முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீமானின் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி உயர்நீதிமன்ற நீதிபதி வினா.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி ?என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.


தனக்கு எதிராக விஜயலட்சுமி பதிவு செய்த பாலியல் பலாத்கார வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது காவல் துறை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. மேலும் சீமானின் மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு விஜயலட்சுமிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி நீதிபதி இளங்திரையன் முன்வந்த போது "இந்த வழக்கு இத்தனை ஆண்டுகளாக நிலுவையிலிருப்பது ஏன்" என நீதிபதி, காவல் துறையிடம் கேள்வி எழுபபினார்.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் முகிலன், இது 376 சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு என தெரிவித்த நிலையில் இந்த வழக்கில் சீமான் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்பதால் வழக்கை ஒத்தி வைக்கும் படி கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து சீமான் வழக்கு இரண்டு நாட்கள் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர், ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி அளித்த புகாரை அவரே வாபஸ் பெற்றுக் கொண்டார். மேலும் 2023 ஆம் ஆண்டு கொடுத்த புகாரையும் அவர் திரும்பப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார்.எனவே யாருடைய தூண்டுதலின் பேரிலோ கொடுக்கபட்ட புகார் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.  காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2008 ஆம் ஆண்டு மதுரையிலுள்ள கோவிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.




மேலும், 2008 ஆம் ஆண்டு முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்திருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார் என்பதால், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் அரசுத் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.



இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விஜயலட்சுமி, சீமானின் முதல் மனைவியா? எனக் கேள்வி எழுப்பினார். மேலும் பாலியல் பலாத்கார வழக்கை விஜயலட்சுமி திரும்பப் பெற்றாலும் இது பாலியல் வன்கொடுமை வழக்கு என்பதால் இதை விசாரிக்காமல் விட முடியாது என நீதிபதி தெரிவித்தார். விரிவான விபரம் வருமாறு:-சென்னை உயர்நீதிமன்றத்தில் CRL OP 21670/2023 சீமான் vs காவல் ஆய்வாளர் மற்றும் விஜயலட்சுமி. வழக்கில் வழக்கறிஞர் M/S எஸ்.சேவியர் ஃபெலிக்ஸ், எஸ்.சங்கர், எஸ்.ரூபன், எம்.அஹமத் ஃபாசில், ஜே.ரஞ்சித் குமார், டி.எஸ்.விக்னேஷ்வரன் ஆஜரான நிலையில் 


பிரதிவாதி 1-க்கான அரசு பொது வழக்கறிஞர் ஆஜரான நிலையில் அதன் உள் இடைக்கால மனுவாக 

CRL MP 14988/2023 ல் சீமான் தரப்பில் ஆஜராகி வாதாடினார்கள்.  நடிகர் சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா? அல்லது கயல்விழியா – சென்னை உயர் நீதிமன்றம் வினா ?


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகர் மற்றும் இயக்குனருமான சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை மீதான முதல் தகவல் அறிக்கையை இரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவு இது பொய் வழக்கு எனக்கூறி நடிகர் சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமான் என்ற சைமன் செபஸ்தியான் நடிகை விஜயலட்சுமியை.                                                                -விளம்பரம்-

                         -விளம்பரம்-

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல்நிலையத்தில்  அளித்திருந்த.

புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததில், கடந்த 2011 ஆம் ஆண்டு அளித்த புகாரை 2012 ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், காவல் துறை வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பிறகு வழக்கு பட்டியலிடப்பட்வில்லை.


இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது நடிகர் சீமான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான்சத்தியன் ஆஜராகி, ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு வழங்கிய புகாரை திரும்ப பெற்றுக் கொண்டதாகவும், பின்னர் 2023 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்ட புகாரையும் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். தூண்டுதலின் பேரில் தான் இந்த புகார் கொடுக்கப்பட்டதாகும் எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.


இதற்கு காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், இந்த வழக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு என்றும் ஏற்கனவே இது குறித்து நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும் அதை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார். காவல்துறையிடம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும் படி நடிகை விஜயலட்சுமி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருவருக்கும் தொடர்பு இருந்ததாகவும், ஆனால் 2011 ஆம் ஆண்டு தான் இந்த விவகாரம் வெளிவந்ததாகவும் வாதிட்டார். மேலும் 2008 ஆம் ஆண்டு மதுரை கோவிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாகவும், அப்போது முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் தொடர்பில் இருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாகப் பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது எனவும் வழக்கறிஞர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எதற்காக வழக்கை திரும்ப பெற்றார்? வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தார் கூறினாலும் காவல்துறை பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார். சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது என்று கூறிய நீதிபதி, சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விஜயலட்சுமி  திரைப்பட நடிகை பெரும்பான்மையாக கன்னட மொழிப் படங்களில் நடித்து சில தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன்  திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.சுமார் 40 திரைப்படங்களில் தற்போது வரை நடித்துள்ளார். சுமார் 25 கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நாகமண்டலா எனும் திரைப்படத்தில் முதல்முறையாக நடித்தார்.தற்போது சென்னையில் வசிக்கிறார். சென்னையில் கல்வி பயின்றார். 2006 ஆம் ஆண்டில் அதிக தூக்க மாத்திரைகளை போட்டு தற்கொலைக்கு முயன்றார். இயக்குநர் சீமான், இவரை திருமணம் செய்ததை மறைத்து காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் டாக்டர் கா.காளிமுத்துவின் இரண்டாம் மனைவி மனோகரி டீச்சர் மகளான கயல்விழியை திருமணம் செய்து இவரை ஏமாற்றிவிட்டதாக  தற்கொலைக்கு முயன்றார்  நவம்பர் 2016 ல் நடிகர் ஸ்ருஜன் லோகேஷ் என்பவருடன் திருமண உறுதி செய்யப் போவதாக அறிவிப்பு ஒன்றினையும் வெளியிட்டார். மூன்று வருட உறவுநிலைக்குப் பிறகு மார்ச், 2017 ல் திருமணம் நடைபெற இருப்பதாகத் தெரிவித்தார்.பின் சில காரணங்களால் திருமணம் நடைபெறவில்லை.


இந்த நிலையில் சீமான் இன்று பிப்ரவரி 19- ஆம் தேதி திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்திலும் சென்னை நீதிமன்றத்திலும் நேரில் ஆஜராக வேண்டிய நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறார். திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சீமான் கண்டிப்பாக ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது; அதேபோல நடிகை விஜயலட்சுமி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி மாதம் 19- ஆம் தேதி தீர்ப்பளிக்க இருப்பதால் சீமான் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...