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சாட்சியங்கள், சந்தேகப்படும் நபர்கள் உள்ளிட்ட சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மை கண்டறியும் குழுவும் பயன் படுத்தி விசாரணை நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கை தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு ஏற்றது. மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, ஆணையத்தின் துணைச் செயலாளர் சிவானி தே ஆகியோர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவும் அமைக்கப்பட்டது.இந்தக் குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தி விசாரணையும் மேற்கொண்டது.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா குமாரி, பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தோம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், தமிழ்நாடு காவல்துறையினர் அவரை எப்படி வெளியில் நடமாடவிட்டார்கள்? காவல்துறையும் அரசும் ஏன் அவர் மீது முன் கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை'' என கோபமாகவே கேள்வி எழுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 19 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் அதிர்ச்சிகரமான சம்பவத்தை NCW ஏற்கனவே தானாக முன்வந்து எடுத்துக்கொண்டது. இப்போது, ​​மாண்புமிகு தலைவி திருமதி.விஜயா ரஹத்கர் அவர்கள், ஸ்ரீமதி. மம்தா குமாரி, உறுப்பினர், NCW, மற்றும் ஸ்ரீ பிரவீன் தீட்சித், ஐபிஎஸ் (ஓய்வு) மற்றும் மகாராஷ்டிராவின் முன்னாள் டிஜிபி, விசாரணை மற்றும் நடவடிக்கை பரிந்துரைக்க. இந்தக் குழு அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர், அவரது குடும்பத்தினர் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் உண்மைகளைக் கண்டறியும். இந்தக் குழு, டிசம்பர் 30, 2024 திங்கட்கிழமை சென்னைக்கு வர வாய்ப்புள்ளது.  அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து, தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) தலைவர் விஜய ரஹத்கர் கூறும்போது, ​​"... இந்த விஷயத்தை உணர்ந்து, NCW காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கமான குற்றவாளி என்று தெரிகிறது. இதற்கு முன்பு இதுபோன்ற குற்றங்களைச் செய்துள்ளார், ஆனால் காவல்துறையில் கண்டு கொள்ளவில்லை... எனவே NCW இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வெவ்வேறு நபர்களையும் பாதிக்கப்பட்டவரின் பெற்றோரையும் சந்தித்து வருகிறது.     பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக, அண்ணா பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை NCW மதிப்பிட்டது, SIT ஐ சந்தித்து, NGOக்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பங்குதாரர்களை ஈடுபடுத்தியது. நடவடிக்கை எடுக்கக்கூடிய பரிந்துரைகளுடன் கூடிய விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பு திருமதி மம்தா குமாரி (உறுப்பினர்- NCW) தலைமையிலான NCW விசாரணைக் குழு நேற்று பாதிக்கப்பட்ட மற்றும் குடும்பத்தினரை சந்தித்து, சம்பவ இடத்தை ஆய்வு செய்து, மாண்புமிகு தமிழக ஆளுநர், டிஜிபி மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடியது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து ஆய்வு எனத் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...