முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூலப்பத்திரம் இல்லாவிட்டாலும் அதன் நகலைச் சரிபார்த்து பத்திரப்பதிவு செய்யும் நீதிமன்றத்தின் உத்தரவு

மூலப்பத்திரம் இல்லாவிட்டாலும் அதன் நகலைச் சரிபார்த்து பத்திரப்பதிவு செய்யும் நீதிமன்றத்தின் உத்தரவு  

இராசிபுரம் சார்பதிவாளருக்கு   தனிப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் உத்தரவு



பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் அல்லது தாய் பத்திரம் அல்லது காணாமல் போன மூலப் பத்திரம் கிடைக்கவில்லை என்ற காவல்துறை வழங்கும் சான்று ஆகியவை இல்லாவிட்டாலும், பத்திரத்தின் சான்றிதழ் நகலை சார்பதிவாளர் அலுவலக ஆவணத்துடன் ஒப்பிட்டு, பத்திரப்பதிவு செய்யலாம்ம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.



நாமக்கல்ல் பாப்பு என்பவர், தனது மூதாதையர்கள் சம்பந்தப்பட்ட பூர்வீக சொத்தை தனது பெயரில் இருந்து தனது சகோதரர் பெயருக்கு மாற்று வதற்கு மூலப்பத்திரம் இல்லை என பதிவு செய்ய ராசிபுரம் சார் பதிவாளர் மறுத்துள்ளார். அதே சார்பதிவாளர் அலுவலகத்தில் ஏற்கனவே பெறப்பட்ட மூலப் பத்திரத்தின் சான்றிதழ் செய்த நகலை ஏற்க மறுத்து விட்டனர். பத்திரப்பதிவு செயய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய் தார். இதை எதிர்த்து பாப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார் 



 வழக்கை நீதி பதிகள் ஆர்.சுப்ரமணியம், சக்தி வேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது தீர்ப்பு விவரம் வருமாறு -: வழக்கமாக ஒரு பத்திரப்பதிவு செய்ய வேண்டுமானால் பத்திரப் பதிவு சட்டப்படி மூலப்பத்திரம் வேண்டும். மூலப்பத்திரம் இல்லா விட்டால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெற்ற ஜெராக்ஸ் நகல் இருக்க வேண்டும். அதுவும் இல்லாவிட்டால் காவல்நிலையத்தில் புகார் அளித்த பின்னர் பத்திரம் காணவில்லை என விளம்பரங்கள் செய்ய வேண்டும் புகார் கொடுத்து, அதற்கு விசாரணை நடத்தி காவல்துறை அளித்த சான்று இருக்க வேண்டும் என்று தான் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.



காணாமல் போன மூலப்பத்திரம், அல்லது மூலப் பத்திரம் கிடைக்கவில்லை என்ற காவல்துறையினர் கொடுத்த சான்று ஆகிய இரண்டும் இல்லாவிட்டாலும், பத்திரத்தின் நகலை அலுவலக ஆவணத்துடன் ஒப்பிட்டுப்பார்த்து பதிவு செய்ய வேண்டும். அனைத்து ஆவணங்களும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஏற்கனவே இருக்கும்


என்பதால் அதை ஒப்பிட்டுப் பார்த்து, மனுதாரரின் சொத்து மாற்று பத்திரத்தை ராசிபுரம் சார்பதிவாளர் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடுகிறோம். எனவே மனுதாரரின் பத்திரத்தை பதிவு செய்ய மறுத்தது தவறானது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.

எல்லா நேர்வுகளிலும், மூலப் பத்திரம் கிடைக்கவில்லை என்று காவல் நிலையத்தில் சான்று பெற்று வர வேண்டும் என திருப்பி அனுப்புவது. தேவையின்றி முறைகேடான வழியில் சான்று பெறுவதை ஊக்கு விப்பதாக அமையும். மூலப் பத்திரம் கிடைக்கவில்லை என்ற காவல்துறை சான்று பெறுவதில் உள்ள பெருஞ்செலவுகள், சிக்கல்கள் காரணமாக, வெளிமாநிலங் களில் இருந்து இத்தகைய காவல்துறை சான்றுகள் சமர்ப்பிக்கப்படுவது அதிகரித்துள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது என்றும் இந்த தீர்ப்பில் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வேறு நபரின் வழக்கிலும் இதே தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை சில மாதங்களுக்கு முன்பு பிறப்பித்தது. திருநெல்வேலி மாவட்டம் வி.கே புரத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டருக்குச் சொந்தமாக அம்பாசமுத்திரம் தாலுகா சிவஞானபுரம் வடக்குத் தெருவில் இரு சர்வே எண்களில் இரண்டு நத்தம் நிலவரித்திட்ட நிலங்கள் இருக்கிறது. இந்த சொத்துக்கள் அவரது தந்தை கடந்த 29.6.1998 ல் தானமாகக் கொடுத்தது. இந்த சொத்தை அவரது மனைவி பெயருக்கு மாற்றம் செய்வதற்கு வி.கே.புரம் சார்பதிவாளரை அணுகியிருக்கிறார். அப்போது, மூலபத்திரம் அசல் தாக்கல் செய்யவில்லை என்பதால் பத்திரப்பதிவிற்கு மறுத்ததுடன் காவல்துறையில் மூலபத்திரம் தொலைந்ததிற்கான சான்று வாங்கி வந்தால் தான் பத்திரபதிவு செய்யமுடியும் என்று சார்பதிவாளர் திருப்பி அனுப்பியியுள்ளார்

அதனால், மூலபத்திரத்தின் நகலை வைத்து சார்பதிவாளர் பத்திரப்பதிவு செய்திட உரிய உத்தரவிட வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அலெக்ஸாண்டர் மனு தாக்கல் செய்தார்.  வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், ஒருவர் பத்திரபதிவு செய்ய வேண்டுமானால் பத்திரப்பதிவுக்கு சட்டப்படி மூலப்பத்திரம் இருக்க வேண்டியது அவசியம். ஒரு வேளை மூலப்பத்திரம் இல்லாவிட்டால், காவல்துறையில் பத்திரம் காணவில்லை என்று புகார் கொடுத்து அதற்கு காவல்துறையினர் சான்று அளிக்க வேண்டும் .

ஆனால் அதனை அளித்தால் தான் பத்திரபதிவு செய்யமுடியும் என்று கட்டாயபடுத்தக் கூடாது. எனவே அசல் மூல ஆவணம் மற்றும் போலீஸ் சான்று இல்லாவிட்டாலும் நகலை ஒப்பிட்டுபார்த்து பத்திரபதிவு செய்யவேண்டும்.நகல் மூலப்பத்திரம்: அனைத்து ஆவணங்களும் பத்திரபதிவு அலுவலகத்தில் இருக்கும் என்பதால் அதனை மட்டுமே ஒப்பிட்டு பத்திரபதிவு செய்ய வேண்டும். அசல் மூல ஆவணம் தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தினால் மனு தாரரின் பத்திரத்தினை பதிவு செய்ய மறுத்தது தவறானது. ஆகவே மனு தாரரின் பத்திரத்தினை ஒருவார காலத்திற்குள் பதிவு செய்யவேண்டும். அதற்கு மூலப்பத்திரத்தை கேட்காமல் பதிவாளர் பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார்

எனவே, மூலப்பத்திரம் இல்லாவிட்டாலும், மூலப்பத்திரம் காணாமல் போனதாக காவல்துறையினர் கொடுக்கும் சான்று இல்லாவிட்டாலும் பத்திர நகலை சார்பதிவாளர் அலுவலக ஆவணத்துடன் ஒப்பிட்டு பத்திரப்பதிவு செய்ய முடியும் என்று பலரும் பேசும் நிலையில் ஆனால், இதுபற்றி முழு தகவல்களை அறிய வழக்கறிஞர்கள் அல்லது சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகிப் பாருங்கள். அது நடைமுறை சாத்தியத்திற்கும் உகந்ததாக இருக்கும். மூலப் பத்திரம் இல்லாமல் பத்திரப் பதிவு செய்வது தவறுகளை ஊக்கப்படுத்துவது போலாகும் , வேறு இடத்தில் மூலப் பத்திரம் மூலம் அடமானக் கடன் வாங்கியவர்கள் கூட சொத்தை பதிவு செய்து விற்பனை செய்யும் மோசடி நிலை நீதிமன்றத்தில் வழக்குகளை  அதிகரிக்கும். இது போல பல குற்றங்கள் கூடும் பாகப் பிரிவினை, உயில் மற்றும் பொது அதிகார ஆவணம் உள்ளிட்ட பல அதிகரிக்கும் இதனால் நில மோசடி செய்யும் நபர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், இந்த உத்தரவு உச்சநீதிமன்றத்தில் சவால் செய்யப்பட வேண்டும் என்பதே இங்கு பொது நீதி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...